August 20th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

வலைப்பதிவு தோழர்களை நான் முறையாக வெத்தலைப்பாக்கு வைத்து தான் அழைக்க வேண்டும் என்பதில்லை. நான் அழைக்காமலேயே கலந்துகொள்வார்கள் என்றாலும், நிகழ்ச்சி எங்கே, எப்போது நடக்கிறது என்று தெரியப்படுத்துவதற்காக இந்த அழைப்பிதழ்!

நூல் வெளியிடுபவர் :
தோழர் ஆர்.நல்லக்கண்ணு

நூலினை பெற்றுக்கொள்பவர் :
தோழி ரேவதி, திருநங்கை

வாழ்த்துரை :
தோழர் ஆதவன் தீட்சண்யா
தோழர் பாட்டாளி

ஏற்புரை :
அடியேன்

நாள் : 31-08-2008, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி

இடம் : ஸ்ரீபார்வதி மினி ஹால்,
28/160, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
(மியூசிக் வேர்ல்டு அருகில், கிழக்கு பதிப்பகம் எதிரில்)

அவசியம் வாங்க! அன்போடு அழைக்கிறேன்!!

பணிநிமித்தம் நான் வெளியூரில் இருப்பதால் நண்பர்களின் தொலைபேசி அழைப்பை எடுக்க இயலாத நிலையில் இருக்கலாம். எனவே இந்த விழா தொடர்பாக ஏதாவது பேசுவதாக இருந்தால் என் தம்பி லக்கிலுக்கிடம் 9841354308 என்ற தொடர்பு எண்ணில் பேசலாம்.

தோழமையுடன்
யெஸ். பாலபாரதி.

June 10th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

தசாவதாரம் படம் வரும் ஜூன் 13ல் ரிலீஸ் ஆகிறது. 8ம் தேதி அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பமானது. என் நண்பர் ஒருவர், நல்ல தியேட்டரில்.. டிக்கெட் புக் செய்யலாம் என்று நினைத்து அதிகாலையிலையே அலாரம் வைத்து எழுந்து சத்யம் வலைப்பத்திற்குள் போக முயன்றால்.. போக முடியவில்லை. சி-பானல் பாஸ்வேர்ட்& யூசர் நேம் கேட்டிருக்கிரது தளம். சரி.. ஏதோ வேலை நடக்கிறது என்று நினைத்த நண்பர் கொஞ்ச நேரம் கழித்து போகலாம் என்று திரும்பி வந்துவிட்டார்.

சிறிது நேரம் கழ்ழித்து போய் பார்த்து இருக்கிறார். அப்போதும் சைட்டில் வேலை நடப்பதாக தளம் காட்ட.. குழம்பிய நண்பர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டார். அதன் வரிசை கீழே..!

 

படத்தின் வலது மூலையில் நேரத்தை நீங்கள் பார்க்கலாம்..

 
 

 

இதிலும் நேரத்தை பார்த்துக்கொள்ளுங்கள்!

என்ன நேரத்தைப் பார்த்து என்ன செய்யுறது.. யாருமே நுழைய முடியாமல் இருந்த தளம் திறக்கப்பட்ட போது.. எல்லா டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்து.. ஹவுஸ் புல் போர்ட் போட்டிருக்கிரார்கள். வெறுத்துப் போய்.. தியேட்டர்காரர்களிடம் பேசி இருக்கிறார் நண்பர். சரியான பதில் கிடைக்க வில்லை. சரி.. தியேட்டரில் போய் விசாரிக்கலாம் என்று போனால்.. அங்கே முதல் நாள் காட்சியின் டிக்கெட் ப்ளாக்கில் விற்றுக் கொண்டிருந்திருக்கிறார்கள். விலை. ரூ 350/-.

இது பற்றி நண்பர்கள் சிலருடம் பேசிய போது எல்லோரும் கார்ப்பரேட் புக்கிங்காக இருக்கலாம் என்றார்கள். ஆனால்.. அப்படி என்றால்.. ப்ளாகில் எப்படி கிடைக்கிறது. கார்ப்பரேட் புக்கிங் எனில் “இத்தனை நாட்களுக்கு கார்ப்பரேட் புக்கிங்” என்று அதை தளத்தில் எழுதி வைப்பதில் என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது.

கவுண்டர் சேல்ஸும் கிடையாது, ஆன் லைன் சேல்ஸும் கிடையாது.. ஆனால்.. ப்ளாக்கில் கிடைகிறது.. இது எப்படி சாத்தியம்..?? தியேட்டருக்கு தெரியாமல் நடக்குமா? பிரபலமான தியேட்டரே இப்படியான கள்ள சந்தையை உருவாக்குகிறார்களோ..என்றும் சந்தேகிக்கிறார் நண்பர். இரண்டு முறை மெயிலும் அனுப்பி வைத்திருக்கிறார். தியேட்டர் நிர்வாகம் என்ன பதில் சொல்லப் போகிறதோ?!

April 4th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

இது வலைப்பதிவுகளின் காலம். பத்திரிக்கை உலகிற்கு எழுதி அனுப்பி விட்டு, காத்திருந்த காலம் மலையேறி வருகிறது. பத்திரிக்கைகள் வலைப் பதிவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. நல்ல எழுத்துக்கள் அடையாளம் காணப்பட்டும் வருகின்றன.

ப்ளாக் வைத்து, அதில் எழுதுவதைக்கொண்டே.. பத்திரிக்கை உலகில் நுழைந்து முழுநேர பத்திரிக்கையாளர்களாக மாறிய சிலரையும் நான் சென்னையில் பார்த்திருக்கிறேன்.

பிரபலமான அனைத்துப் பத்திரிக்கைகளிலும் எழுதி புகழ்பெற்ற எழுத்தாளர்கள்.. வலை உலகினை நோக்கி படையெடுக்கத்தொடங்கி இருக்கிறார்கள். இன்று குறுகிய அளவில் இருக்கும் அவர்களின் எண்ணிக்கை நாளை நிச்சயம் அதிகரிக்கும் என்றே நம்பலாம்.

சுஜாதாவின் அயோத்யாமண்டபமாகட்டும், ஞாநியின் மு.க குறித்த கட்டுரையாகட்டும், ஜெயமோகனின் வலைப்பக்கத்திலிருந்து நீக்கப்பட்ட அந்த இரு இடுக்கையாகட்டும்.. தமிழகச்சூழலில் எதிர்ப்பு கிளம்புவதற்கு முன்.. முதல் எதிர்ப்பை பதிவு செய்தவர்கள் நம் வலைப்பதிவர்கள் என்பதில் நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.

எந்தவொரு பிம்பங்களுக்கும் மயங்கிவிடாமல் தைரியமாக எதிர்ப்பை பதிவு செய்யும் நம்மவர்களின் எழுத்து.. சுவாரஸியத்திற்கும் பிரபலங்களோடு போட்டி போடுவது எவராலும் மறுக்கவியலா உண்மை.

பத்திரிக்கைகளுக்கான சுவாரஸ்யத்தோடு அட்டகாசமான தகவல்களை புதைத்து வைத்திருக்கின்றன இணையப் பக்கங்கள். அவற்றிலிருந்து.. என்ற அறிமுகத்தோடு ஏப்ரல்2008 “மல்லிகைமகள்” இதழில்.. ”வலை வீசம்மா..வலைவீசு” என்ற பகுதியை தொடங்கி இருக்கிறார்கள்.

மா.சிவக்குமார், புதுகைத்தென்றல், பாரதி(எ)தமிழ்நிதி - ஆகிய மூவரின் படைப்புகள் வந்துள்ளது. மூவருக்கும் வாழ்த்துக்கள்.

வலைப்பதிவுகளில் இருந்து பல்வேறு செய்திகளை தொடர்ந்து தொகுக்கப் போகிறார்கள். இதோ.. இந்த மாத இதழின் சுட்டி இங்கே.. இதனை கிளிக் செய்தும் படிக்கலாம். அல்லது ரைட்கிளிக் செய்து,சேவ் அஸ் கொடுத்து சேமிக்கவும் (சேமித்தும் படிக்கலாம்) செய்யலாம்.

ம.கா.சிவஞானம் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளி வரும் மல்லிகைமகளின் ஏழாவது இதழ் இது. விகடன் குழுமத்தில் இருந்து வெளி வந்துகொண்டிருக்கும் அவள்விகடனின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர் இவர். ஓர் உண்மையைச் சொல்லவேண்டுமென்றால்.. அவள் விகடனின் புது வடிவம் இவரது எண்ணமே! 

பெரிய நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மல்லிகைமகளில் ஜொலிக்கிறது. வி.உஷாவின் தொடர்கதை  வருகிறது. கேள்வி பதில் பகுதி, சோதிடம், சமையல் என்று எல்லாமே இருக்கிறது. பெண்களுக்கான இதழ் என்றாலும் பொதுவான பல்சுவை நோக்கிலும் இருப்பதால் ஆண்களும் விரும்பும் படியான இதழாகவே மல்லிகைமகள் இருக்கிறது.

தொடர்பு முகவரி:-

மல்லிகைமகள்,
8, சுப்பரணியநகர் பிரதான சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை-600024.
தொலைபேசி044-24803253.
மின்னஞ்சல்:- malligaidesk@gmail.com