பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர்

எனது முதல்நாவலான ’அவன் -அது +அவள்’ நாவலை வெளியிட முதலில் அணுகியது வயதில் முதிர்ந்த அந்த தலைவரைத்தான். அவருக்கு என்னை நேரடியாகத் தெரியாது என்றபோதும் நிகழ்வுக்கு வர ஒப்புக்கொண்டார். நான் அழைத்தபோது நாவல் அச்சகத்தில் இருந்தது. நூல் கையில் கிடைத்ததும் அதை எடுத்துக்கொண்டு அந்த தலைவரைப் பார்த்து கொடுத்துவிட்டு, நிகழ்வுத்தேதியை நினைவுபடுத்திவிட்டு வந்தேன். ரெண்டாவது நாள் அவரிடம் இருந்து அழைப்பு. நேரில் சென்று பார்த்தேன்.

நாவலைப்பற்றி பாராட்டிவிட்டு, தன்னால் நிகழ்வில் கலந்துகொள்ள இயலாது என்று வருத்தத்துடன் சொன்னார். எனக்கோ பெருத்த ஏமாற்றம். ‘என்னாச்சுங்க தோழர்?’ என்று கேட்டதற்கு, தன்னுடைய இத்தனை ஆண்டுகால பொதுவாழ்க்கையில் திருநங்கை மக்களுக்காக தான் பெரியதாக ஏதும் செய்யவில்லை என்பதோடு, அவர்களில் வாழ்வு இத்தனை துயரமிக்கது என்பதையும் அறியாமல் இருந்துவிட்டேன் என்பதே குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. அதனால் என்னால் கலந்துக்க முடியாது. தப்பா நினைச்சுக்காதிங்க என்று கூறினார். நான் அப்படியே நெகிழ்ந்துபோனேன்.

அவரது அந்த நேர்மை என்போன்ற வளரும் தலைமுறையினருக்கான பாதை. அந்த தலைவர் வேறு யாருமல்ல… இன்று 98வது பிறந்தநாள் கொண்டாடும் மதிப்பு மிக்க தோழர் நல்லகண்ணு அவர்கள் தான் அவர்.

This entry was posted in அனுபவம், ஆவணம், வாழ்த்து and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over a year old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.