♗யெஸ்.பாலபாரதி ♗ on March 4th, 2010

கேள்வி :- அய்யா நீங்கள் ஏற்கனவே கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக் கூடாது என்று  சொல்லியிருக்கிறீர்கள்.    இப்போதெல்லாம் மடாதிபதி களால்  ஆசிரமங்களில் அத்துமீறல் நடப்பதாக  அடிக்கடி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறதே?

(திருச்சியில் 03/03/10 அன்று நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு முதல்வரின் பதில் கீழே)

கலைஞர் :- சமீப காலமாக  அத்தகைய செயல்கள் அதிகமாகத் தான் நடக் கின்றன.    அது பற்றி ஆலோசித்து,  எத்தகைய நடவடிக்கையை  அரசு மேற்கொள்ளலாம் என்பது குறித்து முடிவெடுக்க  அரசின் சார்பிலும் அறநிலையத் துறையின் சார்பிலும் அமைந்துள்ள  குழுவினைக் கூட்டுவோம்.

%

மடாதிபதிகளே கொஞ்சம் உஷாரு..! :)

%%%%%%%%

இது எங்கள் ஊர் செய்தி..

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள வடகாடு கிராமத்திற்கு, 34 ஆண்டுகளுக்குப்பின் பஸ் விடப்பட்டுள்ளதால், இங்குள்ளோர் மகிழ்ச்சியில் உள்ளனர். ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து மட்டுமே இருந்து வந்த நிலையில், ராமநாதசுவாமி கோயிலில் 1975 ல் நடந்த கும்பாபிஷேகத்தையொட்டி, ராமேஸ்வரம் தீவுப்பகுதிக்குள் மட்டும் இயங்கும் வகையில், தமிழக அரசால் டவுன் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது.

அன்றைய நாளில் தனுஷ்கோடி துறைமுகப்பகுதி வரை ரோடு வசதியும் இருந்ததால், ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனுக்குமாக 10 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. 1988ல் பாம்பன் கடலில் ரோடு பாலம் திறக்கப்பட்டு, வெளியூர் பஸ்போக்குவரத்தும் துவங்கியது. நாளடைவில் தீவு பகுதியில் டவுன் பஸ்களும் இயக்கப்பட்டன. ஆனால், ராமேஸ்வரத்திலிருந்து ஏழு கி.மீ., தூரத்தில் உள்ள வடகாடு கிராமத்திற்கு மட்டும் பஸ் இயக்கவில்லை. இந்த கிராமத்தினர் பல இன்னல்களுக்கு ஆளாகினர் . இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் இங்கு ரோடு வசதியே ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், 34 ஆண்டுகளுக்குப்பின் தற்போதுதான், இக்கிராமத்திற்கு(மார்ச் 1 முதல் ) டவுன் பஸ் விடப்பட்டுள்ளது. “தினம் மூன்று முறை பஸ் சென்று வருவதால்  மகிழ்ச்சி தருவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.

இராமேஸ்வரத்தின் வடக்கு பகுதில் இந்த கிராமம் உள்ளது. 2000ம் ஆண்டில் காலையில்
ஒரு பேருந்து, மாலையில் ஒரு பேருந்து என சில மாதங்கள் இயக்கினார்கள். ஆனால்..
தங்களின் தேவைக்கு ஏற்ற நேரத்தில் பேருந்துகள் வருவதில்லையென.. அப்பகுதி மக்கள்
பேருந்துகளை புறக்கணித்தனர். இதோ.. இப்போது கூடுதல் பேருந்துகள் விடப்படுவது என்பது
மகிழ்ச்சியானது.
-----------------
பத்திரிக்கைகளுக்கு மட்டுமல்ல.. வலை உலகில் கூட கொஞ்ச நாளுக்கு நித்தியானந்தா தான்
விற்பனை பொருள் போல தெரிகிறது. என்சாய்ய்ய்ய் மக்கள்’ஸ்!
---------
எதுவும் செய்யத்துணியுங்கள்.. ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை மட்டும்
பார்க்க துணிய வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
சரியான, மகா, மோசமான மொக்கைப் படம் அது.
ஏ.ஆர். ரகுமான் ஆஸ்காருக்கு பிறகு இசையமைத்த முதல் படம் என்றார்கள்.
ஏனோ எனக்கு ரகுமானும் ஏமாற்றிவிட்டதாகவே தோன்றுகிறது. பின்னனி இசை
நாராசமாக இந்தது. இந்த படத்தை பார்ப்பதற்கு நீங்கள் பல மொக்கை படங்களைப் பார்த்து
என்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் பண்ணலாம்.
பதிவர் பினாத்தல் சுரேஷ் அவர்களுக்கு நன்றி.. இந்தப் படம் பத்தி நான் நினைத்தை பாதி
அளவு சொல்லியிருந்தீங்க. அப்புறம்.. தல, வசந்தம்ல வந்த உங்க மழை பத்தின கதை குட்!
ஆனா நோ யுவர் டச்!!)

--------------

Popularity: 7% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Tags: ,

♗யெஸ்.பாலபாரதி ♗ on March 3rd, 2010

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நாள் தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி, பத்திரிக்கைகளின் செய்தி பிரிவுகளுக்கு கூரியரில் ஒரு பார்சல் வந்தது. பார்சலை திறந்து பார்க்கும் வரை யாருக்கும் தெரியாது.. அது இவ்வளவு பெரிய சமாச்சாரம் என்பது. நான்கு பக்க கடிதமும், கூடவே ஒரு சிடியும் இருந்தன அதில். கடித வரிகளை வைத்து அதை எழுதியவர் ஒரு பெண் என்பதை யூகிக்க முடிந்தது. கூடவே சிடியில் இருந்தது 30 நிமிடங்கள் ஓடக்கூடிய அறைக்காட்சிகள். அதில் இருந்த சாமியாரும், தமிழ் திரைப்பட& சீரியல் நடிகையுமானவரும் தமிழகத்திற்கு மிகவும் அறிமுகமான முகங்கள்.

நம்ம அண்ணன் நித்தியானந்த சுவாமிகள்

’கதவை திற காற்று வரட்டும்னு’ சொன்ன.. சாமியார் நித்தியானந்தா கதவைத் திறந்து வைத்துக் கொண்டே குஜாலாக இருந்து விட்டார் போல ;) சாமியாரின் குஜால் வேலைகளில் வெறுப்புற்ற யாரோ ஒரு பெண் பக்தர் சாமியார் நித்தியானந்தாவை ”க்ளோசா” வாட்ச் செய்து, படமாக்கி இருக்கிறார். செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கிறார்.

நன்றி தினகரன் நாளிதழ்

நன்றி தினகரன் நாளிதழ்

இதனை எப்படி வெளிக்கொண்டு வருவது.. என எல்லா நிறுவனங்களும் யோசித்துக்கொண்டிருந்த  நேரத்தில் முதலில் இறங்கி காரியத்தில் வெற்றி பெற்று விட்டது சன் டிவியின் நியூஸ் சானல்!

எது எப்படியோ.. பிரேமானந்தா, திரிவேதி, ஜெயேந்திரன் என தொடரும் பட்டியலில்.. இப்போது நித்தியானந்தா. அடுத்து யாரோ.. நாமும் காத்திருப்போம்.!

இது குறித்த

ரவியின் வீடியோ பதிவு இங்கே!

வால்பையன் எழுதிய பதிவு மிகவும் பிடித்திருந்தது. அதன் சுட்டி இங்கே!

—————–

போன வாரம் ரன்(RANN) என்ற இந்தி படம் பார்த்தேன். பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பு. செய்தி சானல்கள் பற்றிய கதை. அவை GRP மற்றும் TRP போன்றவற்றிற்காக என்னவெல்லாம் செய்கின்றன என்பதை சொல்லும் கதை. செய்தி ஊடகங்களில் அரசியல் பின்னனி பற்றியும் அதில் வெளிவரும் பிரேக்@ பிளாஷ் நியூஸுக்கு பின்னால் இருக்கும் செய்திபற்றியும் தைரியமாக பேசுகிறது படம். அமிதாப் தான் பிரதான கேரட்டர். மனிதர் என்னமாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். செய்தி சானல்களில் செய்திகளை நிர்ணையிப்பவை விளம்பரங்கள் தான் என்ற உண்மையை சொல்லி இருப்பதாலேயே இப்படம் எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

சாதாரண மக்கள் செய்திகளை வெளிக்கொண்டு வரும் ஊடகங்களில் பணி ஏதோ சமூக சேவை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சானல்கள் டாப் ஒன்னாக வர என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கிறது என்பதையும் இப்படம் கோடிட்டு காட்டுகிறது. மேலும் விளம்பரங்களே.. செய்திகளின் தன்மையையும் செய்தி நிகழ்ச்சிகளின் தலைப்பையும் தீர்மானிக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.  என்னதான் எடிட்டர், சப்-எடிட்டர்.. ரிப்போர்ட்டர் என ஊடகவியலாளர்கள் இருந்தாலும், ஊடகவியல் படித்திருந்தாலும் செய்திகளை தீர்மானிப்பது அவர்கள் அல்ல.. எம்.பி.ஏ படித்த மார்கெட்டிங் மனிதர்களே! முதலாளிகளுக்கு வருமானம் தரும் இன்னொரு வேலை தான் செய்தி சானல்கள்.

படம் பற்றிய ஆங்கில விமர்சம் இங்கே!

படத்தின் டிரைலர்.. இங்கே!! இதில் பின்னால் பாடப்படும் பாடலை கவனமாக கேளுங்கள்.. :)

——————–

கடைகளில் கிரெடிட்கார்டு பயன்படுத்துபவரா.. நீங்கள்! கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளிநாடுகளைப் போல இங்கேயும் கிரெடிட் கார்டு திருடர்கள் அதிகரித்து விட்டனர். ஸ்வைப் செய்ய கொடுக்கும் போது உங்கள் கண் எதிரிலேயே கார்டை பயன்படுத்துமாறு கவனித்துக்கொள்ளுங்கள்.. உங்கள் டேட்டா திருடப்பட்டு வேறு எங்கோ உங்களில் கார்டு பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இது பற்றிய வீடியோ செய்தி ஒன்றை விரைவில் வலையேற்றுகிறேன்.

—————

Popularity: 17% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Tags: , , , ,

♗யெஸ்.பாலபாரதி ♗ on February 27th, 2010

தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதா எவ்வளவு பெரிய ஆளுமை என்பது மறுவாசிப்பில் தான் உணர முடிகிறது. பஸு-ல் பொன்ஸ் கொடுத்த சுட்டி மூலம் சுஜாதாலஜி என்ற வலைப்பக்கத்தை பார்க்க முடிந்தது. அதைல் சமீப காலமாக நான் சுஜாத்தாவைப் பற்றி சொல்லி வருவதையெல்லாம் எழுத்தாக காண முடிகின்ற போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. :) அவரின் சில /பல ஐடியாலஜியில் உடன் பாடு இல்லாவிட்டாலும் அவரது எழுத்துக்கு நான் ரசிகன்.

சிறுகதைகளும், கட்டுரைகளும் போல ஏனோ நாவல்கள் (கணேஷ் + வசந்த் கூட்டனி தவிர) என்னை பெரியதாக ஈர்க்கவில்லை. ஆனால் அவரது அனேக எழுத்துக்களை நான் நூலகத்தில் தான் படித்திருக்கிறேன்.  என் சேமிப்பில் அவரது நூல்கள் ஏதும் இருந்ததில்லை. இந்த முறை புத்தக கண்காட்சியில் சில நூல்களை வாங்கினேன். அனைத்தையும் வாசித்தாகிவிட்டது.. மற்ற அவரது நூல்களை விரைவில் வாங்கவேண்டும் என திட்டம் உள்ளது.

W.R. வரதராஜனின் மரணம் யாரை உலுக்கியதோ.. இல்லையோ.. என்னை நிச்சயம் உலுக்கியது. பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர். ஆங்கில அறிவு அதிகம் பெற்றவர். ஆனால்.. அந்த அறிவை அகங்காரமாக வெளிப்படுத்திக்கொள்ளாதவர். அனேக வட நாட்டு மார்க்சிஸ்ட்டுகளின் தமிழக வருகையின் போது பொழிபெயர்ப்பாளராக இருந்தவர். ஒரு முறை கூட காகிதத்தில் மொழிபெயர்ப்பு குறிப்பு எடுத்து பார்த்ததில்லை. வடநாட்டு காம்ரேட் ஆங்கிலத்தில்.. பேச..பேச.. தமிழில் அருவி மாதிரி மொழிபெயர்த்துச்சொல்லிக்கொண்டே போவார் டபில்யூ.ஆர்.வி.

அவர் கடந்த பிப்ரவரி 11ம் தேதி கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார். போரூர் ஏரியில் இறங்கி இறந்து போனதாக சொல்லப்படும் தோழர் வரதராஜனுக்கு நீச்சல் நன்கு தெரியும் என்பது ஒருவர் சொன்ன செய்தி.

மார்சிஸ்ட் கட்சி வெளியிட்டிருக்கும்..

தோழர். உ.ரா. வரதராசனின் வாழ்க்கைக் குறிப்பு

தோழர் உ.ரா. வரதராசன் 9.7.1945 அன்று, அன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள உள்ளியநல்லூர் என்ற கிராமத்தில் ஒரு மத்திய தர வர்க்க குடும்பத்தில் முதல் பிள்ளையாகப் பிறந்தார். அவரது தந்தை ரயில்வே நிலைய அதிகாரியாகப் பணியாற்றியவர்.

சென்னை விவேகானந்தா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரிக் காலத்திலேயே அவருக்கு இலக்கியம் மீதும், அரசியல் மீதும் ஈடுபாடு ஏற்பட்டது. சர்வோதயா இயக்கத்திலும் பின்னர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தலைமையிலான தமிழரசு கழகத்திலும் இணைந்து பணியாற்றினார். அவர் நடத்தி வந்த “செங்கோல்” பத்திரிகைக்கு உறுதுணையாக இருந்தார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறினார்.

தோழர் உ.ரா. வரதராசன் சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், மொழிப் பெயர்ப்பாளர், “பார்வதிபுரம்” என்ற நாவலை எழுதி சர்வோதாய இயக்கத்தின் பரிசினைப் பெற்றவர். “அருவி” என்ற இலக்கிய சிற்றிதழையும் மாணவப் பருவத்திலேயே நடத்தியுள்ளார். இதில் தமிழகத்தின் ஏராளமான எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.

1967ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கிப் பணியில் சேர்ந்த அவர் 17 ஆண்டுகள் வங்கிப் பணியில் இருந்தார். அப்போது, ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கத்தின் அகில இந்திய செயலாளராக பணியாற்றியுள்ளார். வங்கி ஊழியர் சம்மேளனத்தை உருவாக்குவதில் ஈடுபட்ட முன்னணித் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அதுபோல் கூட்டுறவு ஊழியர்களை அணி திரட்டுவதிலும் பெரும் பங்காற்றினார்.

ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது, ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கம் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. அந்த போராட்டக் களத்தில் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்ட அவர் 1969ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

1984ஆம் ஆண்டு, வங்கிப் பணியைத் துறந்து, கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றத் துவங்கினார். கட்சியின் சென்னை மாவட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். 

இவர் மீது ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டை காரணம் காட்டி கட்சி அவரை பதவியிறக்கம் செய்தது. இது குறித்து ஒரு மார்க்சிஸ்ட் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னார்.., “30 வயசில் இன்னும் நான் பேச்சிலராகவே காலம் தள்ளிகிட்டு இருக்கேன். ஒரு பொண்ணுங்களைக்கூட என்னால கவர் முடியலை. WRV 65 வசசிலேயும் ஒரு பெண்னை கவர்ந்திருக்கார்னா.. அது பெரிய விசயம் பாலா.., இதையெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும். இதுக்கெல்லாம் கட்சியில் நடவடிக்கை எடுக்கிறவங்க.. என்ன சொல்லுறதுன்னே தெரியலை” என்றார் மிகுந்த வேதனையோடு..!

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால்.. இனி இது போல ஒரு மனிதரை அந்த கட்சி தயார் செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகும்.. என்பது கேள்வி.
————–

அண்மையில் கிழக்கு பதிப்பகத்தின் “ராஜீவ் கொலை வழக்கு” நூலை வாசித்து முடித்தேன். சூடம் ஏற்றி, அணைத்து சொல்லுவேன்.. அது நிச்சயம் ரகோத்தமன் எழுதியது அல்ல. வேறு ஒருவர் எழுதி இருக்கிறார்.

ஆனந்த விகடனில் ஜக்கி வாசுதேவ் தொடர் எழுதி பிரபலமான போது.. தொடரின் கடைசியில் அந்த தொடரை சுவை பட எழுதியது சுபா என்று போட்டிருந்தார்கள். அது போல இந்த நூலை தொகுத்தவரின் பெயரையும் போட்டிருக்கலாம் என்பது என் கருத்து.

கிழக்கு பதிப்பகத்தில் பல புத்தகங்களை வாசித்திருப்பவர்கள் யாராக இருப்பினும் இந்த நூலை வாசித்தால்.. எழுதியது யார் என்று சொல்லி விட முடியும். :)

—–

Popularity: 5% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Tags: