விடுபட்டவை 17 செப் 08
இந்த தளத்தின் பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்க முடியாமல் போனதால்.. சில பதிவுகளை.. இங்கே பதிவு செய்திருந்தேன். அதனை பார்க்காத பலர் போனில் பதிவு எழுதுவதில்லையா என்று கேட்டார்கள். அவர்களைன் பார்வைக்காகவே இதனை எழுதுகிறேன். அதில் விடுபட்டவை 12 செப் 08 என்று கூட ஒரு பதிவு எழுதிவிட்டேன். தகவல் தராமல் அங்கே போய் பதிவு போட்டமைக்கு மன்னிக்கவும். அவ்வப்போது அங்கேயும் கும்மிகள் தொடரலாம்!!
-=000=-
அரசு இயந்திரம் தாமதமாக செயல்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால்.. அந்த தாமதத்தினால்.. எத்தனை பேர் அவதிக்குள்ளாகிறார்கள் என்று நேரடியான அனுபவம் கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னால் தமிழக அரசு ஓர் ஆணை பிறப்பித்ததாக செய்தி வெளியானது. வெளியூரில் இருந்த தால் உடனடியாக செயலில் இறங்க முடியவில்லை. இன்று சமயம் கிடைத்தது. இண்டேன், பாரத் கியாஸ் இரண்டு ஏஜென்ஸிகளுக்கும் போய் பார்த்து விட்டேன். ரேஷன் கார்டு இல்லாமல் கியாஸ் கிடையாது என்றார்கள். அரசின் ஆணை குறித்து கேட்ட போது, “ அரசாங்கம் ஆயிரம் சட்டம் போடும் சார், எங்க மேலிடத்திலிருந்து(IOC) எந்த தகவலும் இல்லாமல் நாங்க புக்கிங் செய்யமுடியாது” என்று விரட்டியடித்து விட்டார்கள். தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணிக்கேட்டால்.. நாங்க ஆடர் பாஸ் பண்ணிவிட்டோம். சீக்கரம் அவங்களும் பாஸ் பண்ணுவாங்கன்னு நெனைக்கிறோம்னு பதில் கிடைத்தது.
இரண்டு ஏஜென்ஸியிலும் மக்க்கள் கூட்டம் அலை மோதுகிறது, தினமும் புதிதுபுதிதாக வந்து விசாரித்து விட்டுப் போகிறார்கள். சரி.. நிலைமை இப்படி என்றால்.., ரேஷன் அலுவலகம் போனால் கார்டு கிடைக்க குறைந்தது 45 நாட்கள் ஆகும் என்கிறார்கள். சைடில் பணம் கொடுத்தால் விரைந்து கிடைக்க ஏற்பாடு செய்யலாம் என்று சிலர் அலைகிறார்கள். வரும் போது வரட்டும் என்று வந்து விட்டேன். ஊழல் அதிகரிப்பது இப்படித்தான் போலும்.
எனக்கு ரேஷனில் கொடுக்கும் எந்த பொருளும் தேவையில்லை. குடிமகன் அடையாளத்திற்கு மட்டும் போதும். அது இருந்தால் தான் என்னால் கியாஸ், வங்கிகணக்கு, டிரைவிங் லைசன்ஸ் போன்ற மற்ற எல்லா காரியங்களையும் செய்ய முடியும். இதற்கு வழி இருக்கிறதா தெரியவில்லை. கடந்த ஆட்சியில் “H-முத்திரை” கார்டு என்று ஒன்று இருந்தது. இப்போது இருக்கிறதா தெரியவில்லை. யாராவது தகவல் சொன்னால் மகிழ்வேன்.
=-000-=
நம்ம ஆளுங்க செய்ற அலும்புக்கு அலவே இல்லாம போயிடுச்சி.. கே.வி. தங்கபாலுவை தலைவராக்கினதுக்கு சென்னையின் பல இடங்களில் நன்றி தெரிவிச்சு.. சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு, இன்னும் அப்படியே இருக்கு. அதில் ஒண்ணு தான் இது. திருமதி. சோனியாகாந்தி எப்போது தியாகத்தலைவி ஆனாங்க? பிரதமர் பதவிக்கு நேரடியாக அமரவில்லை என்பதற்காக.. தியாகத் தலைவின்னு சொல்லுறது எல்லாம் கொஞ்சம் ஓவரத்தெரியலை.
-=000=-
ஏதாவது பிரச்சனையா 100க்கு கால்பண்ணு! சேதாரமா 102க்கு கால் பண்ணு! விபத்தா 103க்கு கால் பண்ணு! என்று காவல்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத் துறை போன்றவற்றுக்கு தனித்தனியா எண்கள் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது அரசு எல்லாவற்றுக்கும் சேர்த்து “108” என்ற என்ற எண்ணை அறிமுகம் செய்திருக்கிறது. இனி.. எல்லோரும் இந்த எண்ணை நினைவில் வைத்திருங்கள்.
அது போல ரயில் பயணம் செய்யும் போது (தமிழகத்திற்குள்) எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒரு போன் செய்தால் போதும், உங்கள் வண்டி அடுத்த நிறுத்தத்தில் நிற்கும் போது ரயில்வே காவலர்கள் உதவிக்கு வந்து நிற்பார்கள். இந்த எண்ணை அறிமுகம் செய்து வைத பின், முக்கியமான குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எனக்குத்தெரிந்த சிலர் இச்சேவையை பயன்படுத்தி பார்த்துவிட்டு ரயில்வே போலீசை புகழ்ந்து தள்ளினார்கள். நீங்களும் எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் எப்போதாவது உதவலாம்..! Rail Help:- 9962 500 500
=-000-=
கூகிள் குரோம் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது போல.. மைக்ரோசாப்ட் தனது CODE-ஐ குரோமில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். விபரத்திற்கு இங்கே போகவும்!








