நீ நான் மற்றும் வெட்கம்
April 25th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
படத்தை பெரியதாக்கி பார்க்க அதன் மேல் க்ளிக்கவும்!

மேலும்..
சொல்லிய வண்ணம் செயல்..
படத்தை பெரியதாக்கி பார்க்க அதன் மேல் க்ளிக்கவும்!

மேலும்..

ஒருபோதும் சோர்ந்து போனதில்லை
மனிதர்களிடம் பேசும் பொழுதுகளில்
சோகங்கள்
துரோகங்கள்
வருத்தம்
மகிழ்ச்சி
என எதுபற்றியேனும்
பேசிக்கொள்ள நேர்ந்திருக்கிறது
பல சமயங்களில்
முன் சிரித்து
பின் கூறு போடுபவர்கள்
இருக்கின்ற போதிலும்
இவர்களை ஒதுக்கிவிட
தோன்றியதில்லை
பூனை,நாய்,கிளி
ஏன் கடவுள்களே கூட
பதில் பேசாமலிருக்கையில்
ஏதாவது பேசும்
மனிதர்களை புறந்தள்ள முடிவதில்லை.