பத்து நாட்கள் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு மூன்று முறை போய் வந்தேன். முதல் முறை இல்லத்தரசியோடு போய் அவருக்கும் எனக்குமான நூல்களை அள்ளிக்கொண்டு வந்தோம். இரண்டாம் முறை தம்பி லக்கியுடன் போய் காமிக்ஸ் புத்தகங்களும், மேலும் சில நூல்களும் அள்ளிக்கொண்டு வந்தேன். மூன்றாவது முறை செய்திக்காக..!
கடந்த ஆண்டை விட இம்முறை விற்பனை குறைவு என்று சொன்னார்கள். அதே போல தன்னம்பிக்கை நூல்களின் விற்பனையும் குறைவு என்று சிலர் சொன்னார்கள். படைப்பிலைக்கிய நூல்களும், கட்டுரை நூல்களும் விற்பனை நன்றாக இருந்ததாகவும் சொன்னார்கள்.
வழக்கமாக புத்தகக் கண்காட்சி சமயத்தில் ஒவ்வொரு வருடமும் நீங்கள் முக்கியமான ஒன்றை கவனித்திருக்கலாம், சாகத்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ——- எழுதிய நூல் இங்கே கிடைக்கும் என்றோ, அல்லது அந்த நூலோ விற்பனைக்கு கிடைக்கும் என்று சின்னதாக விளம்பரம் செய்து வைத்திருப்பார்கள் அனேக கடைகளில்! ஆனால் இம்முறை மேலான்மை பொன்னுச்சாமியின் நூல்களுக்கு அப்படியான விளம்பரம் எங்கும் பார்த்ததாக நினைவு இல்லை. மீனாட்சி புத்தக நிலைய கடையில் அவரின் ஏனைய நூல்கள் கிடைத்த போதிலும் எந்த விளம்பரமும் இல்லை. ஏன்?
—-
தொல். திருமாவளவன் நான்கு நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இன்று போரூர் ராமச்சந்திராவில் காலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உண்ணாநிலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் ஜெயலலிதாவுக்கு எந்த உரிமையும் இல்லை. ஈழத்தில் வாழ்வோடு போராடும் சக தமிழனுக்காக தன் ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார் திருமா. அதனை அரசியல் நோக்கத்தோடு கொச்சைப் படுத்த ஜெயலலிதா மட்டுமல்ல.. ஈழத்து மக்களுக்காக ஒன்றும் செய்யாமல் இருக்கும் எவனுக்குமே அருகதை கிடையாது. மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த அவருக்கு ஒரு ராயல் சல்யூட்!
—-
வரும் 21ம் தேதி சென்னையில் ஒரு நிகழ்வில் புத்த பிக்கு தலாய்லாமா கலந்துகொள்கிறார். புத்த நாடான இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான நடந்து வரும் போர் பற்றி உங்கள் கருத்து என்ன? என்பது போன்ற கேள்விகளுடன் காத்திருக்கிறேன். பார்க்கலாம் அவர் என்ன சொல்கிறார் என்று!! நிச்சயம் நான்கில் ஒரு தலைப்பு செய்திகளில் தலாய்லாமா செய்தியும் இடம் பிடிக்கும்!
—-
இம்முறை சங்கமம் நிகழ்ச்சிக்கு மொத்தமாக 2 கோடி ரூபாய் கிடைத்தது என்று நினைக்கிறேன். இது முன்பெப்போதையும் விட கூடுதல் தொகை. ஆனால்.. முன்னால் நீட்டப்பட்ட அத்துனை மைக்கிலும் நிதி பற்றாக்குறை என்றே குறைபட்டுக்கொண்டார் ‘கனி’மொழி! அப்படி என்னதான்.. செலவுன்னு பட்டியல் ஏதாச்சும் வெளியிட்டாய்ங்கன்னா.. நல்லா இருக்கும்..!
—-
பதிவுலகில் முன்பு போல இயங்க முடியாததால்.. தமிழ்மணத்தின் விருதுகளில் நான் யாருக்கும் வாக்களிக்கவில்லை. அதிகம் படிக்க முடியாததால் இந்நிலையை அடைத்துள்ளேன். (விருது பெரும் அளவுக்கு ஏதும் எழுதவில்லை என்பதால்.. நான் என்பதிவுகளை பரிந்துரைக்கவும் இல்லை)
—-
உங்க நண்பர்களில் யாருக்காவது எதற்காவது வித்தியாசமான வாழ்த்து செய்தி அனுப்ப நினைத்தீர்கள் என்றால்.. http://www.sun7news.com என்ற தளத்திற்கு போய் ஒரு வாழ்த்து அனுப்புங்கள். எதிரில் இருப்பவர் அசந்துவிடுவார்கள். (நன்றி- துளசியம்மா)
———–
முன்பண பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல!
(நீ எழுத வராம எங்களுக்கும் போரடிக்குது!)
//ஈழத்தில் வாழ்வோடு போராடும் சக தமிழனுக்காக தன் ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார் திருமா. அதனை அரசியல் நோக்கத்தோடு கொச்சைப் படுத்த ஜெயலலிதா மட்டுமல்ல.. ஈழத்து மக்களுக்காக ஒன்றும் செய்யாமல் இருக்கும் எவனுக்குமே அருகதை கிடையாது. மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த அவருக்கு ஒரு ராயல் சல்யூட்!//
மறுக்க முடியாத உண்மை!
//வரும் 21ம் தேதி சென்னையில் ஒரு நிகழ்வில் புத்த பிக்கு தலாய்லாமா கலந்துகொள்கிறார். புத்த நாடான இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான நடந்து வரும் போர் பற்றி உங்கள் கருத்து என்ன? என்பது போன்ற கேள்விகளுடன் காத்திருக்கிறேன். பார்க்கலாம் அவர் என்ன சொல்கிறார் என்று!//
நீ ஒரு நாளைக்கு புத்த பிக்கா இருந்து பாருன்னு சொல்லப் போறாரு!
//(விருது பெரும் அளவுக்கு ஏதும் எழுதவில்லை என்பதால்.. நான் என்பதிவுகளை பரிந்துரைக்கவும் இல்லை)//
ஆஸ்கார் விருதுக்கு உம்ம பதிவுகள் பரிந்துரைக்கப் படுகிறதாமே!
வணக்கம்.. அடியேன் ரங்கன்..(பா.க.ச தொண்டன்)
//இம்முறை சங்கமம் நிகழ்ச்சிக்கு மொத்தமாக 2 கோடி ரூபாய் கிடைத்தது என்று நினைக்கிறேன். இது முன்பெப்போதையும் விட கூடுதல் தொகை. ஆனால்.. முன்னால் நீட்டப்பட்ட அத்துனை மைக்கிலும் நிதி பற்றாக்குறை என்றே குறைபட்டுக்கொண்டார் ‘கனி’மொழி! அப்படி என்னதான்.. செலவுன்னு பட்டியல் ஏதாச்சும் வெளியிட்டாய்ங்கன்னா.. நல்லா இருக்கும்..!//
அவங்க குடும்பத்துக்கு எவ்வளோ பணம் வந்தாலும் பத்தாது தல..!!
எப்படியோ…
பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
யோவ்.. சிபி.. பத்து மணிக்கு பிறகு பதிவு போட்டாலும் இப்படியா வந்து பயப்புடுத்துறது..?!
எப்பவாவது அபூர்வமா சான்ஸ் கிடைக்குது தல! உங்க பதிவுல கமெண்ட்(!?) போட!
ரங்கன் (பா.க.ச தொண்டன் ) என்று குறிப்பிட்டதன் மூலம் 5 பவுன் தங்கச் சங்கிலியை உறுதி செய்து கொள்கிறார்!
//தொல். திருமாவளவன் நான்கு நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இன்று போரூர் ராமச்சந்திராவில் காலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உண்ணாநிலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் ஜெயலலிதாவுக்கு எந்த உரிமையும் இல்லை. ஈழத்தில் வாழ்வோடு போராடும் சக தமிழனுக்காக தன் ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார் திருமா. அதனை அரசியல் நோக்கத்தோடு கொச்சைப் படுத்த ஜெயலலிதா மட்டுமல்ல.. ஈழத்து மக்களுக்காக ஒன்றும் செய்யாமல் இருக்கும் எவனுக்குமே அருகதை கிடையாது. மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த அவருக்கு ஒரு ராயல் சல்யூட்!//
உண்ணாநிலையை நான் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவரின் உணர்வுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
//நாமக்கல் சிபி
ரங்கன் (பா.க.ச தொண்டன் ) என்று குறிப்பிட்டதன் மூலம் 5 பவுன் தங்கச் சங்கிலியை உறுதி செய்து கொள்கிறார்!//
ஷார்ஜா கிளை இந்த செய்தியினை உறுதி செய்கிறது
//நாமக்கல் சிபி
முன்பண பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல!
(நீ எழுத வராம எங்களுக்கும் போரடிக்குது!)
//
ரிப்பீட்டே :-))
மாம்ஸ்,
அடுத்த வருச கண்காட்சிக்காவது வந்து எதாவது வாங்கமுடியுமான்னு பார்க்கனும்… 🙂
/ஆனால் இம்முறை மேலான்மை பொன்னுச்சாமியின் நூல்களுக்கு அப்படியான விளம்பரம் எங்கும் பார்த்ததாக நினைவு இல்லை.//
கண்காட்சிக்கு வரும் வழியில் பார்த்ததாக ஞாபகம்.
//மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த அவருக்கு ஒரு ராயல் சல்யூட்!//
நானும் சல்யூட் வச்சிக்கிறேன்.
ஆனா, இத சாக்கா வச்சு சில இளஞ்சிறுத்தைகள் பல அரசுப்பேருந்துகளை எரித்திருக்கிறார்களே… அது நியாயமா தல?
ஒரு நாள் புத்த(க) பிக்கு வேண்டுமானா இருப்பார் தல:-)))
ஒரு நாள் புத்த(க) பிக்கு வேண்டுமானா இருப்பார் தல:-)))
கிகிகி!
🙂
//ஈழத்து மக்களுக்காக ஒன்றும் செய்யாமல் இருக்கும் எவனுக்குமே அருகதை கிடையாது. மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த அவருக்கு ஒரு ராயல் சல்யூட்//
ரிப்பீட்டுக்கிறேன்
அப்பப்ப இந்த மாதிரி கொஞ்சம் எட்டிப் பாருங்க தல 🙂
//ரங்கன் (பா.க.ச தொண்டன் ) என்று குறிப்பிட்டதன் மூலம் 5 பவுன் தங்கச் சங்கிலியை உறுதி செய்து கொள்கிறார்!
//
நானும் பா.க.ச தொண்டன் தான் :)))
//நானும் பா.க.ச தொண்டன் தான் :)//
பா.க.ச தொண்டர்கள் அனைவருக்கும் கட்டாயம் 5 பவுன் சங்கிலி உண்டு என்று தல உறுதி செய்திருக்கிறார்!
மேலும் இன்னும் இரண்டு நாட்களில் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது!
புதிய உறுப்பினர்கள் மூன்று பா.க.ச பதிவுகள் கூட போடத் தேவை இல்லை!
மூன்று பா,க,ச பின்னூட்டங்கள் இட்டாலெ போதுமானது என்றும் அறிவித்திருக்கிறார்!
புதிதாய்ச் சேரும் உறுப்பினர்களுக்கு தன் பிறந்த நாளன்றே
5 பவுன் தங்கச் சங்கிலி அணிவிப்பதோடு, தன் ரத்தத்தால் கையொப்பமிடப்பட்ட உறுப்பினர் அட்டையும் 5 வருடத்திற்கான மாதச் சந்தா தொகைக்கான (ரூ500) பின் தேதியிட்ட காசோலைகளையும் வழங்குவார் என்பதையும் தாயுள்ளத்தோடு அறிவித்திருக்கிறார்!
புதிய உறுப்பினர்கள் பேரலையாக பெருகி வந்த வண்ணம் உள்ளனர் என்று பா.க.ச மூத்த உறுப்பினர்களான பொன்ஸ், நாம் மக்கள், அருள் மற்றும் மா.சி ஆகியோர்களிடமிருந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன!
நானும் ரவுடி தான்!
ச்சே!
நானும் பாகச தொண்டன் தான்! தொண்டன் தான்! தொண்டன் தான்!
8/8 எங்க வீட்டுலே ரெண்டு உறுப்பினர்!
எங்க 5 பவுன் சங்கிலி , 5 பவுன் சங்கிலி , அது எனக்கு த்தான்.. !!
சபையில இதுக்காக எதாவது நான் கவிதை படிக்கணுமா?
//சபையில இதுக்காக எதாவது நான் கவிதை படிக்கணுமா?//
ஐயய்யே! அதெல்லாம் எதுக்கு?
மூணே மூணு பா.க.ச பின்னூட்டம் போட்டால் போதும்!
(உங்க வீட்டுல நீங்க, அணில் குட்டி, பீட்டர் தாத்ஸ் மொத்தம் 3 மெம்பர்ஸ்)
மூணே மூணு பா.க.ச பின்னூட்டம் போட்டால் போதும்!
(உங்க வீட்டுல நீங்க, அணில் குட்டி, பீட்டர் தாத்ஸ் மொத்தம் 3 மெம்பர்ஸ்)//
ம்ம்.. 3 தனியா இல்லாம இங்கே யே போட்டுடவா? ஆனா அந்த ரூ 500/- மேட்டர்.. நீங்க சொன்ன மாதிரியே மாசம் மாசம் கட்டிடுங்க.. எங்க குடும்பம் சார்பாக..
அந்த செயினை மட்டும் அதுவும் 3 , 5 பவுன் செயின் மட்டும் எனக்கு அனுப்பிடுங்க.. ..
சிபி சொன்ன சொல் மாறப்பிடாது..அப்புறம் அணிலுக்கு கோபம் வந்துடும்.. வந்தா.. வீட்டுக்கு வரும்.. சொல்லிட்டேன்.. 🙂
நானும் ரவுடி தான்!
ச்சே! //
யாருப்பா இது தம்பி சென்ஷி இருக்கும் போது இப்படி எல்லாம் சவுண்டு விடறது இங்க… ?!!
அண்ணா மேலாண்மை பொன்னுசாமிக்காக ஒரு பேனர் புத்தககண்காட்சி நுழைவாயில் வழியில் இருந்தது .
ஹேப்பி பர்த்திடே பாலா செல்லம்
பேரலையெனப் பெருகி வந்து கொண்டிருக்கும் புது உறுப்பினர்களின் வசதிக்காக தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை(தங்கச் சங்கிலி வழங்கும் கொண்டாட்டம்) வருகிற சனவரி 31ம் தேதி வரை நீட்டித்திருக்கிறார் நமது பாசமிகு அண்ணன் பால பாரதி அவர்கள்!
– பா.க.ச கொளுகை பரப்புச் செயலாளர்,
திருமங்கலம்,
சென்னை – 40
எங்கள் பாகிஸ்தான் நாட்டிலிருந்து ஒரு 10 லட்சம் பேர் உறுப்பினர் சேர்க்கைக்காக விமான டிக்கெட்டுகள் முன் பதிவு செய்துள்ளார்கள்!
மேலும் இதனையொட்டி பல சிறப்பு விமானங்களை இயக்க முடிவெடுத்திருக்கிறோம்! இது பற்றிய தகவலை இன்று மாலை எங்கள் வெளியுறத்துறை அமைச்சர் அறிவிப்பார்!
நானும் பாகச தொண்டன் தான்! தொண்டன் தான்! தொண்டன் தான்! 😉
//உங்க நண்பர்களில் யாருக்காவது எதற்காவது வித்தியாசமான வாழ்த்து செய்தி அனுப்ப நினைத்தீர்கள் என்றால்.. http://www.sun7news.com என்ற தளத்திற்கு போய் ஒரு வாழ்த்து அனுப்புங்கள். எதிரில் இருப்பவர் அசந்துவிடுவார்கள். (நன்றி- துளசியம்மா)//
சரி எனக்கு ஒண்ணு அனுப்பி விடுங்க !
எங்க வீட்டுல 5 உறுப்பினர் இருக்காங்க. சொல்லிக்கிடலாம்னு வந்தேன்.
செக் அனுப்ப அட்ரஸ் அப்துல்லா தம்பியை கேட்டுக்கங்க.
அவர்கிட்டயே கொடுத்தாலும் வாங்கிக்கிடுதேன். :)))))))
தங்கச் சங்கிலி வழங்கும் கொண்டாட்டம்)
அதுவும் இருக்கா?? சரி அனுப்புங்க வேண்டாம்னு சொனன வருத்தப்படுவீங்க, வேதனைப்படுவீங்க.
நாமக்கல்: puthu memberthane neenga
me: aamam
நாமக்கல்: Add on Credit card marakkama kettu vangikkungka
me: aaha
நாமக்கல்: spl offer – for new members only
பாருங்க. நாங்க புது மெம்பர் அப்படிங்கறதால சிபி சொன்னபடி அதையும் சேத்து அனுப்புங்க.
எங்க வீட்டுல 5 உறுப்பினர்கள் இருக்கோம். மறக்காதீங்க.
:)))))))))
// நானும் ரவுடி தான்!
ச்சே!
நானும் பாகச தொண்டன் தான்! தொண்டன் தான்! தொண்டன் தான்! //
ரிப்பீட்டு.
அடிக்கடி எழுதுங்க தல…:)
இங்க ரிப்பீட்டு போட ஒரு பின்னூட்டம் இருக்குதே ஆ…இதான்…
\\
நாமக்கல் சிபி January 19th, 2009 at 10:07 pm
முன்பண பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல!
(நீ எழுத வராம எங்களுக்கும் போரடிக்குது!)
\\
ரிப்பீட்டு!! 🙂
பாலா,திருமாவளவன் உண்மையிலேயே மதிக்கப்படவேண்டியவர்தான்.உங்கள் பதிவு சென்ற வாரத்தின் ஊடே பயணிப்பது போல் இருந்தது.நானும் சென்ற வாரம் புத்தகக்கண்காட்சி / சென்னைசங்கமம் / வில்லு / படிக்காதவன் என்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தேன்.பொங்கலுக்கும், உங்களுக்கும் நன்றி.
ரீப்பீட்டு!!
தமிழன்-கறுப்பி…
அட இதை போட பின்னூட்டம் எதுவும் தேவையில்லை! அது தால… சும்மா போடுங்க! இதுக்காக போய் பின்னூட்டமெல்லா தேடுவீங்களா… புது மெம்பர்ன்னு நிறுபிச்சிட்டீங்க பார்த்தீங்களா??!!!
ரீப்பீட்டு!!
தமிழன்-கறுப்பி…
அட இதை போட பின்னூட்டம் எதுவும் தேவையில்லை! அது தான் தலயோட ஸ்டைலு! அதே தான் பா.க.சவின் ஸ்டைலும் … சும்மா போடுங்க! இதுக்காக போய் பின்னூட்டமெல்லா தேடுவீங்களா… புது மெம்பர்ன்னு நிரூபிச்சிட்டீங்க பார்த்தீங்களா??!!! இனிமேலாவது பார்த்து நடந்துக்கோங்க :)))))))))
//எங்கள் பாகிஸ்தான் நாட்டிலிருந்து ஒரு 10 லட்சம் பேர் உறுப்பினர் சேர்க்கைக்காக விமான டிக்கெட்டுகள் முன் பதிவு செய்துள்ளார்கள்! மேலும் இதனையொட்டி பல சிறப்பு விமானங்களை இயக்க முடிவெடுத்திருக்கிறோம்!//
எங்க தல இதுக்கெல்லாம் பயப்பட மாட்டாரு…. எவ்வளவு வந்தாலும் தாங்குவாரு! பயப்படாம வாங்க பாஸூ!!
// இது பற்றிய தகவலை இன்று மாலை எங்கள் வெளியுறத்துறை அமைச்சர் அறிவிப்பார்!//
என்னாது வெளியுறவுத்துறை அமைச்சரா… அமைச்சரா … அமைச்சரா….. அட அவரையாது வரசொல்லுங்க!
Pingback: சென்னை புத்தகக் கண்காட்சி 2009- ஜனவரி 8-18 வரை « …மற்றுமொரு துளையுள்ள பானை!
பின்னூட்டம் 1
பின்னூட்டம் 2
பின்னூட்டம் 3
நானும் பாகச தொண்டன் தான்! தொண்டன் தான்! தொண்டன் தான்!
47 ?
48…?
49?
ஹைய்யா!
50 அடிச்சாச்சே!
(அடிசனலா ஒரு 30 பவுன்ல கோல்ட் பிஸ்கட்டா கொடுத்துடுங்க தல)