Category Archives: பெரியார் வரலாறு

பெரியாரும் நானும்..

எனக்குள் பெரியாரின் விதை விழுந்ததற்கு என் அப்பாவிற்கு என்றும் நன்றி சொல்லக்கடமைப் பட்டிருக்கிறேன். சோசலிச காங்கிரஸ்வாதியான அவருக்கு பெரியாரின் மீது எப்போதும் ஒரு பற்று இருந்தது. அதனால் தான் என் சின்ன சகோதரியை திராவிடர் கழகம் நடத்தும் கல்லூரியில் தான் சேர்த்தார். என் வாழ்க்கையில் நான் பெரிதும் வியக்கும் மனிதர் என்றால் அது ஈ.வெ.ரா தான். … Continue reading

Posted in பெரியார் வரலாறு, விளம்பரம் | Tagged , , | 4 Comments

12. பதவிகளை தூக்கி எறிந்த ஈ.வெ.ராமசாமி

வெங்கட்டர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப் பட்டிருக்கும் போது அவர் பெயரில் தர்மங்கள் செய்வதற்கு ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தும் முயற்சியில் ஈ.வெ.ரா ஈடுபட்டார். ஆனால் இதற்கு ஈ.வெ.ராவின் அண்ணன் கிருஷ்ணசாமி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தான் நினைத்ததைச் செய்து முடித்தார் ராமசாமி. ஆண்டொன்றுக்கு குடும்ப சொத்திலிருந்து ரூபாய் இருபதாயிரம் வரை வருமானம் வரும். … Continue reading

Posted in பெரியார் வரலாறு | Tagged , | 3 Comments

11. ஈ.வெ.ராமசாமி் நிர்வகித்த கோவில் பணி

வெங்கட்டரின் வரத்து குறைந்தது ஒரு வகையில் ஈ.வெ.ராவுக்கு நிம்மதியாக இருந்தது. சாதி, மத வேறுபாடுகளை கண்டுகொள்ளாமல் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள் என எல்லாப் பிரிவினருடனும் கலந்து பழகுவதற்கு ஏதுவாக இருந்தது. எப்பொழுதும் கடையில் பத்துக்கும் குறையாத நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அவர்களின் புகை, மது போன்ற மேலாதிக்க பழக்கங்களுக்கு ஈ.வெ.ராவே புரவலராக … Continue reading

Posted in பெரியார் வரலாறு | Tagged , , | 4 Comments

10. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்..

ஒரு வழியாக முகவரியைக்கொண்டு சுப்பிரமணிய பிள்ளையின் வீட்டைக் கண்டு பிடித்தார் வெங்கட்டர். வீட்டின் வாசலின் நின்று கொண்டு, கதவு எண்களை சரி பார்த்துக்கொண்டார். நேரமோ.. நடு நிசியை நெருங்கிக்கொண்டிருந்தது. கதவைத் தட்டுவதில் கொஞ்சம் தயக்கம் காட்டினார் வெங்கட்டர். அவருடன் இருந்தவர்கள் பரவாயில்லை கதவைத் தட்டுங்கள் என்று சொன்னார்கள். வேறு வழி தெரியவில்லை. தான் தேடி வந்தது … Continue reading

Posted in பெரியார் வரலாறு | 3 Comments

9. மாட்டிக்கொண்ட ஈ.வெ.ரா.

சில நாட்களாக இல்லை. சில மாதங்களாக.. ராமசாமியைக் காணாமல் மிகவும் வருந்தினார் வெங்கட்டர். மனைவி சின்னதாய்யம்மையாரோ.. பித்து பிடித்த நிலைக்கு ஆளானவர் போல.. புலம்பியபடியே இருந்தார். மறுபக்கம் நாகம்மையின் கண்ணீர். என்ன செய்வதென்று தெரிய வில்லை. வியாபாரத்தையும் சரியாக கவனிக்க முடியவில்லை. ஈ.வெ.ரா.வின் அன்றைய நெருங்கிய நண்பரான ப.வெ.மாணிக்க நாயக்கருக்கு கடிதம் எழுதினார் வெங்கட்டர். இவர் … Continue reading

Posted in பெரியார் வரலாறு | 3 Comments