Aug
10
ஆள்பாதி ஆடை மீதி
க்ளோஸ் அப்ல ஒரு போட்டோ. அல்லது பேனா கொண்டு மூக்கை குத்துவது போலவோ, கண்ணத்தில் கை வைத்து மோட்டு வளையை பார்த்த மேனிக்கோ, ஒருவாரமோ, ஒரு மாசமோ மழிக்காத தாடி மீசையுடன் இருந்தால் சிறப்பு.
பிரதி மட்டுமே மிச்சம். ஆசிரியன் செத்துவிட்டான்னு சொல்லிகிட்டாலும் நாளைக்கு நீங்க புத்தகம் போடும் போது கடைசி அட்டையில போட்டோ போட இதுமாதிரி புகைப்படங்கள் உதவும். பேண்ட் சட்டை எல்லாம் வேலைக்கு ஆவாது. அதனால.. நல்லதா நாலு ஜோடி ஜிப்பா வாங்கி [...]
Tags: இலக்கியவாதி, உலக சினிமா, எழுத்தாளர்கள், கபடி, கவிதை, சிறுகதை, நகைச்சுவை, பகடி
நகைச்சுவை, பதிவர் சதுரம் ;-)), புனைவு
Apr
08
“என்னங்க, சொன்னது ஞாபகம் இருக்கா?”
தூங்கிக் கொண்டிருந்த தன் மூன்று வயது மகளுக்கு முத்தம் கொடுத்து விட்டு, சட்டை பட்டனை மாட்டிக்கொண்டிருந்த பன்னீர் “ம்”மென்று புரியாதவனைப் போல சரஸ்வதியை பார்த்தான். “உங்களுக்குன்னு எங்கன இருந்துதா இப்படி மறதி வருதோ” என ஆரம்பித்தவளை “விசயத்தை சொல்லுறியா” என இடைமறித்தான்.
“க்கூம், இதுக்கொன்னும் குறச்சலில்ல. ஊர்லேர்ந்து தம்பி ராத்திரிக்கு வந்துரும். அதுக்கு மட்டன் எடுத்துப் போட வேண்டாமா? சேட்டுகிட்ட சொல்லி ‘கர்ச்சா’ வாங்கி வாங்க. முடிஞ்சா நாளைக்கு ‘ச்சுட்டி’யும் கேட்டுப் பாருங்க.
“சரி.. சரி” [...]
Tags: சமூகம், சிறுகதை
சிறுகதை, புனைவு
Apr
07
அங்காடி தெரு- நிச்சயம் ஒரு நல்ல படம். கடைநிலை மனிதர்களின் வாழ்க்கையை பிரபதிலிக்கும் முயற்சி. படத்தின் நீளம் சில இடங்களில் பாடல்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்திற்கு பின்னனி இசையும் கூட ஏனோ சரியாக இல்லை என்றே தோன்றுகிறது. ஜெயமோகனின் வசனம் மிக கூர்மையாக எழுதப்பட்டுள்ளது. தனது நான்காவது படத்திலேயே சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் ஜெமோ. நிச்சயம் நல்ல எதிர்காலம் அவருக்கு சினிமா உலகில் உண்டு!
வசந்த பாலனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. இதுமாதிரியான ஒரு கதைக் கருவை எடுத்தமைக்காக..! அதே [...]
Tags: அனுபவம், அரசியல், சிறுகதை, திரைப்படம், விமர்சனம்
அனுபவம், அரசியல், சினிமாப் பார்வை, விடுபட்டவை