August 27th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

நண்பர்களே!

வலையுலகம் கண்டிராத ஒரு புதுமையான தொடர்பதிவு இது. இருவர் மட்டுமே பங்குபெற முடிந்த, இத்தொடரின் முதல் பகுதி இங்கே. கடைசியாக(துவக்கமாக!) என் வாழ்க்கையிலும் திருமணம் என்ற சடங்கு நடந்தேறி விட்டது.

ஏகப்பட்ட மனவருத்தங்களிருந்தாலும் பெற்றவர்களின் ஆசியுடன் 20.08.08 அன்று நானும் தோழி லக்ஷ்மி அவர்களும் வாழ்கையை இணைந்து துவக்கி விட்டோம். சென்னை வந்தபிறகு செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில்… வாழ்க்கைத் துணை அறிமுகமும் தேநீர் விருந்தும் வைப்பது  என முடிவு செய்திருக்கிறோம். இடமும் தேதியும் உறுதி செய்யப்பட்டபின் இன்னொரு பதிவில் தெரிவிக்கிறேன்.

முன்பே விஷயம் தெரிந்தும் எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி நாங்களாக அறிவிக்கும் வரை ரகசியம் காத்த நண்பர்களுக்கு நன்றி. ஜிடாக்,மெயில், போன் என முடிந்த வகையிலெல்லாம் செய்தியைப் பரப்பிய நண்பர்களுக்கும் ஸ்பெஷல் நன்றி. :) 

எங்களின் உறுதிக்கு உரமளித்த அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்.


எனது பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதிலிருக்கும் சிக்கல் இன்னமும் நீடிப்பதால் இப்பதிவைப் படிக்கும் நண்பர்கள் என் நிஜமானத் திருமணச் செய்தியை உங்களது மற்ற(எங்களை அறிந்த) நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

June 19th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

மாயமோ? என்னமோ தெரியலை.. எனக்கு பயர் பாக்ஸ் மீது கொள்ள ஆசை இருந்துவருகிறது. ஜூன் 18ம் தேதி பயர்பாக்ஸின் மூன்றாவது வர்சன் வெளிவருகிறது. அதனை அதே நாளில் தரவிரக்கிக்கொள்ளுங்கள் என்று நம்ம கோபி எழுதி இருந்தார். இந்திய தேதியா.. அமெரிக்க தேதியான்னு தெரியலை. ஆனா.. அமெரிக்க தேதியில.. நான் புதிய பயர்பாக்ஸை தரவிறக்கிக்கொண்டேன். இனி பயர் பாக்ஸில் align=justify தொல்லை இல்லாமல்.. தமிழை படிக்க முடியும். :) அவ்வளவு பெரிய.. முயற்சியில அடியேனின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை என்னும் போது கொஞ்சம் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.

-OoO-

மருத்துவர் ராமதாசால் தொடங்கப்பட்ட, வன்னிய ”தமிழ் படைப்பாளிகள் பேரிக்கா”வில் முக்கிய பதவியில் இருந்த ஒரு கவிஞர்.. பலரின் கேள்விக்கனைகளை பொறுக்க மாட்டாமல்.. தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டாராம்.  கொஞம் தன்மானத்துடன் சிந்திந்த அவருக்கு வாழ்த்துக்கள். இந்த பின்நவினத்துவ படைப்பிலக்கிய புலியின் செயல்.. பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், மருத்துவரைய்யாவுக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கிறது. இந்த மாதம் அவருக்கு ஆகாத மாதம் போலும்..! :) {மறைந்த மூப்பனார் பேசுவதை கவனித்தவர்கள் எல்லோரும் இன்னொரு விசயத்தையும் கவனித்திருப்பார்கள். அது தான் பேரிக்கா.. காங்கிரஸ் பேரியக்கத்திலே… என்று சொல்லுவதற்கு பதில்.. அவர் எப்போதும் பயன்படுத்தும் சொல்.. “காங்கிரஸ் பேரிக்காவிலே..” } அது தான் மேலே சொன்னா பேரிக்கா…

-oOo-

மந்திர கம்பளம் கதை படித்திருக்கிறீர்களா.. வாண்டுமாமா என்ற குழந்தை எழுத்தாளர் எழுதிய சிறுவர் நாவல். என் சிறுவயதில் வாசித்திருக்கிறேன். பூந்தளிர், கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய பிரபலமான எழுத்தாளர் இவர்.  இப்போது அச்சில் இருக்கிறதா தெரியவில்லை. இணையத்தில்.. யாரோ.. ஒரு புண்ணியவான்.. அந்த முழுக்கதையையும் சேமித்து வைத்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். அதன் சுட்டி கொடுத்திருக்கிறேன். பழைய நாட்களின் நினைவுக்கு திரும்புகிறவர்கள்/ விரும்புகிறவர்கள் படித்துப் பார்க்கலாம்.

-)(O)(-

மீடியா பற்றி ஒரு கட்டுரை எழுதத்தொடங்கி இருக்கிறேன். பத்திரிக்கை உலகிலேயே பல காலம் இருந்து விட்டு, அதில் இருக்கும் ஊழல்கள் பற்றி பல சந்தர்ப்பங்களில் புலம்பி இருக்கிறேன். இப்போது தொலைக்காட்சி ஊடகத்தில் நுழைந்த பின் தான் இங்கே இருக்கும் கோளாறுகள் புலப்படத் தொடங்கி இருக்கின்றன. பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை உள்ளடக்கிய.. கட்டுரையாக அது உருவாகி வருகிறது. சமயம் வாய்க்கும் போது முழுவதும் முடித்து, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இது அக்கட்டுரை பற்றிய விளம்பரம்..

-OoO-

வைரமுத்து எழுதிய தண்ணீர் தேசம் மின்னூலாக இணையத்தில் கிடைக்கிறது தெரியுமா? வேண்டுவோர் இங்கே சொடுக்கி பெறலாம். நன்றி: மதுரை திட்டம்.

June 15th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

தமிழ்மணப் பதிவர்களுடன், நிர்வாகிகளின் சந்திப்பு இனிமையாக நடந்து முடிந்தது. எதிர்பார்த்ததை விட.. அதிகமான பதிவர்கள் வந்திருந்தார்கள். ஆசிப் அண்ணாச்சியின் வருகை இன்ப அதிர்ச்சி..! நன்கு நடந்து முடிந்த பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளை நம்மவர்கள் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். அலுவலக வேலை அதிகமாகி விட்டது. பதிவுகளை படிக்கவோ.. எழுதவோ கூட பழையபடி நேரமில்லாமல் போய் விட்டது வருந்தமளிக்கிறது. (நண்பர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜன் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியாமல் போனது அதை விட வருத்தமான விசயம். நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போதெல்லாம் நினைப்பது எல்லாம் செய்து முடிக்க முடிவதில்லை என்ற குற்ற உணர்ச்சி அதிகமாகி வருகிறது.)

-oOo-

கடந்த வாரம் நடிகர் கார்த்திக் அரசியல் கட்சி தொடங்குகிறார். விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பு வர.. நிறுவனத்தின் சார்பில்.. போய் இறங்கினோம். 4.30க்கு என்று சொல்லி இருந்தார்கள். சினிமா படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது போலவே தாமதமாக 5 மணிக்கு வந்து சேர்ந்தார். தொடக்கத்தில்.. பேசினார்.. பேசினார்… பேசினார்! என்னென்னமொ பேசினார். ஏகப்பட்ட கைத்தடிகளின் கூட்டம் வேறு. அத்தனை பேரும் மப்பில் இருந்தார்கள். தேவர் சாதி கட்சி போல தோற்றம். நிறைய கைதட்டலும் விழுந்துகொண்டே இருந்தது. நிறைய பேசிய பின் “அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி” என்று தம் கட்சிக்கு பெயர் வைத்திருப்பதாக அறிவித்தார். அதன் பின் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். மஞ்சள்+வெள்ளை+சிகப்பு நிறங்களைக் கொண்ட.. கொடியின் நடுவில் முத்துராமலிங்கனார் படம் போட்டிருந்தார்கள். கொடி அறிமுகம் செய்யப்பட்டவுடன் எல்லா புகைப்படக்காரர்களும் கார்த்திக்கின் தலைக்கு மேல்(பின்னால்) பிடித்திருந்த கொடியை படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள். விடியோ கேமரா மேன்களும் கார்த்திக்குடன்.. கொடியை கவர் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது.. கார்த்தின் அசராமல்.. சொன்னார்.., “நல்லா.. பார்த்துக்கிடுங்க.. இது தான் கொடி.. ஆனா.. இன்னும் ஃப்பைனலைஸ் ஆகலை..” படம் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லோருக்கும்.. ஒரு மாதிரியாகிவிட்டது. அய்யா சாமீ.. மொதல்ல.. ஒரு முடிவுக்கு வாங்க.. அப்புறம் கூட்டம் போட்டு அறிவிப்பு கொடுங்கப்பா… மக்கள் பாவம்..!

-OoO-

நடிகர் சரத்குமார் தன் கட்சியின் சார்பில்.. பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நடத்தவிருக்கும்.. ஆர்ப்பாட்டம் பற்றி அறிவிக்க.. அழைத்திருந்த.. செய்தியாளர் சந்திப்பு அது. ”யாருடனாவது.. கூட்டன்ிசேர்வீர்களா?” என்ற கேள்விக்கு, “இன்றைய முதல்வர்.. முந்தைய முதல்வருடன் நிச்சயம் கூட்டனி இல்லை”என்று சொன்னார் சரத். குறும்புக்கார.. ஒரு செய்தியாளர்.. அப்போ.. ”வருங்கால முதல்வருடன் சேருவீர்களா?”என்று அறிவுஜீவித்தனமாக கேட்க.., சரத்குமார் புரியாமல் விளித்தார். “விஜயகாந்துடன் சேர்வீர்களா?”ன்னு கேட்டேன் சார்.. என்றார் அந்த செய்தியாளர். கடுப்பாகிப் போன.. சரத், “நாங்களே.. அடுத்த முதல்வர்ன்னு சொல்லிகிட்டு இருக்கும் போது இப்படி பேசுவது சரியா?” என்று நொந்துகொண்டது பார்க்க பரிதாபமாக இருந்தது.

-oOo-
”தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்” என்ற ஓர் அமைப்பை டாக்டர் ராமதாஸ் நேற்று தொடங்கி வைத்தார். அந்த அமைப்பின் அனேக பொறுப்புக்களில் இருப்பவர்கள் எல்லோரும் வன்னியர்கள். இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே மற்றவர்கள். சாதிய அமைப்புகள் நேரடியாக சாதி பெயரை பயன்படுத்தாமல் இப்பொதெல்லாம் ‘தமிழ்’ பெயரை பயன்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டது ஆபத்தான காரியமாகப்படுகிறது. எழுத்தாளர்களுக்குள் தான் நேரடியான சாதிய அணுகுமுறை இருப்பதில்லை என்று நம்பி இருந்தேன். அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள் என்பது இப்போது தான் தெரியவந்தது. அடப்போங்கப்பா..! :(

-oOo-