June 26th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

கத்தியின் பிடிகளை
ஆராய்கிறாய் நீ
அது
பட்டுப்போய்
வந்திருக்குமா
பச்சையாய்
வந்திருக்குமாவென
யோசிக்கிறதென் மனம்.

June 23rd, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

பம்பரம், கோலி, கிரிகெட், பாண்டி, சீத்துக்கல்லு என நம்மில் பலரும் பன்னிரெண்டு வயதில் விளையாடிக் கழித்திருப்போம். ஆனால் கு.அ.தமிழ்மொழி என்ற சிறுமி தன் பன்னிரெண்டாவது வயதில் ஒரு கவிதைப் புத்தகம் வெளியிட்டு இருக்கிறாள்.
இன்று கவிதை வடிவம் பலதளங்களுக்கு போய் விட்டது. ஆனாலும் பலரையும் ஈர்க்கும் வடிவங்களில் ஒன்று தான் துளிப்பா என்று சொல்லப்படும் ஹைக்கூ வடிவம். பாரதியால் 1916களிலேயே தமிழுக்கு அறிமுகமாகிவிட்ட இந்த ஹைக்கூ வடிவம், 1990களின் தொடக்கத்தில் எழுச்சிகொள்கிறது.
இன்று தமிழில் மட்டும் வந்திருக்கும் ஹைக்கூ நூல்களின் […]

June 23rd, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

ஞாயிற்றுக்கிழமை நாளை மாலை 4.30 மணிக்கு தொடங்கி 6.00 மணிக்கு முடிவடைந்து விடக்கூடிய பதிவர்களில் மொக்கை போடும் நிகழ்ச்சி ஏற்கனவே அறிவித்தபடி …
வித்லோகா புத்தகக் கடை
எண். 238/187, ராயப்பேட்டை நெடுஞ்சாலை,
பீமசேனா கார்டன் தெரு,(மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலையிலிருந்து., ராயப்பேட்டை மேம்பாலத்துக்கு ஏறுவதற்கு முன்பு,உள்ள சந்தில், வித்யாபாரதி திருமண மண்டபம் அருகில்)
மயிலாப்பூர், சென்னை-600 004.
தொடர்புக்கு தொலைபேசி : 9940045507.

என்ற முகவரியில் நடக்கும். வாய்ப்பு இருந்து, மொக்கை போட விரும்புகிறவர்கள் வந்து சேரலாம்.
நினைவுக்கு:-
“நம்ம தடலடி வெற்றி வேந்தர்”சிவஞானம்ஜி அள்ளிவிட்டபடி சந்திப்பு தள்ளாடவில்லை. […]