April 18th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

1. இன்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் ஏற்படுமாமே?

கண்டிப்பாக. ஏனெனில், அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.
பக்கம் 28. குமுதம் 23.04.2008 அரசுபதில்கள் பகுதியில்..

2. இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக்கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள்,வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்து விட்டார்கள். பத்திரிக்கைகளில் கைகுட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள்.

-மேற்கண்ட அதே இதழில் பக்கம் 106ல் சுஜாதாவின் வீடு, கட்டுரையின் முதல் பத்தி.

நண்பர்களே..
குமுதம் இதழில் வெளி வந்திருக்கும் செய்தி குறித்து மேற்கொண்டு சொல்லுவதற்கு ஏதுமில்லை என்று விட்டு விட முடிவதில்லை.

இணையத்தில் வலைப்பதிவுகளின் வருகைக்குப் பின் பத்திரிக்கைகளின் இணையதளங்களுக்கான ஹிட் குறைந்து வருகிறது என்ற எரிச்சல் தான் இப்படி எல்லாம் அவர்களை எழுதத்தூண்டுகிறது என்பதில் ஐயமில்லை.

அதே சமயம் இதனை எழுதியவர்களையும் அறிந்தவன் என்ற முறையில் சொல்லுவதற்கு ஒன்று இருக்கிறது. ‘ச்சீசீ.. இந்த பழம் புளிக்கும்’ என்று நரி சொல்லிய கதை நமக்குத் தெரியும். இவர்களுக்கு பிழைப்பாகிப் போனதால் பத்திரிக்கையில் எழுதி வருகிறார்கள். அவ்வளவே! (முன்பு ஒரு முறை பிரபல பத்திரிக்கையாளரும் எங்கள் வலைப்பதிவருமான ஜி.கௌதம் அவர்கள் கூட சொல்லி இருந்தார். பத்திரிக்கையில் இருப்பவர்களை விட வலைப்பதிவர்கள் படு சுவாரஸ்யமாக எழுதுகிறார்கள், நல்ல ப்ளாட்பார்ம் கிடைத்தால் அடிச்சு ஆட வைக்கலாம் என்று..)

ஒரு வலைப் பதிவர் என்ற முறையில் இவர்களுக்கு நான் விடும் சவாலாக கூட இது இருக்கட்டும். இங்கு பிரபலமான வலைப்பதிவராக சுவைபட இணையத்தில் எழுதிவரும் அனேகருக்கு பத்திரிக்கையில் எழுதிய அனுபவமிருக்காது தான், அதே சமயம் நீங்கள் வேலைபார்க்கும் குமுதம் போன்ற பெரிய பேனரை வைத்துக்கொண்டு எழுதித்தள்ளும் ஆட்கள் அல்ல பதிவர்கள். அந்த குமுதம் போன்ற பெரிய பேனர் இல்லை எனில் உங்களில் எழுத்துக்களை ஒருவரும் சீண்டக்கூட மாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் வலைப்பதிவர் சமூகம் அப்படியல்ல. எந்த பெரிய பேனரும் இல்லாமல் தங்களின் எழுத்துக்களுக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உங்களுக்கு திறமை இருந்தால்.. கைகுட்டை போட்டு இடம் பிடிப்பதை விட்டுவிட்டு, பத்திரிக்கையாளன் அடையாளத்தி துறந்துவிட்டு, எங்களுடன் களத்தில் இறங்குங்கள். அப்புறம் பார்க்கலாம் யாருடைய எழுத்து திறமையானது என்று.

சும்மா… நொண்டி விடுறது அப்புறம் குத்துதே குடையுதேன்னு கத்துறது… இதே பொழப்புப்பா உங்களுக்கு!

குறிப்பு:-

திரு. ஞாநியின் விகடன் ஓ!பக்க கட்டுரையாகட்டும், ஜெமோ அழித்த அந்த இருகட்டுரையாகட்டும், சுஜாதாவின் அயோத்தியாமண்டபமாகட்டும், பத்திரிக்கை உலகில் வந்து பரபரபாகும் முன்னே அது பற்ரிய சர்ச்சையை கிளப்பியது எங்கள் வலைப்பதிவு சமூகம் தான். இவர்கள் பத்திரிக்கையில் எழுதும் பத்திரிக்கையாளர்களாக இல்லாமல் இருக்கலாம். பலர் உங்களை விட கூர்மையான பார்வையுடையவர்கள் தான் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

கடைசியாக ஒன்று:-

வலைப்பதிவர்கள் உங்களைப்போன்று பக்கத்தை நிரப்பவும், பாக்கெட்டையும் நிரப்பவும் எழுதுபவர்கள் அல்ல. தங்களின் எண்ணங்களை அப்படியே பதிவு செய்திட நினைப்பவர்கள் - என்பதையும் உங்களுக்கு நினைவு படுத்து விடும்புகிறேன்.

56 Responses to “வலைப்பதிவர்களின் கவனத்திற்கு:- குமுதம் இதழ் சொல்லுவது சரியா?”

  1. தலை கலக்கல். நேற்று நான் குமுதம் படித்தபோது என்ன என் மனதில் தோன்றியதோ அது இன்று உங்கள் எழுத்து வடிவில்

  2. குமுதம் மீது ஏனிந்த கொலைவெறி? சம்பளப்பாக்கி ஏதாவது இருக்கிறதா? ockey, jokes apart…

    குமுதத்தின் நீண்டகால தொழிற்முறை போட்டியாளரான விகடன் சில காலமாக வலைப்பதிவர்களுக்கு முன்னுரிமை தந்து கட்டுரைகள் வெளியிடுவதும், வலைப்பதிவுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதும் குமுதத்துக்கு எரிச்சலைத் தந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதுவுமில்லாமல் குமுதத்தின் புதிய பார்ட்னரான ஞானி இணையத்தில் டவுசர் அவிழ்க்கப்பட்டு ஓட ஓட விரட்டப்பட்டவர். அவருக்கிருக்கும் இணைய அலர்ஜி குமுதத்துக்கும் தொத்திக் கொண்டிருக்கலாம்.

    குமுதம் எதையாவது உளறி எழுதிவைப்பதும், அதன் பின்னர் டகால்ட்டி அடித்து அதற்கு நேர்மாறான கருத்தினை சொல்வதையும் கடந்த ஐம்பதாண்டுகளாக தமிழ் வாசகர்கள் அவதானித்தே வருகிறார்கள். குமுதத்தில் எழுதப்படுவதை சும்மா டைம் பாஸுக்காக வாசிப்பவர்களே அதிகம். யாரும் அவ்வளவு சீரியஸாக எல்லாம் எடுத்துக் கொள்வதில்லை.

    சுஜாதா கூட ஒரு முறை வலைப்பதிவர்களை பற்றி மட்டமாக விகடனில் எழுதி இருந்ததாக நினைவு :)

  3. பாலபாரதி,
    இன்றுதான் இதைப் படித்தேன்.

    மற்றவர்களச் சீண்டாமல் பதில் எழுத முடியாதா.
    வலைப்பதிவு எழுதுவதால் மனது லேசாகிறது,.
    அது சீரியஸ் பதிவொ,சுயபுராணமோ
    ஏதோ இருக்கட்டும். காசு வாங்காமல்
    நம் மனத்திருப்திக்கக எழுதுகிறோம்.
    என் போன்ற வர்களுக்கு வலைப்பதிவுகள் ஒருவரப்பிரசாதம்.
    தோழிகளைச் சந்திக்கும் இடம்.
    எழுதியதற்கு நன்றிம்மா.

  4. நல்ல நெத்தியடி:-)

    //சும்மா… நொண்டி விடுறது அப்புறம் குத்துதே குடையுதேன்னு கத்துறது… இதே பொழப்புப்பா உங்களுக்கு!
    //

    பிழை திருத்தம்:

    நொண்டி = நோண்டி

    (டீச்சர் வேலையை விடமுடியலைப்பா)

  5. ///வலைப்பதிவர்கள் உங்களைப்போன்று பக்கத்தை நிரப்பவும், பாக்கெட்டையும் நிரப்பவும் எழுதுபவர்கள் அல்ல. தங்களின் எண்ணங்களை அப்படியே பதிவு செய்திட நினைப்பவர்கள் - என்பதையும் உங்களுக்கு நினைவு படுத்து விடும்புகிறேன். ///
    வழிமொழிகிறேன்,….. இப்போது பத்திரிக்கைகளில் மேட்டர் பஞ்சம் வந்து விட்டது. சினிமா செய்திகளும் படங்களும் இணையத்தில் தாராளமாகி விட்டன. வாரப்பத்திரிக்கைகளில் வரும் கதைகள், கவிதைகளை விட பதிவுகளில் அற்புதமாக கிடைக்கின்றன. படித்தவர்கள் பத்திரிக்கைகளை கைவிட ஆரம்பித்து விட்டனர். அதனால் ஏற்ப்பட்ட ஆதங்கம். சமீபத்தில் ஆ.வி.யில் தமிழ்நதியின் பேட்டி கூட திரித்து எழுதப்பட்டது. அவர் உடனடியாக இணையத்தில் அதற்கு தன்னிலை விளக்கம் அளித்த உடன் ஆ.வி.க்கு அவமானமாகப் போய் விட்டது. அவர்களும் வேறு வழி இன்றி தமிழ்நதியின் மறுப்பை தங்களுடைய மறுப்பாக இல்லாமல் ஒப்புக்கு வெளியிட்டனர்.

  6. /////ஒரு வலைப் பதிவர் என்ற முறையில் இவர்களுக்கு நான் விடும் சவாலாக கூட இது இருக்கட்டும். இங்கு பிரபலமான வலைப்பதிவராக சுவைபட இணையத்தில் எழுதிவரும் அனேகருக்கு பத்திரிக்கையில் எழுதிய அனுபவமிருக்காது தான், அதே சமயம் நீங்கள் வேலைபார்க்கும் குமுதம் போன்ற பெரிய பேனரை வைத்துக்கொண்டு எழுதித்தள்ளும் ஆட்கள் அல்ல பதிவர்கள். அந்த குமுதம் போன்ற பெரிய பேனர் இல்லை எனில் உங்களில் எழுத்துக்களை ஒருவரும் சீண்டக்கூட மாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் வலைப்பதிவர் சமூகம் அப்படியல்ல. எந்த பெரிய பேனரும் இல்லாமல் தங்களின் எழுத்துக்களுக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உங்களுக்கு திறமை இருந்தால்.. கைகுட்டை போட்டு இடம் பிடிப்பதை விட்டுவிட்டு, பத்திரிக்கையாளன் அடையாளத்தி துறந்துவிட்டு, எங்களுடன் களத்தில் இறங்குங்கள். அப்புறம் பார்க்கலாம் யாருடைய எழுத்து திறமையானது என்று.////

    இன்றைய தேதிலில் ஆங்கிலத்தில் இருக்கும் வலைப்பூக்கள் 30 லட்சம். அதே அளவு வருவதற்கு அல்லது வளர்வதற்கு நமக்கு நாட்கள் பிடிக்குமென்றாலும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் பதிவுகளின் எண்ணிக்கை 10,000 ஐத் தொடும் எண்பதில் ஐயமில்லை. அப்போது வந்து போகும் வாசகர்களின் எண்ணிக்கையும் இரண்டு லட்சத்தைத் தாண்டி நிற்கும்.

    ஒன்று மில்லை, நமது வலைப் பதிவுத் தலைவர்கள் (உங்களையும் சேர்த்துத்தான்) கூகுள் அட்சென்ஸின் விளம்பரங்களைத் தமிழ்ப் பதிவுகளுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். பிறகு என்ன ஆகிறது என்று பாருங்கள்.

    யார் யாருக்கு (கைக்குட்டை அல்ல) துண்டு போடுகிறார்கள், அதுவும் எங்கே போடுகிறார்கள் என்று அப்போது தெரியும்!

    வாரப்பத்திரிக்கையில் வரும் சினிமா விமர்சனங்களைவிட, நமது மடிப்பாக்கம் நியூஸ் ஏஜென்சி போன்றவர்கள் எழுதும் திரை விமர்சனங்கள்
    அசத்தலாக இருப்பது மறுக்க முடியாத உண்மை!

  7. //வலைப்பதிவர் சமூகம் அப்படியல்ல. எந்த பெரிய பேனரும் இல்லாமல் தங்களின் எழுத்துக்களுக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்//

    உண்மை. நான் வலைப்பதிவர் இல்லை, ஆனால் பலருடைய வலைப்பதிவை தினமும் படிப்பவன். அப்படி ஓரு போட்டி நடந்தால் தொழில் முறை எழுத்தாளர்களின் டவுசர் லக்கிலுக்கின் அணிகள வார்த்தைகளைப் போல்” டவுசர் கிழிந்து, தாவு தீர்ந்துவிடும்”.

  8. //. இன்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் ஏற்படுமாமே?//

    சரியான கேள்விக்கு ஒரு மட்டமான பதில் தர இவர்களால் தான் முடியும். முதல்ல இந்த ‘கேள்வி பதில்’ பகுதிகளையே ஒழிக்கனும். ரொம்ப உளற ஆரம்பிச்சுட்டாங்க‌

  9. Your thought is absolutely correct.

    We have a channel (blog) to deploy our thoughts.

    Like that they have a channel (i.e.,) kumudam.

    If they are telling anything wrong about ours, we should not be idle.

    We should fight against them.

    They are getting money even if they are writing junk stories, platform based, dust bin based ideas jokes.

    But we are posting many useful things about Technology, Free softwares, Translated things. (Actually I am doing many technology translation)

    I am getting satisfaction while writing that things.

    But they are doing anything for money.

    But they are the big media. They collected more money for recovery (Maharastra EarthQuake, Tsunami etc.,)

    Our blogger people also doing many social services.

    But One media person should not blame other media person. But they are blaming us.

    So, We should do immediate action against them.

    Atleast we can write posts against them.

    They should feel about it.

    thanks

    TamilNenjam

  10. :) சரியாக எழுதியிருக்கீங்க பாலா.

    சில வாரங்களுக்கு முன்பு நியூஸ்வீக் சஞ்சிகையிலிருந்து அதன் திரைப்பட விமர்சகர் David Ansen ஓய்வு பெற்றார். இவர் 1977இலிருந்து நியூஸ்வீக்கில் விமர்சனம்எழுதிவருபவர். இவரைப்போலவே, வில்லேஜ் வாய்ஸ் இதழிலிருந்து நேத்தன் லீ என்ற விமர்சகரும் விலக்கப்பட்டிருக்கிறார். நியூஸ்டே இதழிலிருந்து இன்னும் இரண்டு விமர்சகர்கள்.

    காரணம்?

    இணையமெங்கும் விரவிக்கிடக்கும்/கிடைக்கும் திரைப்பட விமர்சக வலைப்பதிவுகள்.

    செய்தி:

    http://www.nytimes.com/2008/04/01/movies/01crit.html?_r=1&oref=slogin

    http://www.editorsweblog.org/newspaper/2008/04/ny_film_critics_laid_off_reviews_move_to.php

    -மதி

  11. நச்சுன்னு நெத்தியடி. சரியா சொல்லி இருக்கீங்க. இணையம் இன்னமும் சரியாக எல்லாரையும் சென்று அடையாத வரை தான் இவர்களின் டகால்டி வேலையெல்லாம் செல்லுபடியாகும்.

  12. //இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக்கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள்,வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்து விட்டார்கள். பத்திரிக்கைகளில் கைகுட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள்./7

    ஒரு 15 நிமிடப்புகழுக்காக வலைபப்பதிவு எழுதுபவர்கள் என்ற சுஜாதாவின் குற்றச்சாட்டு சுஜாதாவின் மறைவுக்கு இந்த வலைப்பதிவர்கள் எழுதிய இரங்கலால் அர்த்தமற்றுப்போனதை இந்த புண்ணியவான்கள் கவனிக்கவில்லையா?

    இது பற்றிய பழைய வலைப்பதிவு ஒன்று

  13. ஆய் மதனின் பல பதில்கள் இணையத்திலிருந்து தான் சுடப்படுகின்றது. ஆனால் அவர் தான் இணையம் பயன்படுத்துவதில்லை எனப் பொய் சொல்கின்றார். பத்திரிகைகள் வார இதழ்களுக்கு இப்போ வலைப்பதிவாளர்கள் மேல் காண்டு.

  14. இப்போது எழுத்தாளர்களும் இணைய வலைப்பூக்களிலும், தனி வலைகளிலும் நடமாட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

    பாமரன், எஸ்.ராமகிருஸ்ணன், சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் இங்கே நமது வலைப்பூமியில் நடமாடுவதே சாட்சி.

    குங்குமம் இதழில் வலைப்பூக்களில் இருந்து சுட்டது என நிறையப் பிரசுரித்து இருக்கிறார்கள்.

    சொல்லப்போனால் நாம்தான் அவர்களுக்கு நிறைய சரக்கையும் / தீனியையும் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.

    மதன் சொல்லுவதுபோல் அவரால் இணையத்தைக் கலந்து ஆலோசிக்காமல் பதில்கள் எழுதுவது என்பது டுபாக்கூர்.

    எத்தனையோ நுனிப்புல் மேய்பவர்கள் கூட இப்போது இணையத்தில் ஆலோசிக்கிறார்கள். இவர்கள் பேச்சு வெறும் கூச்சல்.

  15. //வலைப்பதிவர் சமூகம் அப்படியல்ல. எந்த பெரிய பேனரும் இல்லாமல் தங்களின் எழுத்துக்களுக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உங்களுக்கு திறமை இருந்தால்.. கைகுட்டை போட்டு இடம் பிடிப்பதை விட்டுவிட்டு, பத்திரிக்கையாளன் அடையாளத்தி துறந்துவிட்டு, எங்களுடன் களத்தில் இறங்குங்கள். அப்புறம் பார்க்கலாம் யாருடைய எழுத்து திறமையானது என்று.//

    நச்… நச்… நச்…. கலக்கிட்டீங்க தல.. :))

  16. ///வலைப்பதிவர் சமூகம் அப்படியல்ல. எந்த பெரிய பேனரும் இல்லாமல் தங்களின் எழுத்துக்களுக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்//

    உண்மை. நான் வலைப்பதிவர் இல்லை, ஆனால் பலருடைய வலைப்பதிவை தினமும் படிப்பவன். அப்படி ஓரு போட்டி நடந்தால் தொழில் முறை எழுத்தாளர்களின் டவுசர் லக்கிலுக்கின் அணிகள வார்த்தைகளைப் போல்” டவுசர் கிழிந்து, தாவு தீர்ந்துவிடும்”.//

    உண்மை.. இல்லையென்றால் எங்கள் லக்கிலுக்காலேயே அவர்களின் எழுத்தின் டவுசர் கிழித்து, தாவு தீர வைக்கப்படும்.

  17. //துளசி கோபால் on 18 Apr 2008 at 10:48 am #

    நல்ல நெத்தியடி:-)

    //சும்மா… நொண்டி விடுறது அப்புறம் குத்துதே குடையுதேன்னு கத்துறது… இதே பொழப்புப்பா உங்களுக்கு!
    //

    பிழை திருத்தம்:

    நொண்டி = நோண்டி

    (டீச்சர் வேலையை விடமுடியலைப்பா)//

    டீச்சர்… :))

    ஒரு வேள தல சரியா எழுதியிருக்குமோ…

    நொண்டி - ஆட்டம் (ஒரு வகை விளையாட்டு.)

    நம்மளையும் ஆட்டைக்கு கூப்புடுறாங்களோ என்னமோ…. :))

  18. ஒன்று : குமுதம் இதழில் வரும் செய்திகள் கேள்வி பதில்களுக்கெல்லாம் மறுப்போ பதிலோ எழுதத் துவங்கினால் அது அனுமர் வால் போல நீண்டு கொண்டே போகும்.

    இரண்டு : தான் அடுத்த மாதம் எழுத வேண்டும் எனும் தகவல்களை இணையத்தில் அடுத்த வினாடியே போட்டு தங்கள் பிழைப்பில் மண்ணைப் போடுகிறார்களே என்னும் எரிச்சல். நடுப்பக்கப் படங்களை வைத்து பணம் பண்ணும் காலம் இணையத்தால் மலையேறிப் போச்சே என்னும் நியாயமான :) கடுப்பு

    மூன்று : இணையத்தில் வரும் ஆழமான அலசல் கட்டுரைகள் போன்ற எதையுமே குமுதம் இதழில் காண முடியாதது. இயலாமையின் ஆதங்கம்.

    நான்கு : ஆ..ஊ என்றாலே உடனே தன்னைப் பற்றி விமர்சிக்கிறார்களே இணையத்தினர் ஏனும் ஆத்மார்த்தமான ஆத்திரம். பத்திரிகைகளுக்கிடையே இருக்கும் மறைமுக சாதீய கைகுலுக்கலைக் கூட இணையத்தினர் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறார்களே என்னும் எனும் தார்மீகக் :) கோபம்.

    ஐந்து : இணையம் வைத்துக் காசுபார்க்கலாம் என நினைத்தால் யாரும் தன்னைச் சீண்டவில்லையே எனும் சர்வ அங்க சலிப்பு.

    விட்டுத் தள்ளுங்க பாலா…
    நீங்கள் எதிர்க்க நினைப்பவர்கள் முதலில் அதற்குரிய தகுதியை வளர்த்துக் கொள்ளட்டும்.

  19. //வலைப்பதிவர்கள் உங்களைப்போன்று பக்கத்தை நிரப்பவும், பாக்கெட்டையும் நிரப்பவும் எழுதுபவர்கள் அல்ல. தங்களின் எண்ணங்களை அப்படியே பதிவு செய்திட நினைப்பவர்கள் //

    வெல் செட் பா.பா கைக்குட்டை போட்டு இடம் பிடிக்கும் தேவை நமக்கில்லை.அது பணம் பண்ண நினைப்போரின் வேலையாக இருக்கலாம்.எல்லையற்ற சுதந்திரம் தரும் வலையில் த்த்தம் எண்ணங்களை எழுத மட்டுமே பதிவர்கள் விரும்புகின்ற்னர்.அது பொறுக்க முடியாதவர்கள் தான் உண்மையிலேயே மன நோயாளிகள்.

  20. உண்மைதான்,

    ஆனந்த விகடனின் தீவிர வாசகனாகிய நான் (குமுதத்தை தபால்காரன் இலவசமா ஒவ்வொரு வீட்டில கொண்டுவந்து போட்டாலும், தபால்காரனுக்கு சொல்லி தேவைப்பாட்டால் கடும்வார்த்தைகளால் பேசி அதனைப் போடவேண்டாம் என்று சொல்வேனே தவிர தொட்டும் பார்க்கமாட்டேன். ஒரு காலத்தில் நான் குமுதத்தின் வாசகனும் கூட ஆனால் அதன் உள்ளடக்கங்கள் பணத்திற்காகவே எழுதப்படுவதை உணர்ந்து..) இப்போது ஆ.வியினையும் குறைத்து விட்டேன்.

    ஆ.வி போன்ற புத்தகங்களில் இல்லாத வலைப்பதிவுகளில் உள்ள சுதந்திரத்தன்மை என்னவென்றால், நமக்கு ஏற்றதை வாசிக்கலாம், விடலாம். புத்தகங்களை காசுக்கு அழுதுவிட்டோமே என்பதால் அனைத்தையும் வாசிக்கவேண்டியுள்ளது. வலைப்பதிவுகளுக்கு திரட்டிகள் தங்கள் சிறந்த சேவைகளைச் செய்யவதால் நல்ல இடுகைகளை, எம்முடன் தொடர்புபட்ட இடுகைகளை வாசிக்க முடிகிறது.

    பின்னூட்டங்களுக்கு உடனடியான எதிர்வினைகள் ஏதோ ஒரு வகையில் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன.

    தவறான இடுகைகளுக்கு உடனடியாக பதில் இடுகைகள் வருவதால் தவறான செய்திகள் வந்து பின்னர் அடுத்த புத்தகத்தில் அதன் மறுமொழிச் செய்திகள் வருவது போன்ற சந்தர்ப்பங்கள் இஙகு இல்லை.

    வலைப்பதிவுகளின் சிறப்புத்தன்மை பற்றி எவ்வளவோ கதைக்கலாம். அதனால்தான் குமுதம், ஆ.வி போன்றன வலைப்பதிவுகளின் பக்கம் சிறிது தங்கள் கவனத்தை செலுத்த ஆரமபித்துவிட்டன.

    ஆபாசக் கருத்துக்களாலும் செய்திகளாலும், பரபரப்பை ஏற்படுத்த வேண்டுமென்று தேவையில்லாத செய்திகளாலும் தங்கள் வியாபாரத்தைக் கூட்ட நினைக்கும் ஒரு கேவலங்கெட்ட இதழான குமுதத்திற்கு இவ்வாறு சொல்வதற்குத் தகுதி உளளதென்றே நினைக்கிறேன். ஏனெனில் அதன் எழுத்தாளர்களும் அதன் வழி உள்ளவர்களே.

  21. ////சேவியர்
    தான் அடுத்த மாதம் எழுத வேண்டும் எனும் தகவல்களை இணையத்தில் அடுத்த வினாடியே போட்டு தங்கள் பிழைப்பில் மண்ணைப் போடுகிறார்களே என்னும் எரிச்சல். ////
    சரியான அடி…. அவர்கள் அச்சில் ஏற்றுவதற்கு முன் ஒருமுறை இணையத்தில் யாராவது எழுதி விட்டார்களா எனப் பார்த்துவிட்டு அச்சில் ஏற்றக் கூடிய காலம் வந்து கொண்டே இருக்கிறது.

  22. //சரியான அடி…. அவர்கள் அச்சில் ஏற்றுவதற்கு முன் ஒருமுறை இணையத்தில் யாராவது எழுதி விட்டார்களா எனப் பார்த்துவிட்டு அச்சில் ஏற்றக் கூடிய காலம் வந்து கொண்டே இருக்கிறது.//

    தல… எழுதிவிட்டு பார்க்கும் காலம் எல்லாம் வராது. இங்கு பார்த்து எழுதும் காலம் வந்து பல நாட்களாச்சு. நம்மவர்களின் கருத்தை சுட்டு தங்களின் பத்திரிக்கைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றி போட்டுவருவது கண்கூடு! :))

  23. என்னுடைய ஒரு பதிவின் முக்கால்வாசி பகுதி குமுதத்தில் வந்திருந்தது.. நான் தற்செயலாக வாசிக்க நேர்ந்தது இதென்ன என் எழுத்துபோலவே இருக்கிறதே என்று பார்த்தால் கீழே முத்துலெட்சுமி என்று இருந்தது.. (நான் வழக்கமாக பின் பக்கத்திலிருந்து புரட்டி படிப்பேன்) முன்பக்கத்தில் இருந்த வலைப்பதிவுகளின் அறிமுகம் பற்றிய பாராவைப் படித்து நொந்து போனேன்..

    புத்தகங்களில் எழுத முடியாதவர்கள் தளங்கள் தொடங்கி அங்கே மனதில் தோன்றுபவற்றை எழுதிக்குவித்துவைத்திருக்கிறார்கள் என்று பொருள் படி இருந்தது இப்போது சரியான வார்த்தை நியாபகம் இல்லை.. ஆனால் வலைப்பதிவில் எழுதுவதை பற்றி மிக குறைவான மதிப்பீட்டில் இருந்தது..

    என் பதிவின் கூடவே மற்றும் இரண்டு பதிவுகளின் சாராம்சம் இருந்தது.. ஒன்று உண்மை என்பவருடையது என்றூ பெய்ரிட்டு இருந்தது..அதை கூகிள் செய்ததில் அது சந்திப்பு என்னும் பதிவருடையது.. பெயரும் தப்பு .. அவரின் பதிவில் பினூட்டமாக சொன்னேன்.. அவர் மிகக்கொபம் கொண்டு குமுதத்திற்கு எழுதினார்.. அவரின் பதிவின் சாராம்சத்தை அவர்கள் எடிட் செய்து வீணடித்துவிட்டதாக..பதிலில்லை.. நானும் ஏன் இணையமுகவரி தரவில்லை என்று அனுப்பிய மெயிலுக்கு பதில் இல்லை..

    :(

  24. வழக்கமான தகுதி அரசியல் தான் காரணம், யார் வேண்டுமானாலும் எழுதலாமா ? அதற்கு என்ன தகுதி ? என்பதை குமுதம் வாசகர்கள் மனதில் ஏற்ற அவ்வாறு குமுதம் எழுதி இருக்கிறது.

    இவர்கள் போடுவதுதான் செய்தி, கட்டுரை, சிறுகதை என்று வரைமுறை வைக்க முயற்சிக்கிறார்கள். அது உடைப்பட்டு போவதால் வரும் எரிச்சல் தான் அவர்களுக்கு.

  25. இணையம் என்றல்ல; தொடர்ந்து குமுதம் போன்றவை மாத்திரமே படிப்பதாலும் மனநோய் வர வாய்ப்புண்டு.

  26. பாலா - வலைப்பதிவுகளின் பெருக்கத்தால் தொல்லூடக நிறுவனங்களின் இணையத்தளங்களுக்கு எந்த அளவுக்கு வருகை குறைந்திருக்கிறது? ஊடகத் துறையில் புழங்குபவர் என்ற வகையில், இது குறித்த அவர்களின் எண்ணங்கள், புலம்பல்கள் பற்றி நீங்கள் கேட்டது, அறிந்ததைத் தெளிவாகச் சொல்ல முடியுமா? எனக்கென்னவோ, தமிழ் இணையப் பயனர்கள் பெருகப் பெருக தொல்லூடக இணையத்தளங்களுக்கும் வருகைகள் குறையாமல் இருக்கும் என்றே தோன்றுகிறது. உள்ளடக்கத்துக்காக இல்லாவிட்டாலும் அவற்றின் brand மதிப்பு காரணமாக எட்டிப் பார்ப்போர் இருப்பர். இல்லாவிட்டால், எவ்வாறு விகடனால் இணையத்திலும் கட்டணச் சேவை தந்து தாக்குப் பிடிக்க முடிகிறது?

    தொல்லூடகங்கள் நம்மை தாழ்வாக நோக்குவது ஒரு புறம், இன்னும் பல வலைப்பதிவர்களே கூட (முன்பு நானும்) அவற்றை உயர்வாக நோக்குவதும் ஒரு புறம் இருக்கிறது அல்லவா? தினமலர், விகடனில் தங்கள் வலைப்பதிவு வந்ததற்காக தனி இடுகையே போட்டு மகிழ்வோர் எத்தனை பேர்? தொல்லூடக எழுத்தாளர்கள் ஒரு மறுமொழி இட்டாலும் அதற்காக தனி இடுகை போடுவோரும் இருக்கிறார்கள் தானே? தன்னுடைய வலைப்பதிவு தாண்டி பூங்கா, தமிழோவியம், திண்ணை என்று பிற நிறுவனப்படுத்தப்பட்ட இணைய இதழ்களில் படைப்புகள் வெளிவந்தாலும் கூட அகமகிழ்ந்து சொல்வோர் இருக்கிறார்கள் தானே? தன்னுடைய தனித்துவத்துக்காக வலைப்பதிவது போக, அதையும் தாண்டிய ஏற்பு, வீச்சுக்காக பல வலைப்பதிவர்களும் இயங்கத் தான் செய்கிறார்கள். திரைப்படத்துறையை விமர்சித்துக் கொண்டே அவற்றில் எழுத முற்படும் இலக்கியவாதிகள் போல, தொல்லூடகங்களை விமர்சித்துக் கொண்டே அவற்றில் எழுத ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று நினைப்போரும் உளர் தானே?

    வலைப்பதிவுகளின் சுதந்திரத்தை விவரிக்கையில் கூட, “பத்திரிக்கைக்கு எழுதி வருமா என்று காத்திருக்கத் தேவையில்லை, இங்கு உடனே பதிப்பிக்கலாம்” என்ற ரீதியில் தொல்லூடகங்களை ஒப்பிட்டே நாம் வலைப்பதிவுகளுக்கான அறிமுகத்தைத் தருவது தெரிந்தோ தெரியாமலோ வலைப்பதிவுகளை நோக்கிய குறைவான எண்ணங்களுக்கு வித்திடலாம்.

  27. கேள்வி: இண்ட்நெட்டுக்கு அடிமையானால் மன்நோய் ஏற்படுமா?

    கேள்வி கேட்டவர் சரியாகத்தான் கேட்டிருக்கிறார்.

    இண்டர்நெட்டில் வலைபதிவும் அதாவது blog அடங்கும் அதை தவிர மேலும் பல (பலான) சமாச்சாரங்களும் இருக்கிறது. ஒருவிததில் மனநோய் ஏற்பட சாத்தியமிருக்கிறது.

    ஆனால் பதிலில்தான் இந்த கேள்வியை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் எனபது புரிகிறது.

    லக்கிலுக் சுஜாதா சொன்னது : வலைபதிவு என்பது just ego-trip என்று. அன்னிக்கு அவரு ரொம்ப கொடுமையான ஒரு பதிவ ஏதாவது படிச்சிட்டு கடுப்புல சொல்லியிருப்பாருன்னு தோணுது.

    எனக்கு வலைபதிவெழுதுவது என்பது ஒரு சாதனம் (tool) போன்று தோண்றுகிறது. இதை உபயோகிக்க தெரிந்தது பொருத்து அது நல்லதா இல்லை waste of timeஆ என்று சொல்ல முடியும். சிலருக்கு இது வெட்டி வேலை இல்லை பைத்தியகாரத்தனம் என தோண்றும். ஆனால் என்னை பொருத்த வரை வலைபதிவெழுதுவது, நட்பு, நான் சிந்திப்பது சரிதானா என்று என்னையே சோதித்துக்கொள்ள ஒரு வாய்ப்பு, இல்லை ஒத்த கருத்து, இல்லை குணமுடையவர்கள் இணைவதற்கான சந்தர்ப்பம், இல்லை ஒரு பொழுதுபோக்காகவே போன்ற காரணங்களுக்காக.

    மனிதன் சிந்திப்பதை நிறுத்த முடியுமா? எப்போது வலை தோண்றி விரிந்ததோ அப்போதே மனிதனின் மனமும் அதனுடன் இணைக்கப்பட்டுவிட்டது. வலைப்பதிவு அதன் வெளிப்பாடு. இதில் மனநோய் ஏற்பட வாய்ப்பு எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்து யாராவது சொன்னால் குமுத்தின் சர்குலேஷனை அதிகரிக்க அவரை குமுதத்தின் கெளரவ ஆசிரியராக நியமிக்க வாய்ப்பிருக்கிறது.

  28. […] இணையப்பதிவர்கள் மீது குமுதத்திற்கு ஏன் இவ்வளவு காட்டம்? […]

  29. //முத்துலெட்சுமி on 18 Apr 2008 at 1:11 pm #

    என்னுடைய ஒரு பதிவின் முக்கால்வாசி பகுதி குமுதத்தில் வந்திருந்தது.. நான் தற்செயலாக வாசிக்க நேர்ந்தது இதென்ன என் எழுத்துபோலவே இருக்கிறதே என்று பார்த்தால் கீழே முத்துலெட்சுமி என்று இருந்தது.. //

    அடப்பாவிங்களா :(

    உங்க கையெழுத்தோடவா சுட்டுட்டாங்க.. :)

  30. தனியே இருட்டில் செல்லும்பொழுது பாட்டு பாடுவது
    இருட்டை நோக்கி நாய் குரைப்பது…..
    குமுதத்தின் இப்படிப்பட்ட கட்டுரைகள்….
    இவற்றிற்கெல்லாம் காரணம் ஒன்றே.

  31. I agree with you!..

  32. […] புரியலியா இங்கே போய் […]

  33. ஆடிக்கொரு தடவை பூத்தாலும் …
    நல்லாவே பூத்திருக்கு.

  34. romba la…..te aaka rajiniku pidiitha pechalar endru aaraichi katturai eludhi irukkirargal. idhu pala varudam munbe valayil alasi thuvaikkappattadhu.

    kumudham pathirikai nadatha rendu nirubargal , oru editor irundhaal podhum.

    oru nirubar gopalapuram kisukisu

    oru nirubar -kodambakkam kisu kisu.

    Useless magazine. If you see last one year kumudam cover, it is either vijayakanth,sarathkumar,alagiri,rajini or kanimozhi,kalaignar.

  35. அன்பின் ரவி,

    //வலைப்பதிவுகளின் பெருக்கத்தால் தொல்லூடக நிறுவனங்களின் இணையத்தளங்களுக்கு எந்த அளவுக்கு வருகை குறைந்திருக்கிறது? ஊடகத் துறையில் புழங்குபவர் என்ற வகையில், இது குறித்த அவர்களின் எண்ணங்கள், புலம்பல்கள் பற்றி நீங்கள் கேட்டது, அறிந்ததைத் தெளிவாகச் சொல்ல முடியுமா? எனக்கென்னவோ, தமிழ் இணையப் பயனர்கள் பெருகப் பெருக தொல்லூடக இணையத்தளங்களுக்கும் வருகைகள் குறையாமல் இருக்கும் என்றே தோன்றுகிறது. உள்ளடக்கத்துக்காக இல்லாவிட்டாலும் அவற்றின் brand மதிப்பு காரணமாக எட்டிப் பார்ப்போர் இருப்பர். இல்லாவிட்டால், எவ்வாறு விகடனால் இணையத்திலும் கட்டணச் சேவை தந்து தாக்குப் பிடிக்க முடிகிறது?//

    நிச்சயமாக வருகை என்பது குறைந்திருக்கிறது. ஒரு பிரபல வார இதழின் இணைய பக்கத்தை பார்த்துக்கொண்டிருந்த நண்பர் ஒருவர் சொல்லி இருக்கிறார். நீங்கள் சொல்லுவது போல பிராண்ட் நேம்-க்காக வந்து எட்டி பார்ப்போர் தான் அதிகம் என்றாலும், தினமலர், விகடன் போன்ற தளங்கள் படிப்பவரின் கருத்தரியும் இடம் கொண்டு வந்த பின் தான் அத்தளங்களின் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருகிறது. மேலும், பல இதழ்கள் இணையபக்கங்கள் வைத்திருப்பதின் நோக்கமே, பெரிய பெரிய விளம்பர நிறுவனங்களைத் தேடிப் போகும் போது, இது பற்றியும் கூறி பணம் பண்ணூவதற்காகவே தான் இணையதளத்தை மெய்ண்டன் செய்கிறார்கள்.

    //திரைப்படத்துறையை விமர்சித்துக் கொண்டே அவற்றில் எழுத முற்படும் இலக்கியவாதிகள் போல, தொல்லூடகங்களை விமர்சித்துக் கொண்டே அவற்றில் எழுத ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று நினைப்போரும் உளர் தானே?//

    என்ன அளவில் அப்படியான எதிர்பார்ப்புடன் எழுதுகின்ற வலைப்பதிவர்கள் இல்லை. எனக்குத் தெரியாமல் சிலர் இருக்கக்கூடும். நீங்கள் கூறுவது போல திரைப்படத்துறையை விமர்சித்துக் கொண்டே அவற்றில் எழுத முற்படும் இலக்கியவாதிகள் எண்ணிக்கையில் குறைவே.. அவர்களும் கூட.. தங்களின் செயல்பாட்டில் உடனடியாக அந்தர்பல்டி அடிப்பவர்களாகவே இருக்கிறார்கள். இன்றைய நிலையில் குறும்படம் எடுத்து அதை விசிடிங்கார்டாக பயன்படுத்தி, திரைப்படத்துறைக்குள் நுழைபவர்கள் தான் அதிகம். ஆனால்.. வலைப்பதிவுகளைப் படித்து பதிவர்களின் எழுத்து திறமையை கண்டு வியந்து, பதிவர்களை பயன்படுத்திக்கொண்ட பத்திரிக்கைகள் அதிகம்.

    மேலும் தங்களின் கேள்விகள் குறித்தும் எழுதும் போது நினைவு வந்தது. ஆனாலும் ரவி ஒன்றை இங்கே குறிப்பிட்டு சொல்லுவது சரியானதாக இருக்கும். வாராந்திரிகளில் வரும் செய்திகளில் இருந்து நம் வலைப்பதிவுகள் மாறுபட்டு இருப்பது பேட்டி என்ற சமாச்சாரத்தில் தான். (அதைக்கூட வேறு வடிவில் இங்கே பத்ரி போன்றோர் கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்) மற்றபடி நம் வலைப்பதிவுகளில் அவர்கள் தொடர்ந்து போட்டு வரும் அனைத்து வகையான எழுத்துக்களும் இங்கும் கிடைக்கின்றன. ஜோக், தொடர்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், கதை, கட்டுரை, அரசியல், சினிமா என சகல விசயங்களையுமே நம்மவர்கள் எழுதும்/எழுதி வரும் திறனாளர்கள் தான்.

    அதே சமயம் குமுதம் போன்ற பத்திரிக்கைகளும், சுஜாதா போன்றவர்களும் இணைய எழுத்தை கேவலமாக பார்ப்பதற்கு காரணம் இல்லாமலில்லை. அவர்கள் எடுக்குமிடம் நமக்கு தெரிந்திருக்கிறது. :)) அந்த பயம் காரணமாகவே நம்மைக்கண்டு இவர்கள் நடுங்குகிறார்கள். பத்திரிக்கை படிக்கும் மிச்ச சொச்ச வாசகர்களிடம் இணையம் குறித்து தொடர்ந்து அச்சம் ஏற்படுத்தும் வேலையை செய்து வருகிறார்கள்.

    இணையம் போன்றவை பரவலாகும்/பிரபலமாகும் முன்பிருந்தே.. சரோஜாதேவி கதைகளும், புஷ்பா தங்கத்துரை, சுஜாதா போன்றோர் ஏராளமாக எழுதி வந்திருக்கின்றார்கள். அப்போதெல்லாம் இது பற்றி இந்த வாராந்திரிகள் செய்தி பண்ணி இருக்கிறதா? இப்போதும் கூட.. கயல்விழி, சிம்ரன், அத்தை, மல்கோவா மாமி என்று ஏகப்பட்ட தலைப்புகளில் காமக்கதைகள் அச்சில் விற்பனையாகி வருகின்றன. இது இவர்களுக்கு தெரியாதா? அது பற்றி பக்கம், பக்கமாய் எழுதி.. தமிழில் இதழ்களையே படிக்காதீர். இன்னும் சொல்லப்போனால் தமிழிலேயே படிக்காதீர் என்ற ரேஞ்சுக்கு இறங்க வேண்டியது தானே!

    சுஜாதா ஆசிரியராக இருந்த போது தான் இந்த குமுதத்தின் வண்ணம் மாறியது. அதுவும் என்ன வண்ணத்தில் தெரியுமா.. நீலம்,பச்சை,சிகப்பு கலந்த வண்ணம். ஆபாசங்களை அள்ளித்தெளிக்கும் வழமை அப்போதிருந்து தொடங்கியது.

    தொடக்கத்திலிருந்து தொடர்ந்து 15 வரிகளில் ஆபாசமாக எழுதிவிட்டு கடைசி வரில் அறிவுரை சொல்லும் ஒருபக்க சிறுகதைகளும் அப்போது தான் தொடங்கின. இன்றும் கூட குமுதம் இளைஞர்களை கவர்வது தான் நோக்கம் என்ற நிலையில் தான் சீன் புத்தகமாக வலம் வந்துகொண்டிருக்கிறது.

    சரி விடுங்கள்… நான் டிட்ராக் மாறி போகிறேன்!

    இணையத்தில் எழுதத்தொடங்கிய பின் பல பதிவர்களை சந்தித்து நான் கேட்ட கேள்வி, ‘பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பி இருக்கிறீர்களா?’ என்பதுதான். சொல்லி வைத்தது போல பலரிடமும் கேட்ட பதில் கேள்வி வியப்பானது, ‘அப்படி எழுதி அனுப்பினா போடுவாங்களா?’

    இங்கே பலருக்கு பத்திரிக்கை படிக்கும் பழக்கம் இருக்கிறதே தவிர, எப்படி ஒரு படைப்பை எழுதவேண்டும். அதை எப்படி அனுப்ப வேண்டும் என்ற தகவல் அறியாதவர்கள் தான் அதிகம். வலைப்பதிவர்களில் பத்திரிக்கைக்கு என்று ஒருமுறை கூட எதையுமே எழுதி அனுப்பாதவர்கள் (அனுப்ப முயலாதவர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்) தான் அதிகம். நிலை அப்படி இருக்க.. வந்தவன் போனவன் எல்லாம் வலைப்பதிவர்களையும் இணையத்தில் எழுதுகிறவனையும் பைத்தியம் அல்லது மனநிலை பிறழ்ந்தவன் என்ற ரேஞ்சுக்கு சொல்லுவது பொறுக்காமல் தான் இந்த பதிவு எழுத வேண்டியதாகிவிட்டது.

    ”இந்த பாரத்தில்(16பக்கம் என்பது ஒரு பாரம்) அரைபக்கம் இடமிருக்கு, இதுல ரெண்டு பக்கம் இடமிருக்கு ஏதாவது எழுதிக்கொடுங்க..” என்று பத்திரிக்கை அலுவலகத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு இடத்தை நிரப்ப எழுதுகிறவர்கள் இல்லை வலைப்பதிவர்கள். தங்களுக்கு தேன்றியதை அப்படியே எழுதுகின்றவர்கள்.

    வலைப்பதிவர்களின் எழுத்துக்கள் எல்லாம் வாரந்தரிகள் மாதிரியான வணிக எழுத்துக்கள் அல்ல. இவை அனுபவத்தில் விளைந்தவை. என்னதான் வாராந்திரிகளைப் படித்தாலும் அது போல எழுதாமல்.. தங்களுக்கென்று சில அடையாளங்களோடு தான் பதிவர்கள் எழுதிவருகிறார்கள்.

    நம்முடைய எழுத்துக்களை அவர்கள் எடுத்துப்போட்டு நம்மை அடையாளப்படுத்துவது என்பது கூட வணிக நோக்கில் தான். (கற்றதும் பெற்றதும் தொடரில் கவிதைகளை அடையாளப்படுத்தியது உட்பட..)

    பதிவர்கள், அவர்தன் நண்பர்கள், உறவினர்கள் என்று பலரும் தங்களுக்கு வேண்டப்பட்டவரைப் பற்றி செய்தி வந்தால் இதழ் கூடுதலாக விற்பனை ஆகும் என்ற வணிகநோக்கு தான். அடுத்ததாக மேலே சொன்னது மாதிரி.. இடப்பற்றாக்குறையை போக்குவதற்கு இந்த வலைப்பதிவுகள் ஒரு காரணமாக இருக்கின்றன என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

    மாலன், ஜெமோ, எஸ்.ரா, போன்ற பத்திரிக்கை உலகில் இருக்கும் பலரும் வலைப்பதிவுகளின் பக்கம் வருவதற்கான காரணத்தை

    இப்படியும் பிரித்துப் பார்க்க முடியும்.

    1. பத்திரிக்கையில் இல்லாத சுதந்திரம்.

    2. நாளை இணையத்தில் எழுதியவற்றை நூலாக தொகுத்துக்கொள்ளலாம்.

    3. பத்திரிக்கை தவிர்த்து, இணையத்தில் எழுதுகின்றவர்களிடமும் தன் நூல்களை விற்பனை செய்துகொள்ளமுடியும்

    4. இணையநண்பர்கள் மூலம் அடுத்த நூலுக்கோ, புதிய தொழிலுக்கோ தேவையான ஆதாரங்களைப் பெற முடியும்.

    இப்படி எத்தனையோ விசயங்களை நம்மால் பட்டியல் போட முடியும்.

    அதனால் தான் நம் வலைப்பதிவுகள் பற்றி பத்திரிக்கையில் செய்திவருவதோ அல்லது பிரபலங்கள் வலைப் பதிவ வருவதையோ கண்டு நாம் பெருமை கொள்ளத்தேவையில்லை. எவ்வளவு பெரீஈஈஈஈஈஈஈய எழுத்து ஜாம்பவனாக இருந்தாலும் நீயும் பதிவர்,
    நானும் பதிவர் அவ்வளவுதான் என்ற மனநிலைக்கு நம்மவர்கள் வரும்வரை.. இதுபோன்ற வயிற்றெரிச்சல் கோஷ்டிகள் இப்படி ஏதாவது எழுதிக்கொண்டு தான் இருக்கும்.

    அவற்றிற்கு நம்மில் யாராவது எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டே தான் இருப்போம்.

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… அப்பாடா… ஜோடா.. ப்ளீஸ்! :)
    —————————–

    எழுத நினைத்தது வேறு எழுத்தில் வந்தது வேறு… :( வழக்கம் போல உளறி வச்சுட்டேன்.

  36. இப்படியான விமர்சனங்களும் கருத்துக்களும் ஓர் இடைமாறு காலகட்டத்தில் மிகவும் இயல்பாக வரும்.

    இங்கே வலைப்பதிவுகளை ஒன்றும் பெரிதாகப் புனிதப்படுத்தத்தேவையில்லை.
    இதழ்களுக்கு இருக்கும் குறைபாடுகள் போல வலைபப்திவுகளுக்கும் அவற்றுக்கே உரிய குறைபாடுகள், போதாமைகள் உண்டு.

    அதிகம்பேர் பார்க்கவேண்டும், அதிகம் சர்ச்சை உருவாகவேண்டும் என்ற காரணத்துக்காகவே மிக மலினமாக நடந்துகொள்ளும் வலைப்பதிவுகளை நாம் எதிர்கொள்ளவில்லையா?

    வலைப்பதிவாளர்களுக்கு இதழ்களின் மேல் இருக்கும் விமர்சனங்களுள் ஒன்றாக, இதழ்களில் “எல்லோருக்கும் இடம் கிடைப்பதில்லை” என்பதும் இருப்பதில்லையா?

    குமுதமும் இணையமும் வெவ்வேறு சாத்தியங்களைக்கொண்டவை.
    இன்று எனக்கு தெரிந்த ஒருவர் ஆணுக்கு பிள்ளை பிறக்கப்போகும் செய்தியைப்படிப்பதற்காகவே குங்குமம் இதழ் ஒன்றை காசுகொடுத்து வாங்கிக்கொண்டு போனார். அவரது மகள் இவ்வளவுக்கும் ஒரு மென்பொருளாளர்.

    இந்த “இடைவெளி” யை நிரப்புவது அச்சிதழ்களே.

    வலைபப்திவர்கள் அச்சிதழ்களையும் சுஜாத்தாக்கள் வலைபப்திவர்களையும் ஆளுக்காள் நக்கலடித்துக்கொண்டும் விமர்சித்துக்கொண்டும் அடுத்த கட்டத்துக்கு போய்க்கொண்டிருக்கிறோம்.
    நாளடைவில் அவரவர் அவரவர் இடங்களுக்கும், சாத்தியங்களுக்கும் பழக்கப்பட்டுப்போவர்.

    :-)

  37. மயூரன்..,

    வலைப்பதிவுகள் எல்லாம் புனிததுவமானவை என்றோ… பதிவர்கள் எல்லாம் புனிதர்கள் என்றோ பேசுவதல்ல என் நோக்கம். (மேலும் புனிதத்துவத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்பது இன்னொரு செய்தி) தங்களுடைய போதாமைகளை மறைத்துவிட்டு, அடுத்தவன் பற்றி குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது…!

    //வலைபப்திவர்கள் அச்சிதழ்களையும் சுஜாத்தாக்கள் வலைபப்திவர்களையும் ஆளுக்காள் நக்கலடித்துக்கொண்டும் விமர்சித்துக்கொண்டும் அடுத்த கட்டத்துக்கு போய்க்கொண்டிருக்கிறோம்.
    நாளடைவில் அவரவர் அவரவர் இடங்களுக்கும், சாத்தியங்களுக்கும் பழக்கப்பட்டுப்போவர்//

    நிச்சயமாக… அதுக்குள்ளாற இப்படி புலம்பத்தொடங்கினா… என்ன செய்றது இதுகளை!

  38. //பல பேர் மனநோயாளிகள்.//
    பலர்னுதானே சொல்லி இருக்காங்க., எல்லாரும்னு சொல்லலியே. போன வாரம் ரிப்போர்ட்டர் படிச்சுட்டு பதில் எழுதி இருக்கலாம்,

    நாம சொல்றதில்லீங்களா? ஜெயமோகனையும், சுஜாதாவையும்,, இன்னபிற மக்களையும் நாம திட்டாத்தையா சொல்லிட்டாங்க?

  39. இதுக்கு தான் குமுதம் விகடன் எல்லாம் நான் படிக்கிறதே இல்லை… ஒரு நடிகையின் கதை எழுதி காசு பார்த்தவர்களுக்கு ஆரோக்கியமான இணைய எழுத்தாளர்களை பற்றி தெரிந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டார்கள். அப்புறம் அதன் வாசகர்கள் குமுதத்தை மறந்துவிட்டு வலைபதிவுகளுக்கு வந்துவிடுவார்கள்.

  40. //சுஜாதா ஆசிரியராக இருந்த போது தான் இந்த குமுதத்தின் வண்ணம் மாறியது. அதுவும் என்ன வண்ணத்தில் தெரியுமா.. நீலம்,பச்சை,சிகப்பு கலந்த வண்ணம். ஆபாசங்களை அள்ளித்தெளிக்கும் வழமை அப்போதிருந்து தொடங்கியது.//

    இது என்ன மாதிரியான அவதானிப்பு என்று தெரியவில்லை.

    ‘இருபதாம் நூற்றாண்டுக்கு அப்பால்’, ‘வாரம் ஒரு கவிதை’ என்று பல புதிய பகுதிகளை அறிமுகபடுத்தியும், வெறும் மொக்கையான ‘ஆறு வித்தியாசங்கள்’ போன்ற பகுதிகளை விலக்கினது நினைவிருக்கின்றது. நடுபக்க கவர்ச்சி படமும் கிடையாது.

    வாசகர் ஓட்டெடுப்பும் நடத்தி பல பகுதிகளை மாற்றினார்கள்.

    அதற்கு அப்புறம் மாலன் பொறுப்பேற்று கொண்டார். அவரும் ஓரிரண்டு வருடங்கள்தான் இருந்தார். அதற்கு அப்புறமாக மீண்டும் நடுபக்க கவர்ச்சி படம் மற்றும் ‘நடிகையின் கதை’ (பதலக்கூர் ஸ்ரீநிவாசலு) போன்ற பகுதிகள் தொடர்ந்தன.

    சுஜாதா காலத்தில் குமுதத்தின் உள்ளடக்கம் கொஞ்சம் உயரத்தான் செய்தது. அதுவே பல பத்திரிகைகளுக்கு பிடிக்கவில்லை.

    ‘இருபதாம் நூற்றாண்டின் விளிம்பு’தான் பிறகு ‘கற்றதும் / பெற்றதும்’ஆக பரிணமித்தது.

    சுஜாதா இணையத்தை என்றும் குற்றம் சொன்னதாக நினைவில்லை. வலைப்பதிவு என்பது இணையத்தில் வெகு சிறிய துளி. அதைப் பற்றிய அவருடைய கருத்துகளை வைத்து அவர் ‘நடுங்குகிறார்’ என்று சொல்வது என்ன அவதானிப்பு என்று புரியவில்லை.

    மற்றபடி வலைப்பதிவுகளில் உள்ள சுதந்திரம் பத்திரிகைகளில் இல்லை என்பது உண்மைதான். ஆனால் இணையம் என்பது எல்லாருக்கும் பொது. பத்திரிகைகள் அதை எப்படி உபயோகபடுத்த போகின்றன என்பதுதான் முக்கியம்.

    பெரும் நிறுவனங்களின் சக்தியும் வீச்சும் ஒரு தனிநபரோடு (அல்லது ஒரு சிறிய கூட்தத்தினோடோ) ஒப்பிடக் கூடாது. அதற்கு கூகுள் நிறுவனமே சாட்சி. பெரும் பத்திரிகை நிறுவனங்கள் இணையத்தை வைத்து கொண்டு எவ்வளவோ சாதிக்கலாம் என்பதுதான் நிதர்சனம்.

    எனது கருத்து உங்கள் பதிவுக்கு இடையூறாக இருந்தால் தவிர்த்து விடுங்கள். நன்றி!

  41. குமுதத்தின் ஆற்றாமையைக் காட்டுகிறது.
    ஊடகங்கள் வலையுலகத்தைக் கண்டு தனது
    ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றன.
    இதில் ஒரு சில ஊடகங்கள் விதிவிலக்கு.
    உதாரணம்: இலங்கையின் தினக்குரல்

    அன்புடன்,
    ஜோதிபாரதி.

  42. //சுஜாதா ஆசிரியராக இருந்த போது தான் இந்த குமுதத்தின் வண்ணம் மாறியது. அதுவும் என்ன வண்ணத்தில் தெரியுமா.. நீலம்,பச்சை,சிகப்பு கலந்த வண்ணம். ஆபாசங்களை அள்ளித்தெளிக்கும் வழமை அப்போதிருந்து தொடங்கியது.//

    முதன் முதலாக 1994 ஏப்ரல் மாதம் ஒரு இலவச இணைப்பை தந்து அதில் ஆபாச நகைச்சுவை - கால்சட்டையை கழற்றி நீளத்தை அளந்தார்கள் (பெல்டின் நீளத்தை)- போன்ற அபத்த நகைச்சுவை துனுக்குகள் ஆரம்பித்த பொழுது எஸ்.ஏ.பி அவர்கள் அமெரிக்காவில் இருந்தார். :(

    அது சரி, மனநோயாளிகள் என்பதால் தான் நடிகையில் கதை எழுதாமல் பிற விஷயங்களை எழுதுகிறோமோ :)

  43. //கைகுட்டை போட்டு இடம் பிடிப்பதை விட்டுவிட்டு, பத்திரிக்கையாளன் அடையாளத்தி துறந்துவிட்டு, எங்களுடன் களத்தில் இறங்குங்கள். அப்புறம் பார்க்கலாம் யாருடைய எழுத்து திறமையானது என்று.
    //
    என்ன பாலா நீங்கள்? போட்டிக்கு சிங்கத்தை அழைத்தால் ஒரு வீரம் இருக்கும். பூனையை அழைத்து நம்மை அவமானப்படுத்துகிறீர்களே?!;-)

    //நீங்கள் எதிர்க்க நினைப்பவர்கள் முதலில் அதற்குரிய தகுதியை வளர்த்துக் கொள்ளட்டும்//
    பூனை முதலில் சிங்கமாகட்டும். அப்புறம் பார்க்கலாம்!!;-)

  44. //சுஜாதா ஆசிரியராக இருந்த போது தான் இந்த குமுதத்தின் வண்ணம் மாறியது. அதுவும் என்ன வண்ணத்தில் தெரியுமா.. நீலம்,பச்சை,சிகப்பு கலந்த வண்ணம். ஆபாசங்களை அள்ளித்தெளிக்கும் வழமை அப்போதிருந்து தொடங்கியது.//

    Half baked comments like these justify Kumudam’s remarks! Most of the Tamil bloggers write with dogmatic and preconceived bias for or against persons, policitcal parties and/or communities. In that sense, what Arasu has said makes sense :-)

  45. kumudam…

    ❒ வலைப்பதிவர் பற்றி குமுதம்

    வலைப்பதிவர்களின் கவனத்திற்கு:- குமுதம் இதழ் சொல்லுவது சரியா? - பா…

  46. வலைப்பதிவர் பற்றி குமுதம்

  47. செய்தித்தாள்/சஞ்சிகைகள் பற்றி எழுதாமல் எழுதியது.

    இந்த சுட்டியைப் பாருங்கள்.

    http://jothibharathi.blogspot.com/2007/12/blog-post_25.html

    அன்புடன்,
    ஜோதிபாரதி.

  48. //Half baked comments like these justify Kumudam’s remarks! Most of the Tamil bloggers write with dogmatic and preconceived bias for or against persons,//
    பார்த்து படித்த அனுபவங்களை வைத்து குமுதத்தை மதிப்பிடுவதில் தப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எழுபதுகளின் நடுவில், முதலிரவில் என்ன நடக்கிறது என்று ஒரு கட்டுரை வந்தது குமுதத்தில். வாரா வாரம் ஒரு
    ப்ளேபாய் துணுக்கு பதிப்பிக்கப்பட்டது. இதற்கெல்லாம் ப்ளேபாய் பத்திரிக்கைக்கு பணம் கொடுத்திருப்பார்களா
    என்று தெரியவில்லை. பாப்பியான் கதை கருப்படிக்கப்பட்ட நிர்வாண ஓவியங்களோடு வெளி வந்தது. டெபோனேர்
    அளவிற்கு இல்லாவிட்டாலும் தமிழ் கவர்ச்சி நடிகைகளின் (ஆபாசப்) படங்கள் அவ்வப்போது, குமுதத்தை அலங்கரித்தது.
    இதில் எம்மார் ஆர் வாசு ஒரு நடிகையை கற்பழிக்கும் படம்.
    “sex sells” என்பதை நன்றாக முதலில் உணர்ந்து உபயோகப்படுத்தியவர்கள் குமுதம்தான். பின்னால் வந்த சாவி
    இதை ஒரு படி மேலே கொண்டு போனார். சுஜாதா சாவியிலோ குங்குமத்திலோ எழுதிய கதை ஒன்றில்
    ஒருவன் தன் உடல் தேவைக்காக ஒரு பெண் ரப்பர் பொம்மையை வைத்திருப்பதாக வரும். எதை எழுதலாம் எங்கே
    எழுதலாம் என்பது கேள்வி இங்கே! குமுதத்திற்காக வக்காலத்து வாங்குவது கொடுமை!

  49. //
    சுஜாதா ஆசிரியராக இருந்த போது தான் இந்த குமுதத்தின் வண்ணம் மாறியது. அதுவும் என்ன வண்ணத்தில் தெரியுமா.. நீலம்,பச்சை,சிகப்பு கலந்த வண்ணம். ஆபாசங்களை அள்ளித்தெளிக்கும் வழமை அப்போதிருந்து தொடங்கியது.
    //

    அதை வாங்கிப் பார்த்து ஜொள்ளுவிட்டு அதன் விற்பனையைப் பெருக்கியவர் என்ற முறையில் சொல்கிறீர்களா ? அல்லது அதை வாங்காமல் கண்ணை மூடிக்கொண்டு போய், தலையில் துண்டு போட்டுக் கொண்டு பக்கத்துவீட்டுக்காரனின் குமுதத்தை லவட்டிப் பார்த்து சந்தோஷப்பட்டவர் என்ற முறையில் சொல்கிறீர்களா ?

    ஹிப்பாக்கிரசி என்பதற்கு அகராதி என்று எழுதினால் அதில் முதல் பெயர் தங்கள் பெயராக இருக்கும்.

  50. குமுதம் பத்திரிக்கைக்கும் ‌மஞ்சள் பத்திரிக்கைகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. தனது புத்தகத்தின் வியாபாரத்திற்காக 8 வருடங்களுக்கு முன்பு ஒரு நடிகையின் கதை என்ற கற்பனை ஆபாச கதையைப்போட்டு காசு பார்த்தது. இவர்களுக்கு வலைப்பதிவர்களைப்பற்றி சொல்வதற்கு எந்த தகுதியும் தராதரமும் இல்லை.

    எனவே நாம் இதைப்பற்றி நாம் சர்ச்சை செய்வதற்கு ஒன்றுமே இல்லை…

    சூரியனைப் பார்த்து நாய் குரைத்தாற் போல் உள்ளது.

  51. பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் உள்ள முக்கிய இலக்கு காசு. அதனால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதத்தான் செய்வார்கள். வலைப்பதிவர்கள் எவரும் காசுக்காக எழுதுவதில்லை என்ற நிலையில் அவர்களுக்கு வலைப்பதிவர்களை பார்த்தால் மனநிலை பிறழ்ந்த இளிச்சவாயர்களாக தான் தெரிவார்கள்.

    இது சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்னும் கதை தான்.

  52. குமுதம் சொன்ன கருத்து அவர்களின் ஆசிரியர் குழுவை மனதில் வைத்தே சொன்ன கருத்தாக இருக்கலாம்.பொதுவாக அச்சு ஊடகத்தில் எதிர்காலம் குறைந்து கொண்டே வருகிறது.அதாவது அச்சு ஊடகமழிந்து விடும் என நான் சொல்லவில்லை.கழுதை தேய்ந்து கட்டெறும்பானது மாதிரி குமுதமோஆனந்த விகடனோ எரும்பாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
    அது ம‌ட்டும‌ல்ல‌ குமுத‌ம் ஆன‌ந்த‌ விக‌ட‌ன் இராண்டையும் ப‌ற்றி பேசும் பல ‌ந‌ண்ப‌ர்க‌ள் குமுதம் கேவ‌ல‌மான‌து என்றும் ஆன‌ந்த‌ விக‌ட‌ன் கொஞ்ச‌ம்ப‌ர‌வாயில்லை என்றோ குமுத‌த்தை விட‌ ந்ல்ல‌ப‌த்திரிகை என்றோ விவாதித்து வ‌ருகிறார்க‌ள்.
    குமுத‌ம் ஆன‌ந்த‌ விக‌ட‌ன் இர‌ண்டுமே த‌மிழ்க் க‌லாசார‌த்தின் பீ வ‌ண்டிக‌ள் ந‌ண்ப‌ர்க‌ளே! ஆமாம் இந்த‌ இரு பீ வ‌ண்டிக‌ளிலும் சிற‌ந்த‌ பீ வ‌ண்டி எது சாதுவான‌ பீ வ‌ண்டி எது என‌ வேண்டுமானால்விவாத்க்க‌லாம்.
    இந்த‌ இர‌ண்டிலுமே வேலைபார்க்கும் நிர்வாகிக‌ள் நிருப‌ர்க‌ள் பெரும்பாலானாவ‌ர்க‌ள் முட்டாள்க‌ள்.இணைய‌ த‌ள‌த்திலிருந்து ட‌வுண் லோட் செய்து எழுதுப‌வ‌ர்க‌ள்.சொந்த‌ புத்தி இல்லாத‌வ‌ர்க‌ள் எந்த‌ வித‌மான‌ வாசிப்பு அனுப‌வ‌மோ அனுப‌வ‌ அறிவோ இல்லாத‌வ‌ர்க‌ள்.
    இணைய‌ த‌ள‌ம்செய‌லிழ‌ந்து விட்டால் பாதி ப‌த்திரிகையாள‌ர்க‌ள் வீட்டுக்க்குச் சென்று விடுவார்க‌ளிதுதான் நிலைமை.

    உண்மையில் இணைய‌த்தில் எழுதுப‌வ‌ர்க‌ள் குமுத‌ம் ஆன‌ந்த‌ விக‌ட‌னை விட‌ புத்தி உள்ல‌வ‌ர்க‌ள்தான்.ப‌ல‌நேர‌ங்க‌ளில் குமுத‌ம் ஆன‌ந்த‌விட‌னை விட‌ ஆழ‌மான‌ ர‌ச‌மான‌ க‌ட்டுரைக‌ள்ப‌லதையும் நான் த‌மிழ் ம‌ண‌த்தில் ப‌டித்திருக்கிறேன்.
    ஒரு வ‌ணிக‌ இத‌ழில் வேலை பார்க்கும் நான் சொல்கிறேன்.வ‌ணிக‌ இத‌ழ‌க‌ளை புற‌க்க‌ணியுங்க‌ள்.இவ‌ர்க‌ள் அழிந்து போவ‌தால் யாருக்கு என்ன‌ ந‌ஷ்ட‌மும் கிடையாது.இர‌ண்டு கேவ‌ல‌மான‌ முத‌லாளிக‌ளுக்கு ஒரு தொழில் ந‌ஷ்ட‌ம் அவ‌ள‌வுதான்.மற்ற‌ப‌டி குமுத‌மும் ஆன‌ந்த‌ விக‌ட‌னும் இல்லாது போனால் த‌மிழ் ம‌க்க‌ளொன்றும் குடிமுழுகி போய் விட‌ மாட்டார்க‌ள்.

  53. //வலைப்பதிவர்கள் எவரும் காசுக்காக எழுதுவதில்லை //

    Hi..Hi..Good comedy… Most of the Tamil bloggers write for Pinnoottam…! That is why Tamil Manam had to remove”Soodaana Idugai” out of its page.

  54. //எரும்பாகிக்
    இராண்டையும்
    ந்ல்ல‌ப‌த்திரிகை
    விவாத்க்க‌லாம்.
    ட‌வுண் லோட்
    உள்ல‌வ‌ர்க‌ள்தான்
    யாருக்கு என்ன‌ ந‌ஷ்ட‌மும்