மரப்பாச்சி சொன்ன ரகசியம்- முழு சிறார் நாவலும் இங்கே:
முன்னுரை
அன்பான தம்பி, தங்கைகளே!
இந்த கதையின்வழி உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஷாலினி என்ற சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. ஒருநாள் திடீரென அது பேசவும், ஆடவும் ஓடவும் செய்கிறது. ஷாலினி தோழி பூஜா என்பவளுக்கு ஒரு சங்கடம் நேர்கிறது. அதுவும் வெளியில் எல்லோரிடம் எளிதாகச் சொல்லிவிடமுடியாத பிரச்சனை. அவளுக்கு ஷாலுவின் மரப்பாச்சி உதவுகிறது.
இது ஏதோ ஒரு பூஜாவின் பிரச்சனை மட்டுமல்ல. நம்மிடையே வெளியே தெரியாமல் பல பூஜாக்கள் உண்டு. அவர்களுக்கு உதவுவதும், தைரியம் கொடுப்பதும் கூட நமது பணிதான். இதை வெறும் கதையாக கடந்துபோய்விட வேண்டாம். இது பற்றி, உங்கள் அம்மா அப்பாவிடமும், தோழிகளிடமும் மனம் திறந்து பேசுங்கள். தெளிவு கிடைக்கும்.
மரப்பாச்சி உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அதன் சாகசத்தைப் படிக்க, உங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்கிறேன். எப்போதும் என் எழுத்துக்குத் துணை நிற்கும் மனைவி லஷ்மிக்கும், மகன் கனிவமுதனுக்கும் அன்பு!
இன்றுமுதல் (23.04.2022) இந்த கதையை நாட்டுமக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இனி இக்கதை மக்கள் சொத்து, இக்கதை அச்சு வடிவில் பலருக்கும் சென்று சேரவேண்டும் என்னும் எனது ஆசை நிறைவேறட்டும்! நன்றி
ஹாப்பி ரீடிங்!
தோழமையுடன்
யெஸ். பாலபாரதி
yesbalabharathi@gmail.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~