இன்று காலை மீண்டும் என் கைபேசியில் பையன் மூச்சா போய்விட்டான். பழைய கைபேசியையும் இது போல ஒரு சந்தர்ப்பத்தில் சாவடித்துவிட்டதால் புதியது வாங்க வேண்டியதிருந்தது (அது பற்றி இங்கே:- http://216.185.103.157/~balabhar/blog/?p=786 ). இந்த கைபேசி வாங்கி ஒரு மாதமே ஆன நிலையில், வழமை போல இதற்கும் வேட்டு வைத்தாயிற்று.
எப்படித்தான் குழந்தைகளுக்கு தெரிகிறதோ.. நாம் பயன்படுத்தும் முக்கியமானவற்றை சிதைக்கவேண்டுமென. 🙁
ஆனது தான் ஆயிற்று, கைபேசி வாங்கி ஒருமாதம் தான் ஆகிறது என்பதால் சென்னையில் இக்கைபேசியின் ஊழிய நடுவத்தில் கொடுக்கலாம் என்று தேடினால், அது அண்ணாநகரில் இருக்கிறது. நான் அங்கு போய் வருவதற்குள் தாவு தீர்ந்துவிடும் என்பதால்.. வேறு வழிகள் ஏதேணும் இருக்குமா என்று அவர்களுக்கு தொலைபேசிப் பார்த்தேன். இருந்த ஒரு வழியும் அடைக்கப்பட்டு விட்டது. ’தண்ணீரில் விழுந்த /தண்ணீர் விழுந்த எந்த மொபைலுக்கும் வாரண்டி பயன்படாது சார். நீங்க காசு கொடுத்து தான் சர்வீஸ் பண்ணனும்’ என்ற பதில் கிடைத்தது.
நமக்கு தெரிந்த வைத்தியதை செய்யலாம் என்று நினைத்து கைபேசியை கழற்றி, ஒருமணி நேரம் வெயிலில் காயவைத்து எடுத்து பயன்படுத்திப் பார்த்தேன். ஒழுங்காக வேலை செய்தது. பெரியதாக பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால்.. மதியத்திற்கு பின் திரையில் வெறும் வெள்ளை வண்ணம் மட்டுமே மிளிர்கிறது. ஒரு எழுத்துக்களையும் காணவில்லை. ஒருவேலை சிறுநீரினால் உள்ளே இருந்த எழுத்துக்கள் அழிந்துவிட்டதோ என்னவோ.
அழைப்பு வந்தால் பேச முடிகிறது. நினைவில் இருக்கும் எண்களைச் சுழற்றி சிலரை அழைக்கவும் முடிகிறது. ஆனால் அடிக்கடி சப்தமெழுப்பியபடி வந்து விழும் குறுஞ்செய்தியோ, அழைப்பவரின் பெயரோ தெரியாமல் கைபேசியை பயன்படுத்துவது என்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. முன்பு நான் தவற விடும் அழைப்புகள் ஏதேனும் இருந்தால் திரும்பவும் அழைத்து பேசி வந்தேன். இனி அது முடியாது. அழைப்பு வரும் போதே எடுத்தால் தான் உண்டு.
நாளை எப்படியாகினும் சரி செய்தாகவேண்டும். இதற்கிடையில் நான் தவறவிடும் அழைப்புகளுக்காக நண்பர்கள் என்னை பொருத்தருள்வீர்களாக.
//தவறவிடும் அழைப்புகளுக்காக..பொருத்தருள்வீர்!//
அதைப்போலவே சிற்ச்சில வேளைகளில் தவறான லொக்கேசன்களில் நடைபெறும் சிறுநீர் டெலிவரி சம்பவங்களினையும் பொருத்தருள்வீராக !
அட ஒரு ரெண்டு 3 வாட்டிமூச்சா போனதுக்கு போஸ்ட்டெல்லாம் போட்டு என்னிய டேமேஜ் பண்றாரு பாஸ் ந்னு பர்சனலா கனிவமுதன் கேட்டுக்கொண்டதற்கிணங்க
ஒரு கண்டனமும் கூட!
இங்ஙனம்
கனிவமுதன் பேரவை
வாரன்டி இருந்தாலும் வேஸ்ட்டுங்க, “பழைய டேட்டாவெல்லாம் போய்டும், OS flashஹ் பண்ணும்போது ஃபோனே வேலை செய்யவும் போகாம வாய்ப்பிருக்கு. தேவலையஅ”ன்னு முன்னறிவிப்போடதான்ஆரம்பிப்பாங்க. பேசாம ரிச்சி தெருவை சரணடையவும். துணிஞ்சவனுக்கு துக்கமில்ல, அழுதவனுக்கு வெக்கமில்ல.
//அட ஒரு ரெண்டு 3 வாட்டிமூச்சா போனதுக்கு போஸ்ட்டெல்லாம் போட்டு என்னிய டேமேஜ் பண்றாரு பாஸ் ந்னு பர்சனலா கனிவமுதன் கேட்டுக்கொண்டதற்கிணங்க// ஆயிலு… அதுக்குள்ள.. புள்ளைக்கு இப்பவே ட்ரைனிங்க் கொடுங்க ஆரம்பிச்சிடுவீங்க போலிருக்கேயா… அவ்வ்வ்!
—
க்ருபா, நானும் அதேதான் முடிவுக்கு வந்திருக்கேன். நேரம் கிடைச்சதும் போகனும் அதுவரை இம்சை தான். 🙁