ஆம்.. நண்பர்களே.. !
சிங்கையிலிருந்து பாரி.அரசு சென்னைக்கு வருகிறார். பதிவர்களை சந்திக்கும் ஆர்வம் இருப்பதாக சொன்னதால் இந்த ஏற்பாடு! இதில் நண்பர் பரிசல்காரன் ‘கிருஷ்ணா’வும் கலந்துகொள்வதாக சொல்லி இருக்கிறார்.
இந்த இரண்டு பதிவர்களோடு, பழகிய முகங்களையும் பார்த்து.. மொக்கை போட ஓர் வாய்ப்பு.
இடம்: வழக்கமான மெரினா காந்திசிலை அருகில்.
நாள்: சனிக்கிழமை 15 நவம்பர் 2008
நேரம்: 5.30 முதல் 7. 30 வரை.
தொடர்புகொள்வதற்கு..
உங்களுக்கு உதவ மூன்று மாமன்னர்கள் தயாராக இருக்கிறார்கள். விபரங்களுக்கு.. தம்பி அதிஷா-வின் பதிவைப் பார்க்கவும்.
————–
நினைவுக்கு:- மழைக்காலமாக இருப்பதால்.. பதிவர்கள் குடை, ரெயின் கோர்ட் போன்ற தற்காப்பு ஆயுதங்களுடன் வரவும்.
Popularity: 1% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
பொன்ஸ்
//மழைக்காலமாக இருப்பதால்.. பதிவர்கள் குடை, ரெயின் கோர்ட் போன்ற தற்காப்பு ஆயுதங்களுடன் வரவும்.//
புரிஞ்சிடுக்சு தல…
பாபா அண்ணா,
புதுமாப்பிள்ளை பாரி.அரசுவ நல்லா கவனிச்சு அனுப்புங்க.
அப்ப பெரிய கோர்ட் சீனெல்லாம் இருக்கெண்டு சொல்லுங்கோ…:)
வணக்கம் சக்கரவர்த்தி
உள்ளேன் ஐயா
தலைவா..
மொத தடவ உங்களுக்காகவே வந்தப்ப உங்களைப் பார்க்க முடியல. இப்போ நீங்களே எனக்காக பதிவு போட்டிருக்கீங்க. கலக்கீடுவோம்.
அண்ணாத்தே ஆடுறார்
ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கைதான்
ஒத்துக்கோ ஒத்துக்கோ…
சிச்சுவேஷன் சாங்.. ரொம்பநாள் கழித்து நீங்கள் பதிவர் சந்திப்பு அழைப்பு விடுத்திருப்பதால்…
தல,
ஏன் இப்பல்லாம் சந்திப்பை ஞாயிறிலிருந்து சனிக்கு மாற்றி விட்டீர்கள்?! இந்த முறை கலந்து கொள்ள முயல்கிறேன்.
சந்திப்பு சிறப்பே நடந்தேற வாழ்த்து(க்)கள்
புகைப் படங்களை வெளியிட்டால் என்னை போல் வெளீயூரில் உள்ளவர்கள் பார்த்து மகிழ்வோம்
எங்கள் கொங்கு மண்டல போர்ப்படைத் தளபதி பரிசல்காரனை அனுப்புறோம் ‘தல’.
நல்லா ‘கவனிச்சு’ அனுப்புங்க