விடுபட்டவை 29 மார்ச்2010

தமிழகத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் நூல்கள் இதுவரை நாட்டுடமையக்கப் பட்டுள்ளன. இதில் பலரின் பெயர் எனக்கு தெரியாததாக இருக்கிறது. கடந்த முறை தமிழகரசு சிலரின் பெயர்களை முன்மொழிந்தது அதில் சில குடும்பத்தினர்.. உரிமை கொடுப்பதற்கு மறுத்துவிட்டனர். (சுரா,கண்ணதாசன்..மேலும் சில..) அப்படியானவர்களை தவிர்த்து, நாட்டுடமையாக்கப்பட்டவர்களின் பட்டியலும், அவர்களின் நூற்பட்டியலும் தேவைப்படுகிறது. விபரம் தெரிந்தவர்கள்… எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தபதிவு உங்களுக்கு உதவக்கூடும்..

~~~~

கிட்டதட்ட ஒருவருடங்களுக்கு மேலாக என்னால் அதிக அளவில் பதிவர் சந்திப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. அதற்கான சூழல் ஏற்பட வில்லை. வேலை.. வேலை.. என்று மாத ஊதியம் வழங்கும் முதலாளிகளுக்கு பயந்தே நாட்கள் ஓடி விட்டது.  தற்போது என்னை புதுப்பித்துக்கொள்ளவும், சார்ஜ் ஏற்றிக்கொள்ளவும் சில நாட்கள் விடுப்பு கேட்டிருக்கிறேன். நண்பர்கள் சந்திப்பு தான் என்னை எப்போதும் உற்சாகப்படுத்துகிற விசயம்.  வரும் முதல் வாரத்தில் தெரிந்து விடும். விடுப்பு கிடைத்துவிட்டால்.. ஏப்ரல் 11ம் தேதி ஒரு மொக்கை சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிடலாம். ப்ளீஸ்..மக்கா… ஒங்க எல்லார் மொகமும் மறந்துடும் போல இருக்கு!(விடுப்பு உறுதியானதும் சந்திப்பு குறித்தும் பதிவு போடுகிறேன்)

~~~~

சென்னை இணைய எழுத்தாளர்  குழாம் அல்லது பேரவை அல்லது சங்கம் அல்லது இவற்றில் ஒன்று.  அமைப்பு குறித்து இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வரவிருக்கிறதாம். விருப்பமானவர்கள் பதிவர் சந்திப்பு (மற்றும் வெண்ணை 0.01) என்ற பதிவை பார்கலாம். அதிலிருக்கும் மெயில் முகவரில் தொடர்பும் கொள்ளலாம்.

ஏனோ.. என்னால் ஒரு தலைமையின் கீழ் செயல்பட முடியாது என்றே தோன்றுகிறது. இணையவெளி என்பதே ஒரு சுதந்திரமான இடம் என்று எண்ணுகிறேன். சுய சுதந்திரம் பாதிப்புக்குள்ளாக்கும் எந்தவொரு விசயத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது. விருப்பமுள்ளவர்கள் இணைந்துகொள்ளலாம்.  என்னால் இப்படி ஒரு குடையின் கீழ் வரமுடியாது என்று தோன்றுவதால்.. நான் இணையவில்லை. இது குறித்து பலபதிவுகள். அதில் ஒன்று  நண்பர் பாரி.அரசு எழுதிய  பதிவையும் பார்த்துவிடுங்கள் .

நன்றி.. விடுப்பு கிடைத்து விட்டால்.. அடிக்கடி பதிவு பக்கம் தொல்லை கொடுக்கிறேன்.

~~~~

தேவநாதன், நித்தியானந்தா-வுக்கு பிறகு வேறு ஒரு ஆன்மீகவாதியோ, குலகுருவோ சிக்கமாட்டார்களா.. என்று செய்தி ஊடகங்கள் அலையத்தொடங்கி இருப்பவை பற்றியும், படுக்கையறையில் குறிப்பாக சாமியார்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டிய 10வழி முறைகள் குறித்தும்.. சமீபத்திய ‘சண்டே-இந்தியன்’ தமிழ்பதிப்பில் ஒரு கட்டுரை வந்துள்ளது. படித்துப்பார்கவும். :)))

~~~~

This entry was posted in விடுபட்டவை and tagged , , , , . Bookmark the permalink.

41 Responses to விடுபட்டவை 29 மார்ச்2010

  1. ர்ரைட்டு :))

    அப்படியே பிசி பிசின்னு ஓடிட்டுத்தான் இருக்கீரு.. உம்மைப் பார்க்க ஒருத்தன் வெளிநாட்டுலேந்து வந்தாலும் நீரு பிசியாத்தான் இருப்பீரு.. வாழிய வாழியவே!!

  2. சென்ஷி, வெளிநாட்டுலேர்ந்து வரவங்க இருக்கட்டும், வீட்டுக்குள்ள இருக்கறவங்களே போன்ல செகன்ட் லைன்ல பத்து தரம் கூப்பிட்டால்தான் சாப்பிடவோ டீ குடிக்கவோ கூட கிளம்பி வருவாங்கன்னா, பாத்துக்குங்களேன். வீட்டுக்குள்ளயே போன்ல பேசிக்கற கொடுமையெல்லாம் எங்க வீட்டுல மட்டும்தான் நடக்கும்னு நினைக்கறேன். :(((((

  3. kusumbuonly says:

    //ப்ளீஸ்..மக்கா… ஒங்க எல்லார் மொகமும் மறந்துடும் போல இருக்கு!

    அப்பாடா, இதுதான் சூப்பர் சான்ஸ், அப்படியே எல்லோரும் ஓடிபோய்விடலாம்:)

  4. kusumbuonly says:

    //வீட்டுக்குள்ளயே போன்ல பேசிக்கற கொடுமையெல்லாம் எங்க வீட்டுல மட்டும்தான் நடக்கும்னு நினைக்கறேன். ((((//

    அண்ணியின் துயர் துடைக்கும் பொருட்டு தலையை பத்து பேராக கும்மி அண்ணனை வீட்டுக்குள்ளேயே சிறை வைப்போம்:)))

  5. //ஏனோ.. என்னால் ஒரு தலைமையின் கீழ் செயல்பட முடியாது என்றே தோன்றுகிறது. இணையவெளி என்பதே ஒரு சுதந்திரமான இடம் என்று எண்ணுகிறேன். சுய சுதந்திரம் பாதிப்புக்குள்ளாக்கும் எந்தவொரு விசயத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது.//

    அண்ணே! இதே கருத்துதான் எனக்கும். நானும் ஒரு போஸ்ட் போட்டுருக்கேன்.
    http://saravanansarathy.blogspot.com/

    மற்றொன்று 70 பேர் இருந்த கூட்டத்தில் இருந்த குழு அரசியல். 🙁

  6. நான் ஆதவன் says:

    //வீட்டுக்குள்ளயே போன்ல பேசிக்கற கொடுமையெல்லாம் எங்க வீட்டுல மட்டும்தான் நடக்கும்னு நினைக்கறேன். 🙁 ((((//

    அடக்கடவுளே! 🙁

  7. kusumbuonly says:

    //நூற்பட்டியலும் தேவைப்படுகிறது. விபரம் தெரிந்தவர்கள்… எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.//

    பாலபாரதி என்ற எழுத்தாளர் எழுதிய அவன் – அது= அவள் புத்தகம் இதுவரை 132 மொழிகளில் மொழிபெயர்த்து படிக்கிறவனின் முழியையும் பெயர்த்து முன்னனியில் இருப்பதாலும், ஆப்பிரிக்க நூலகங்களில் 1000 பிரதிக்கு மேல் இருப்பதாலும் இவரின் புத்தகமும் நாட்டுடமை இல்லை உலகவுடமை ஆக்கப்பட்டு இருக்கிறது.

  8. பாகச’வை செயல்படாம தடுத்ததுக்காக இப்படி ஏதும் உள்நாட்டு சதி நடக்குதோ என்னமோ :))

  9. kusumbuonly says:

    //ஒரு குடையின் கீழ் வரமுடியாது என்று தோன்றுவதால்//

    அண்ணே அப்ப ரெயின் கோட் கீழாவது வரமுடியுமா என்று யோசிச்சு பாருங்க:))

  10. kusumbuonly says:

    //தேவநாதன், நித்தியானந்தா-வுக்கு பிறகு வேறு ஒரு ஆன்மீகவாதியோ, குலகுருவோ சிக்கமாட்டார்களா.. //

    அண்ணே சீக்கிரம் நல்ல சேதி சொல்லி, எங்க நெஞ்சில் பாலை வாத்துவிடுங்க:))

    இப்படிக்கு லோலோ லோலோ என்று அலையும்
    நித்தி ரசிகர் மன்ற தலைமை பீடாதிபதி
    குசும்பன்

  11. kusumbuonly says:

    //சுய சுதந்திரம் பாதிப்புக்குள்ளாக்கும் எந்தவொரு விசயத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது.//

    ஹி ஹி ஹி எக்ஸ் கியூஸ் மீ யுவர் ஹானர், உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு குட்டி மொட்டையும் இருக்கிறான் என்று நினனவுபடுத்துவது என் கடமை யுவர் ஹானர்:)

    தனிமனித சுதந்திரம் பத்தி கல்யாணம் ஆகியும் பேச்சை பாரு.

  12. @ குசும்பன்…

    எலேய் மாப்ள.. தலையை அடிலேந்து முடி வரைக்கும் வெளுத்து வாங்குறே.. :))

  13. kusumbuonly says:

    //சார்ஜ் ஏற்றிக்கொள்ளவும் சில நாட்கள் விடுப்பு கேட்டிருக்கிறேன்.//

    அண்ணே ஒரு 220v சார்ஜர் ரெடி செஞ்சு வெச்சிடவா? சும்மா அப்படியே தூங்கும் பொழுது உங்க மூக்கில் சொருவிட்டா ஒரு 5 நிமிடத்தில் சார்ஜ் ஆயிடுவீங்க:)

    எப்பொழுதும் தல நலன் விரும்பும்
    பாகச தொண்டன் துபாய் கிளை

  14. குசும்பா.. இது என்ன கொலைவெறி!!

  15. kusumbuonly says:

    //எலேய் மாப்ள.. தலையை அடிலேந்து முடி வரைக்கும் வெளுத்து வாங்குறே.. )//

    எத்தனை நாள் ஏக்கம், அனைத்து பாகச ஆட்களுக்கு SMS அனுப்பி இங்க இன்னைக்கு டேரா போட சொல்லிடு மாப்பி!

    //குசும்பா.. இது என்ன கொலைவெறி!!//

    அல்லோ போஸ்ட் போடுவது வரை தான் உங்க உரிமை இருக்கு, அதன் பிறகு கவனிப்பது எங்க கடமை, இது தனிமனித சுதந்திரம். இதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை. ரொம்ப பேசினா பாகச சங்கம் சார்பா நோட்டிஸ் அனுப்பபடும்.

  16. //@ குசும்பன்…

    எலேய் மாப்ள.. தலையை அடிலேந்து முடி வரைக்கும் வெளுத்து வாங்குறே.. 🙂 )//

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய் 🙂

    பயபுள்ள ரெண்டு நாள் வெயிட்டீஸ் வுட்டு இருந்துச்சு இன்னிக்கு சரியான தீனி :))))

  17. kusumbuonly says:

    //பத்து தரம் கூப்பிட்டால்தான் சாப்பிடவோ டீ குடிக்கவோ கூட கிளம்பி வருவாங்கன்னா, பாத்துக்குங்களேன்.//

    ஒரு முறை கூப்பிட்டு போகவில்லை என்றால் எங்க வீட்டில் எல்லாம் பாத்திரம், தட்டை வைக்கும் “மெண்மையான சவுண்டை” பார்த்தே ஓடி வந்துடுவேன்.நீங்க அப்படி “அன்பா கவனிக்கவில்லை” போல:))

  18. ken says:

    சொந்த வீட்டுக்குள்ளேயே போனா 🙂
    ஆனா உண்மையில தல தானே சமைச்சிட்டு உங்கள சாப்பிட கூப்பிட்டுட்டு நிக்கிறார்

    பாருங்க சார் பாருங்க ஒரு ஆம்பிளைய படுத்துற கொடுமை தட்டி கேட்க யாருமே இல்லையா :)))))))))))))))))

  19. கென், உங்க தல சமைச்சு, அதை நான் சாப்பிடறதா? கல்யாணம் கட்டின ஏழு வருஷத்துக்குள்ளாற எனக்கு எதுனா ஒன்னு கிடக்க ஒன்னு ஆனா, உங்க தல இல்ல சந்தேக லிஸ்ட்டில் உள்ள போக வேண்டிவரும்? என் புருஷனை அந்த மாதிரி எல்லா சிரமப்பட வைக்க கூடாதுன்றதுக்காகவே, நான் இந்த ரிஸ்கெல்லாம் எடுக்கறதில்லை. அத்தோட இப்ப என்னைய நம்பி ஒரு குட்டி ஜீவன் வேற இருக்க்றதால, உங்க தலை வெந்நீர் தவிர வேற எதுவும் சமைப்பதற்கு அனுமதிக்கப் படுவதே இல்லை, இல்லை, இல்லை…. 🙂

  20. kuzhali says:

    //ஏனோ.. என்னால் ஒரு தலைமையின் கீழ் செயல்பட முடியாது என்றே தோன்றுகிறது. இணையவெளி என்பதே ஒரு சுதந்திரமான இடம் என்று எண்ணுகிறேன். சுய சுதந்திரம் பாதிப்புக்குள்ளாக்கும் எந்தவொரு விசயத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது. விருப்பமுள்ளவர்கள் இணைந்துகொள்ளலாம். என்னால் இப்படி ஒரு குடையின் கீழ் வரமுடியாது என்று தோன்றுவதால்.. நான் இணையவில்லை
    //
    ஹி ஹி அப்படியே என்னை மாதிரியே இருக்கிங்க, ஆனா என்ன ஒன்னு என் தலைமையில் எல்லோரும் செயல்படுவதாக இருந்தால் எத்தனை இயக்கங்களிலும் சேரவும் உருவாக்கவும் நான் தயார் :‍‍‍-)

  21. இதுக்குதான் வீட்டுல ப்ளாக் அட்ரஸ் குடுக்க கூடாதுங்கறது….

    மனுசனுக்கு வீட்டுலதான் சுதந்திரமா பேச முடியலன்னா… ப்ளாக்லயுமா..??

    என்ன கொடும இது சரவணா…!!!!

  22. திரு. கண்ணா, அவரு ப்லாக் அட்ரஸ் மட்டும் எனக்கு கிடைக்காம இருந்திருந்தால், எங்க கல்யாணமே நடந்திருக்காதுங்க. ஹ்ம்… இனிமே நடந்ததையெல்லாம் மாத்தவா முடியும்? :((((

  23. பா.க.ச மீண்டும் களை கட்டுகிறது 🙂 🙂 🙂

  24. பூனைக்குட்டி வாலில் காய்ந்த மிளகாயை கட்டிவிட்டால் அது ஆடும் ஆட்டத்தை பாரக்க அருமையாக இருக்கும். அது போல குசும்பனுக்கு இன்று இங்கே நம்ம தல வெகு நாளாக அறுபட்டிருந்த விடுபட்டவைகளை ஒரு இடுகையாக இட்டு மிளகாய் போல கட்டிவிட்டுள்ளார். குசும்பனின் ஆட்டத்தை பார்க்க அனைவருக்கும் செல்லிடபேசியிலிருந்து குறுந்தகவல் அனுப்பிவிட வேண்டியது தான். தமிழ் இணைய உலகம் ரொம்ப வறட்சியாக இருந்தது. தல இடுகையும், நம்ம குசும்பனின் ஆட்டமும் மழைபோல பொழியட்டும்.

  25. //
    லக்ஷ்மி says:
    March 29, 2010 at 10:12 am
    வீட்டுக்குள்ளயே போன்ல பேசிக்கற கொடுமையெல்லாம் எங்க வீட்டுல மட்டும்தான் நடக்கும்னு நினைக்கறேன்.
    //

    வீட்டுக்குள்ள‌ இருந்துட்டு ஃபோன்ல‌தான் பேசுறாரு வ‌ருத்த‌ப்ப‌டுற‌த‌ விட‌, த‌ல‌ வீட்டுல‌தான் இருக்காருன்னு ச‌ந்தோச‌ப்ப‌டுற‌வ‌ங்க‌தான் புத்திசாலி… :))))

  26. //
    இனிமே நடந்ததையெல்லாம் மாத்தவா முடியும்?
    //

    ஆமாங்க‌, மாத்த‌ முடியாது.. த‌ல‌ பாவ‌ம்தான்.. 🙂

  27. //
    ஏப்ரல் 11ம் தேதி ஒரு மொக்கை சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிடலாம்.
    //

    அவ‌சிய‌ம் மீட் ப‌ண்ண‌லாம்…

  28. குசும்பா… உன் க‌மெண்ட்டை எல்லாம் ப‌டிச்சி வாய்விட்டு சிரிச்சிட்டு இருக்கேன்… ரொம்ப‌ நாளாச்சி ஒரு பாச‌க‌ ப‌திவை த‌ட்டிவிடு..

  29. ஏய்ய்ய்ய்…

    யார்டா இங்க தலய கலாக்கிறது????

    கொன்னுருவேன்..கொன்ன்னு.

    அந்த ரைட்ஸ் எனக்கு மட்டும்தான் இருக்கு.

  30. லீவு கிடச்சதும் பதிவ போடுங்க, சந்திபுல மொக்கை நாங்க பார்த்துக்கிறோம்

  31. //இதில் பலரின் பெயர் எனக்கு தெரியாததாக இருக்கிறது //

    தல பேர் மட்டுமா தெரியாது?? நம்ப ரெண்டு பேரும் கண்ணாடியைக் கழட்டிட்டா புக்கே தெரியாது.

  32. //கிட்டதட்ட ஒருவருடங்களுக்கு மேலாக என்னால் அதிக அளவில் பதிவர் சந்திப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை //

    ஒரு வருஷமா பதிவர் சந்திப்பு அதிகமா நடந்ததே நீங்க வரமாட்டிங்கன்னு தெரிஞ்சதாலதான். அது தெரியாம ஃபீல் பண்ணுறாரு பாருய்யா மனுஷன்.

  33. //என்னால் ஒரு தலைமையின் கீழ் செயல்பட முடியாது என்றே தோன்றுகிறது

    //

    நரச்ச தலைக்கு டை அடிக்கிறீங்களே தல. அது ஒ.கேவா??

  34. எங்கடா கண்டுபுடுச்சாய்ங்க எங்க எம்.டியை?!?!?

    ரிலாக்ஸ்டா தலய கலாய்க்கிரப்ப கூப்ட்டுகிட்டு..

    போய்ட்டு அப்புறமா வந்து தலய கவனிச்சுக்கிறேன்.

  35. துபாய் ராஜா says:

    பாலா ரிட்டர்ன்ஸ்… அப்படியே அடிச்சு ஆடு தல…

  36. ஏம்பா… துபாய் ராசா.. அல்லாரும் என்னை போட்டு இந்த தாக்கு தாக்கியிட்டு இருக்கும் போது.. நீ மட்டும் தான்.. ஆறுதலா பேசுன மாதிரி தெரியுது.. ஆனாலும் குசும்பனுக்கு ஐடியா கொடுக்குற மாதிரியும் தோனுதே.. 🙁

    ராசா.. நீ நல்லவனா..? கெட்டவனா?

    :-/

  37. கருத்துக்களை வழி மொழிகிறேன்

  38. குட்டிப்பையன் வீட்டுல இருந்தும் உங்களுக்கு சார்ஜ் ஆகலையா?! வூட்டுக்காரம்மா இது எல்லாம் எப்படி நீங்க கண்டுக்காம விடுறீங்க…

    பா.க.ச உண்மைத் தொண்டன்
    தரமணி , புத்தர் தெரு கிளை.

  39. ராம்கி says:

    பா.க.ச கிளை ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் தல? புதுத் தொண்டனுக்கு வழி காட்டுங்கள்.. லீவு கிடைச்சுடுமா?

  40. Pingback: சென்னையில் பதிவர் சந்திப்பு ஏப்ரல்11.2010..

  41. துபாய் ராஜா says:

    //யெஸ்.பாலபாரதி ♗ says:
    March 29, 2010 at 4:52 pm
    ஏம்பா… துபாய் ராசா.. அல்லாரும் என்னை போட்டு இந்த தாக்கு தாக்கியிட்டு இருக்கும் போது.. நீ மட்டும் தான்.. ஆறுதலா பேசுன மாதிரி தெரியுது.. ஆனாலும் குசும்பனுக்கு ஐடியா கொடுக்குற மாதிரியும் தோனுதே..

    ராசா.. நீ நல்லவனா..? கெட்டவனா?

    :-///

    நான் நல்லவனுக்கும் நல்லவன்தான்.. கெட்டவனுக்கும் நல்லவன் தான்…

    உன்னைமாதிரியே தல….. :))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.