October 17th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

இனிய நண்பர்களே,
தேசம் முழுக்க நமது அண்டை நாட்டில் வாழும் தமிழ்ச் சகோதரர்களின் துயர் துடைக்க குரல்கள் ஒங்கி ஒலித்தவண்ணம் இருக்கும் போது வலைப்பதிவர்களாகிய நாம் மட்டும் எப்படி சும்மா இருக்க முடியும்?
வீதியில் இறங்கி போராடவோ, கொடி பிடித்து கோஷம் போட்டுக் கொண்டு நடக்கவோ நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்? அதனால் நமது ஆதரவுக் குரலை இயன்ற விதத்தில் ஒலிக்க முயற்சிக்கலாம்.
மேலே நீங்கள் பார்க்கும் படம் மடிந்து கொண்டிருக்கும் நம் அப்பாவி சகோதரர்களுக்கு ஆதரவுக் குரலாகவும் இந்திய அரசுக்கு கண்டனக் குரலாகவும் ஒலிக்கட்டும்.
இன உணர்வுடைய ஒவ்வொரு தமிழ் வலைப்பதிவரும் இப்படத்தை தங்களது வலைப்பதிவில் சேர்த்து நம் ஆதரவை வெளிப்படுத்துவோம். இதற்கான code கீழே இருக்கிறது.
குறிப்பு: என்னுடைய குறைந்தபட்ச தொழில் நுட்ப அறிவைக் கொண்டு உருவாக்கியிருக்கும் இந்த பேனரை இன்னும் சிறப்பாக யாரேனும் வடிவமைத்துத் தந்தால் நானும் அதற்கு மாறத் தயார்.
October 14th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
இன்று மாலை தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துகட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இங்கே!
தீ ர் மா ன ம் 1.
இலங்கையில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிற இனப் படுகொலைக் கொடுமைக்கு உள்ளாகி ஆயிரக் கணக்கான தமிழ்க் குடும்பங்களில் பூவும் பிஞ்சும் போன்ற குழந்தைகள் கூட கொல்லப்பட்டு பூண்டற்றுப் போகிற அளவுக்கு நிலைமை; நாளுக்கு நாள் பெருகி வருவதால் ஏற்கனவே கண்ணீர்க் கடலில் மிதக்கும் இலங்கைத் தமிழர்கள்; சிங்கள இராணு வத்தின் தாக்குதலையும் கண்டு; எங்களுக்கு அபயமளித்துக் காப்பாற்ற இந்த உலகில் நாதியே கிடையாதா? என்ற கவலையில், வாடி வதங்கி, இதற்கோர் விடிவு எப்போது ஏற்படும் என்று விழி கலங்கி வழி பார்த்து நிற்கின்றனர். இந்தப் போர் நிறுத்தப்பட்டு ஈழத்தில் அமைதியும் சக வாழ்வும் திரும்புவதற்கேற்ற நடவடிக்கைகளை இந்தியப் பேரரசு உடனடியாக எடுத்து அதனை நிறைவேற்றிட வேண்டுமென்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீ ர் மா ன ம் 2.
இந்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆயுத உதவி, வழங்கி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பக்கத்து நாடு என்ற முறை யில் நல்லெண்ண அடிப்படையில் இந்திய அரசால் வழங்கப்படும் இவ்வகை உதவிகள் - இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தி தமிழர்களை அழித்திடவே - இலங்கை அரசால் பயன்படுத்தப்படு வதால் அவற்றை மத்திய அரசு உடனடியாக நிறுத்திட வேண்டுமென்று இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீ ர் மா ன ம் 3.
இந்தத் தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவும் இலங்கையில் இரண்டு வாரக் காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன்வரா விட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்பதை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது.
தீ ர் மா ன ம் 4.
போர் நிறுத்தம் செய்யப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக இடம் பெயர்ந்து வாழ்வதற்கும், உணவு, உறையுள், மருந்து போன்றவற்றை வழங்குவதோடு, மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் செய்வதற்கும் மத்திய அரசு முன் வரவேண்டுமென்று இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீ ர் மா ன ம் 5.
மனிதாபிமான முறையில் பல்வேறு உதவிகளை வழங்க முன் வரும் தொண்டு நிறுவனங்களின் முயற்சிகள் வேறு வழிகளில் திருப்பி விடப்படாமல், பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாகச் சென்றடைவதற்கு ஏற்ற வகையில் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வ தேச அமைப்புகளின் துணையினை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீ ர் மா ன ம் 6.
வாழ்வாதாரம் தேடி கடலுக்குள் மீன் பிடித்திடச் செல்லும் தமிழக மீனவர்களை - இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குவதும், சிறைப்பிடித்து மனித நேயமற்ற முறையில் நடத்துவதும், கருணை துளியுமின்றி சுட்டுக் கொல்வதுமான கொடுமைகள் - தொடர்ந்து நடைபெற்று வருவதை அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் மிகவும் கண்டிப்பதோடு; மனித நாகரிகமற்ற, மனித உரிமைகளை முழுவதுமாக மீறுகின்ற இச்செயல்களுக்கு மத்திய அரசு உடனடியாக நீடித்த நிலையான தீர்வொன்றை எட்டி, நடைமுறைப்படுத்திட வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறது.
***
October 10th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
மும்பை

~~~
டெல்லி (தில்லி)

~~~
பெங்களூரு..

~~~
மைசூர்..
.JPG)
~~~
தமிழ்நாடு

எங்கள் வாழ்வும்..
எங்கள் வளமும்…
