குழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்

மு. கலைவாணன் இப்பெயரை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழகத்தின் இன்றும் பொம்மலாட்டக் கலையைத் தாங்கிபிடித்து நிற்கும் கலைஞர்.

தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவம் சுற்றி வருகிறார்.
பொம்மலாட்டத்தின் வழி, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்துவரும் இவர், குழந்தைகளுக்காகவும் எழுதிவருகிறார்.

அப்படி, இவர் எழுதிய சின்னஞ்சிறுக் கதைகள் அடங்கிய 8 நூற்களைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். 32 பக்க அளவுடைய இக்குட்டி நூற்கள் ஒவ்வொன்றும் ரூ.10/.
8 நூற்களும் சேர்த்து ரூ.80/- மட்டுமே!

 

சின்னச்சின்னக் கதைகள் 1,2
அன்புள்ள குழந்தைகளுக்கு..
நீர் இன்றி
நொறுக்கும் தீனி
வந்தது யார்?
நெகிழி பூதம்

எனும் தலைப்புடைய இந்நூற்களில் இருக்கும் கதைகள் எல்லாமே இவை எல்லாம் பிரச்சாரக்கதைகள்தான் எனினும், அது முகத்தில் அறையாதபடி, கலைவடிவாக அழகாகச் சொல்லி இருக்கிறார்.

உங்கள் பிள்ளைகள் நூல் வாசிப்பின் வழி நல்லவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றோ புதியவற்றை அறிந்துகொள்ளவேண்டும் என்றோ விரும்பும் பெற்றோர் அவசியம் இந்த எட்டு நூல்களையும் வாங்கிக்கொடுக்கலாம்.

பக்கத்திற்குப் பக்கம் படமும், வடிவமைப்பும் காமிஸ்க் புத்தகம் படிக்கும் தோற்றததை ஏற்படுத்துகிறது.

நூற்களைப் பெற விரும்புகின்றவர்கள் கீழ்காணும் எண்ணில் தொடர்பு கொள்ளவேண்டுகிறேன்.

தொடர்பு எண்: 9444147373

This entry was posted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள் and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.