August 14th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

சிறுவயதில் திக்குவாயனாக இருந்த சமயங்களில் பாட்டுப்பாட நிறைய ஆசை இருக்கும். ஆனால்.. முதல் பல்லவி முடிவதற்குள் தாவு தீர்ந்து விடும் (கேக்க்குறவங்களுக்குத் தான்).

காயிலே புளிப்பதென்ன.. க்க..க்க..க்க…….. கண்ண பெருமானே! என்று நான் படுத்தும் கொடுமைக்காகவே.. என்னை எங்குமே எவருமே பாட விடுவதில்லை. ஆனாலும் ஆசை யாரை விட்டது. :). தொடர்ந்து.. செய்த பயிற்சி+ முயற்சிகளால் திக்குவாய் வெகுவாக குறைந்து விட்டது.

இப்போவும் என் இஷ்டத்திற்கு.. பிரபலமான பாடல்களை என் மெட்டுக்கு மாற்றி கொலை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இதோ.. அப்படி சமீபத்தில் நான் கொலை செய்த பாடலின் பதிவு இது.

Get this widget | Share | Track details

இதனை கேட்கும் தகிரியம் இருந்தால் மட்டும் கேட்கவும். அப்புறம் ஆட்டோ அனுப்புற வேலை எல்லாம் வேணாம். இப்பவே சொல்லிடுறேன். நான் பாட்டை கொலைபண்ணி இருக்கேன்.