பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.
சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பதிவர்கள் கலந்து கொண்ட உரையாடல் அமைப்பின் சிறுகதைப் போட்டி முடிவுகள் எதிர்வரும் சனிக்கிழமை வெளியாகும் என பைத்தியக்காரன் சொல்லியிருந்தார். சுட்டி இங்கே!
சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டவர்களின் சிறுகதைகளை வாசிக்க சங்கமம் திரட்டி கொடுத்திருக்கும் வலைப்பக்கத்தின் சுட்டி இங்கே.
வலையுலக சரித்திரத்தில் முதன் முறையாக ரூபாய் முப்பதாயிரத்திற்கான பரிசை வெல்லப் போகும் இருபது பதிவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.
சிவராமண்ணே, இதுக்கு மேல தாங்காது…. முடிவ சனிக்கிழமை அறிவிச்சுடுங்க… அதுக்குத்தான் இந்தப் பதிவு… [...]
Continue reading about வலையுலக சரித்திரத்தில் முதல் முறையாக…
நான் படித்த தொடக்கப்பள்ளியின் சத்துணவுக்கூடத்தில் விளிம்பு வெடித்த அந்த அலுமினிய குண்டா இன்றும் அப்படியே இருக்கிறது. அதில் கொட்டப்படும் மீதி சோற்றுக்கென.. மதிய வேளைகளில் நாய்களின் கூட்டமொன்று அலைந்தபடியே இருக்கிறது. ஆனால், அந்த குண்டா யாருக்காக வைக்கப்பட்டதோ அவனை இன்றளவும் எதிர்பார்த்தபடியே தான் இருக்கிறார்கள் பள்ளிக்குழந்தைகளும், ஆசிரியர்களும். எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் மட்டும் தான் அவன் போயே போய் விட்டதின் காரணம் தெரியும்.
கோட்டி முத்து. இந்த பெயரைச் சொன்னால் என் ஊரில் தெரியாதவரே இல்லை எனலாம். [...]
ஆண்டுதோறும் நடைபெறும் ஆசிரியர்தின விழாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்த லிபர்டி கார்டன் முனிசிபல் பள்ளி, மும்பையிலிருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பள்ளிகளில் இதுவும் ஒன்று. இருபாலரும் படிக்கும் இதில் பத்தாம் வகுப்பு வரை இருப்பது கூடுதல் சிறப்பு.
ஆசிரியர் தினத்தன்று பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, நாடகங்கள், நடனம் போன்ற நிகழ்சிகளுடன் ஆசிரியர்களுக்கு மியூசிக்கல் சேர், வினாடி வினா போன்ற போட்டிகளையும் மாணவர்கள் நடத்துவார்கள். வகுப்பறையில் அன்றைய தினம் பாடம் நடத்துவது கூட மாணவர்களோ, மாணவியரோதான். வாழ்த்து அட்டைகள், மலர்க் கொத்துகள் [...]
பொன்ஸ்