October 5th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
சர்ச்பார்க் பள்ளியைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஜெயலலிதா படித்த கான்வெண்ட். சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் இருக்கிறது. அதன் நூற்றாண்டு விழா சில நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக அப்துல்கலாம் கலந்துகொண்டார். பயங்கர கெடுபிடி. ஏகப்பட்ட விஐபிகள், விவிஐபிகள் என்று ஏக கூட்டம். சூப்பர்ஸ்டாருக்கு என்ன கைதட்டல் கிடைக்குமோ.. அதைவிட அதிகமாக கைதட்டல் குழந்தைகளிடமிருந்து கலாமுக்கு கிடைத்தது. வழமைபோல கலாம் மேடையில் உறையாற்றும் போது குழந்தைகளை உறுதிமொழி எடுத்துக்கொள்ளச்சொன்னார். அது பெண் குழந்தைகளுக்கான பள்ளி என்பதால்.. உறுதிமொழியில் வரதட்சனை கொடுக்கமாட்டேன் போன்றவைகளும் இடம் பெற்றிருந்தது.
நேருவுக்கு பிறகு குழந்தைகளிடம் அதிகம் அன்பு காட்டும் தலைவர் இவர் தான். அதிகமாக பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளை பார்த்து பேசுகிறார்- என்று அருகில் இருந்த ஒருவர் சொன்னார். நேரு காலம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால்.. கலாம் ஜனாதி பதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது டெல்லியில் இருந்தேன். அதனால் கொஞ்சம் நெருக்கமாக அவரின் குழந்தைகள் அன்பு விசயத்தை பார்த்திருக்கிறேன். ஆனாலும் ஒரு நெருடல் இருக்கிறது. இதுவரை இவர் சென்று வந்த பள்ளிகளின் மொத்த எண்ணிக்கையில் பத்து சதம் கூட தேறாது.. அரசு பள்ளிக்கு அடித்த விசிட்! அத்தனையும் தனியார் பள்ளிகள் தாம். அப்போ.. அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள்… குழந்தைகள் இல்லையா?! கனவு காணவும் அதில் வெற்றி பெறவும் தனியார் பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் தான் உரிமை உள்ளதா..!
~~~~
என் வாகனம் புதிது என்பதால்.. 1500 கி.மீட்டர் வரைக்கும் 30 முதல் 40 கி.மீட்டருக்கு மேல் வேகம் கூடாது என்று சொல்லி அனுப்பினார்கள். அதற்கு மேல் வேகம் போனால் வாகனம் தினறுகிறது. சரி என்று நானும் அவர்கள் சொன்னவிதமே போனால்.. சைக்கிளில் போகிறவன் என்னை ஓவர் டேக் செய்து போகிறான். ஆட்டோக்காரன் கிண்டலாக சைடு கொடுத்து இம்சிக்கிறான். எவனையுமே கண்டுகொள்ளாமல் நான் பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறேன். லக்கி பலமுறை சொல்லி இருக்கிறான். சென்னை நகருக்குள் இரு சக்கரவாகனத்தின் வேகம் 40 கி.மீ. அதன் படி போனால் தேவையில்லாமல் எந்த சிக்னலிலும் காத்திருக்க வேண்டியதிருக்காது என்று. அது உண்மை தான். முப்பதிலிருந்து நாற்பதற்குள் போவதால் ரெட் சிக்னலில் மாட்டுக்கொள்வதில்லை. எங்காவது மாட்டிக்கொண்டாலும் கூட சில நிமிடங்களுக்கு மேல் காத்திருந்ததில்லை. சென்னைக்குள் பாதுகாப்பான பயணத்திற்கு இரு சக்கர ஓட்டிகள் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் வண்டி ஓட்டினால் நல்லது. என்ன சில நேரங்களில் கைக்கிளில் போகிறவரும் நடந்து போகிறவரும் நம்மைக் கடந்து போகக்கூடும்.
~~~~
ஜே.கே ரித்தீஷ் நடித்த ‘நாயகன்’ பார்த்தேன். உண்மையில் படம் நன்றாக இருக்கிறது. நடிப்பதற்கு அவர் நன்றாக முயற்சி செய்கிறார். படத்தை ஜாலியாக ரசிக்க முடிகிறது. ராஜேந்தர், விஜயகாந்த், சரத், ரஜினி, கமல் போன்றவர்கள் எல்லாம் டூயட் பாடி ஆடும் போது நிச்சயம் ரித்தீஷும் ஆடலாம். கொஞ்சம் கொஞ்சமாக நான் ரித்தீஷின் ரசிகனாக மாறிக்கொண்டிருக்கிறேன்.
~~~~
பதிவர் சந்திப்புக்கு நிறைய புதுப்பதிவர்கள் வந்திருந்தார்கள். நேரம் ஆறு மணி என்று குறிப்பிட்டிருந்ததாலோ என்னவோ.. நம்மவர்கள் கொஞ்சம் லேட்டாக வர இருட்டில் பலரின் முகம் மனதில் பதிவாகவே இல்லை. இனிமேல் கொஞ்சம் வெளிச்சம் இருக்கும் போதே சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம். திடீரென சந்திப்புக்கு ஞாநி வந்தது.. தொடர்ந்து தமிழ்ப்பதிவுகளை கவனித்துக்கொண்டு இருக்கிறார் என்பதைக்காட்டுகிறது. அவரைப் பற்றி நம்மவர்கள் எழுதும் பதிவுகளையும் படிப்பார் என்றே நம்புகிறேன்.
~~~~
September 29th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
கொஞ்ச நாளாக முன்னை மாதிரி வலைப்பதிவுகள் பக்கம் தலைகாட்டவோ எழுதவோ முடிவதில்லை. நிறைய புதிய பதிவர்கள் வந்து கொண்டிருப்பது தமிழ்மணத்தை பார்க்கும் போது அறிய முடிகிறது. இதில் இன்னொன்றும் முக்கியமானதாக படுகிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரையிலும்
//இனி இட்லிவடை பதிவு படிக்க விரும்புவோர் நேராக இங்கே வந்து பதிவு இருந்தால் படித்துக்கொள்ளுங்கள். இனி எந்த திரட்டிகளிலும் பதிவுகள் வராது. பிகு: இட்லிவடையில் செய்தி இல்லை என்றால் ஜெயா டிவி பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்
உங்களுக்கு விருப்பம் இருந்தால் கீழே செய்தியோடை இருக்கு //
என்று தனது வலைப்பதிவின் சைட் பாரில் எழுதி வைத்திருந்த இட்லி வடை தமிழ்மணத்தில் மீண்டும் வரத்தொடங்கி இருக்கிறது. திரட்டியில் பதிவுகள் வராது என்று அதுவே சொல்லிய பின்னும் எப்படி பதிவுகள் மட்டும் தமிழ்மணத்தில் வருகின்றன என்பது மட்டும் விளங்கவில்லை. தமிழ்மணமே விரும்பி திரட்டிக்கொள்கிறதா..? என்ற தகவலும் தெரியவில்லை. சசி வந்து பதில் கொடுத்தால் புண்ணியமாகப் போகும்.
~~~~

http://bp0.blogger.com/_QxpmZtfzoIU/R4spyrgpQUI/AAAAAAAABE0/ykfwG7YHFpQ/s1600-h/honda_aviator_04.jpg
என் நீண்ட நாள் ஆசையான சொந்த வாகனம் வாங்குவது சனிக்கிழமையன்று நிறைவேறியது. புதிதாக வாங்கியிருக்கும் இருசக்கர வாகனம் ஹோண்டா ஏவியேட்டர். இது ஹோண்டா ஆக்டிவாவின் அடுத்த வெர்சன் எனக்கொள்ளலாம். நேற்று தங்கமணியுடன் நண்பர் ப்ரியன் வீட்டில் மதியம் உணவருந்த போயிருந்தேன். கென், அகிலன், ப்ரேம் குமார், (மற்ற இருவரின் பெயர்கள் நினைவில்லை) போன்ற நண்பர்கள் எங்களுக்கு முன்பே காத்திருந்தனர். நாங்கள் போனதும் சிறிது நேரத்திலேயே பந்திக்கு போய்விட்டோம் எல்லோரும். சைவத்துக்கு ஒரு வரிசை, அசைவத்துக்கு ஒரு வரிசை என ஒதுக்கப் பட்டிருந்தது. வழக்கம் போல நானும் தங்கமணியும் எதிரெதிர் கோஷ்டியில் சேர்ந்து கொண்டோம். சாப்பாடும் நன்றாக இருந்தது. காதல் கவிஞன் ப்ரியன் விழுந்து விழுந்து விருந்துபசாரம் செய்தார். தம்பி கென் வழக்கம்போல புலம்ப ஆரம்பித்து விட்டான். யாராவது அவனுக்கு பெண் பார்த்துகொடுத்தால்.. உங்கள் பெயரைச்சொல்லி அவனுக்கு நான் மொட்டை போட்டு விடுகிறேன். கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்க சாமீ!
~~~~
அதிமுக தலைவி ஜெயலலிதா சமீபகாலமாக புள்ளியை தவிர்த்து வருகிறார். புரியவில்லையா.. ஜெ.ஜெயலலிதா என்று எழுதி வந்த அவரது பெயரை ரத்தத்தின் ரத்தங்கள் ஜெ (ஸ்பேஸ்) ஜெயலலிதா என்றே எழுதுகின்றனர். அவரின் இஃப்தார் விருந்து அழைப்பதிலில் கூட இந்த மாற்றத்தைக்காண முடியும். எந்த சோதிடன் சொல்லிக்கொடுத்தானோ.. தெரியவைல்லை. தங்குதடையின்றி பயணத்துக்கு புள்ளி கூட தடையாகி விடும் என்று எவனாவது சொல்லி இருப்பானோ..?!!
~~~~
தலீவர் புர்ச்சி கலீஞ்சர்.. விஜயகாந்த் கொஞ்ச நாட்கள் முன்பு வரை திமுக-வின் குடும்ப அரசியலை கடுமையாக சாடி வந்தார். ஆனால் சமீபத்தில் தொடங்கப்பட்ட தேமுதிக-வின் இளைஞர் பாசறையின் மாநில செயலர் யார் தெரியுமா..? தனது மைத்துனர் சுதீஷைத்தான் நியமித்து இருக்கிறார். ஊருக்குத்தான் உபதேசம் என்பது புர்ச்சி கலீஞ்சர் விசயத்திலுமா? கவுத்தீடியே கேப்டன்
September 17th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
இந்த தளத்தின் பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்க முடியாமல் போனதால்.. சில பதிவுகளை.. இங்கே பதிவு செய்திருந்தேன். அதனை பார்க்காத பலர் போனில் பதிவு எழுதுவதில்லையா என்று கேட்டார்கள். அவர்களைன் பார்வைக்காகவே இதனை எழுதுகிறேன். அதில் விடுபட்டவை 12 செப் 08 என்று கூட ஒரு பதிவு எழுதிவிட்டேன். தகவல் தராமல் அங்கே போய் பதிவு போட்டமைக்கு மன்னிக்கவும். அவ்வப்போது அங்கேயும் கும்மிகள் தொடரலாம்!!
-=000=-
அரசு இயந்திரம் தாமதமாக செயல்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால்.. அந்த தாமதத்தினால்.. எத்தனை பேர் அவதிக்குள்ளாகிறார்கள் என்று நேரடியான அனுபவம் கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னால் தமிழக அரசு ஓர் ஆணை பிறப்பித்ததாக செய்தி வெளியானது. வெளியூரில் இருந்த தால் உடனடியாக செயலில் இறங்க முடியவில்லை. இன்று சமயம் கிடைத்தது. இண்டேன், பாரத் கியாஸ் இரண்டு ஏஜென்ஸிகளுக்கும் போய் பார்த்து விட்டேன். ரேஷன் கார்டு இல்லாமல் கியாஸ் கிடையாது என்றார்கள். அரசின் ஆணை குறித்து கேட்ட போது, “ அரசாங்கம் ஆயிரம் சட்டம் போடும் சார், எங்க மேலிடத்திலிருந்து(IOC) எந்த தகவலும் இல்லாமல் நாங்க புக்கிங் செய்யமுடியாது” என்று விரட்டியடித்து விட்டார்கள். தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணிக்கேட்டால்.. நாங்க ஆடர் பாஸ் பண்ணிவிட்டோம். சீக்கரம் அவங்களும் பாஸ் பண்ணுவாங்கன்னு நெனைக்கிறோம்னு பதில் கிடைத்தது.
இரண்டு ஏஜென்ஸியிலும் மக்க்கள் கூட்டம் அலை மோதுகிறது, தினமும் புதிதுபுதிதாக வந்து விசாரித்து விட்டுப் போகிறார்கள். சரி.. நிலைமை இப்படி என்றால்.., ரேஷன் அலுவலகம் போனால் கார்டு கிடைக்க குறைந்தது 45 நாட்கள் ஆகும் என்கிறார்கள். சைடில் பணம் கொடுத்தால் விரைந்து கிடைக்க ஏற்பாடு செய்யலாம் என்று சிலர் அலைகிறார்கள். வரும் போது வரட்டும் என்று வந்து விட்டேன். ஊழல் அதிகரிப்பது இப்படித்தான் போலும்.
எனக்கு ரேஷனில் கொடுக்கும் எந்த பொருளும் தேவையில்லை. குடிமகன் அடையாளத்திற்கு மட்டும் போதும். அது இருந்தால் தான் என்னால் கியாஸ், வங்கிகணக்கு, டிரைவிங் லைசன்ஸ் போன்ற மற்ற எல்லா காரியங்களையும் செய்ய முடியும். இதற்கு வழி இருக்கிறதா தெரியவில்லை. கடந்த ஆட்சியில் “H-முத்திரை” கார்டு என்று ஒன்று இருந்தது. இப்போது இருக்கிறதா தெரியவில்லை. யாராவது தகவல் சொன்னால் மகிழ்வேன்.
=-000-=
நம்ம ஆளுங்க செய்ற அலும்புக்கு அலவே இல்லாம போயிடுச்சி.. கே.வி. தங்கபாலுவை தலைவராக்கினதுக்கு சென்னையின் பல இடங்களில் நன்றி தெரிவிச்சு.. சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு, இன்னும் அப்படியே இருக்கு. அதில் ஒண்ணு தான் இது. திருமதி. சோனியாகாந்தி எப்போது தியாகத்தலைவி ஆனாங்க? பிரதமர் பதவிக்கு நேரடியாக அமரவில்லை என்பதற்காக.. தியாகத் தலைவின்னு சொல்லுறது எல்லாம் கொஞ்சம் ஓவரத்தெரியலை.
-=000=-
ஏதாவது பிரச்சனையா 100க்கு கால்பண்ணு! சேதாரமா 102க்கு கால் பண்ணு! விபத்தா 103க்கு கால் பண்ணு! என்று காவல்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத் துறை போன்றவற்றுக்கு தனித்தனியா எண்கள் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது அரசு எல்லாவற்றுக்கும் சேர்த்து “108” என்ற என்ற எண்ணை அறிமுகம் செய்திருக்கிறது. இனி.. எல்லோரும் இந்த எண்ணை நினைவில் வைத்திருங்கள்.
அது போல ரயில் பயணம் செய்யும் போது (தமிழகத்திற்குள்) எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒரு போன் செய்தால் போதும், உங்கள் வண்டி அடுத்த நிறுத்தத்தில் நிற்கும் போது ரயில்வே காவலர்கள் உதவிக்கு வந்து நிற்பார்கள். இந்த எண்ணை அறிமுகம் செய்து வைத பின், முக்கியமான குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எனக்குத்தெரிந்த சிலர் இச்சேவையை பயன்படுத்தி பார்த்துவிட்டு ரயில்வே போலீசை புகழ்ந்து தள்ளினார்கள். நீங்களும் எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் எப்போதாவது உதவலாம்..! Rail Help:- 9962 500 500
=-000-=
கூகிள் குரோம் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது போல.. மைக்ரோசாப்ட் தனது CODE-ஐ குரோமில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். விபரத்திற்கு இங்கே போகவும்!