விடுபட்டவை 23 August 09

மிகுந்த மகிழ்சியாக உணர்கிறேன். இன்று வெற்றிகரமாக இலங்கை தமிழ்வலைப்பதிவர்களின் சந்திப்பு மிகச்சிறப்பாக நடந்தேறி இருக்கிறது. சந்திப்புக்கு என உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும், சந்திப்பில் கலந்துகொண்டு, மற்றவர்களின் அறிமுகமும் பெற்று, கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். பதிவர்களின் சந்திப்புகள் தொடந்து நடைபெறட்டும். எழுதுவதோடு மட்டுமல்லாமல்.. பல்வேறு வளர்ச்சிக்கும், நமது ஒற்றுமைக்கும் வழி வகுக்கட்டும் சந்திப்புகள். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன்.

சந்திப்பின் ஒலிவடிவம் கேட்க.. மதுவதனன் பதிவுக்கு போகலாம்.

படங்களைக்காண.. வந்தியத்தேவன் மற்றும் ஆதிரை பதிவுக்கு போகலாம்.

—-

”வழிபாட்டுத் தளங்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக” என்ற பெயரில் சீக்கிரமே ஒரு சங்கத்தை தொடங்க வைத்து விடுவார்கள் போலிருக்கிறது. வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மினிமம் 200, அல்லது 300 டெசிபல் சத்தத்தில் பாட்டும், பஜனையுமாக ரணகளப்படுத்தி விட்டார்கள். புதியதாக பிறந்த வாரிசோ, நெட்டி,நெட்டி அழுகிறான். என்ன செய்யமுடியும். தெருவில் இருக்கிற அநேகருக்கும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது என்றாலும், பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற கேள்வியுடனே காத்திருக்கிறார்கள். சந்து விட்டு மெயின் ரோட்டுப்பக்கம் வந்தால் அங்கே ஒரு சிவன் கோவில், கோவில் வாசலில் நிறைய கூட்டம். மெதுவாக நடந்து அருகில் சென்றால்.. பிள்ளையாருக்கு லட்சார்ச்சனை நடந்துகொண்டிருந்தது. அடப்பாவிகளா… ஒரே விழா தான் இரண்டு இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. வீட்டுக்கு அருகில் பாட்டு ஸ்பீக்கர் என்று எல்லம் போட்டு உசிரை எடுக்கிறார்கள். இன்னொரு கோவிலில் அமைதியாக அதுவும் கோவில் வாசலை எட்டிப்பார்த்தால் மட்டுமே கேட்கும்படியான அளவில் ஸ்பீக்கரில் மந்திரங்கள் ஓதப்பட்டுக்கொண்டிருந்தது. இவர்கள் தங்களின் செல்வாக்கை காட்ட, இப்படி ஸ்பீக்கர் எல்லாம் வைத்து அதிக சத்தத்தை உண்டு பண்ணி, நம்மை ஏன் இம்சிக்கிறார்களோ தெரியவில்லை. சங்கத்தை தொடங்கிட வேண்டியது தான் போல!

———

நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்.. நாங்கள் வைத்திருந்த தமிழ்ப்பெயரை குடும்ப பெரிசுகள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை சொல்லி விடுகிறேன். குட்டிப்பையனுக்கு கனிவமுதன் (கனிவு+ அமுதன்) என்று பெயர் சூட்டி இருக்கிறோம். குழந்தைக்கு பெயர் வைப்பதில் உள்ள சிக்கல் குறித்து மறைந்த நண்பர் சாகரன் (தேன்கூடு)எழுதியதை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன். இதனை விட யாரும் சிறப்பாக சொல்லிவிட முடியாது என்றும் நம்புகிறேன். இதோ சாகரனின் பேர் பட்ட பாடு!

————-

எப்படித்தான் தெரிகிறதோ.. இந்த குழந்தைகளுக்கு.. அம்மா சாப்பிட உட்காரும் போது சரியாக ‘கக்கா’ போவதும், இரவு பத்துமணி வரை தூங்கிவிட்டு, இரவு முழுவதும் விழித்திருக்கும் படியும் யார் தான் சொல்லிக்கொடுக்கிறார்களோ தெரியவில்லை. சரியாக விடிகின்ற பொழுதில் கண்ணயர்ந்து தூங்கி விடுகிறான். அந்த சமயத்தில் நமக்கு கண்கள் சொருகினாலும்.. அலுவலகம் போக வேண்டுமே.. கொஞ்ச நாட்களாக பிரஸ் மீட் எதிலுமே நான் உட்காருவதில்லை. அசதியில் தூங்கி விடுவேனோ என்ற பயம் தான் காரணம். கொஞ்ச நாட்களுக்கு ஏ.சி அறைகளை தவிர்த்து விட்டு, பொட்டல் வெளியில் எல்லோரும் பிரஸ் மீட் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. 🙁

This entry was posted in அப்பா, குழந்தை வளர்ப்பு, வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து and tagged , , , . Bookmark the permalink.

22 Responses to விடுபட்டவை 23 August 09

  1. ila says:

    கொழந்த தவழ ஆரம்பிக்கட்டும், உங்க டவுசர் அப்போ கழடும் பாருங்க. ரெண்டு வயசு ஆனா, இன்னும் சுத்தம். 2nd Naughtyசும்மாவா சொல்லி வெச்சாங்க. இதுதான் ஆரம்பமே.. பயமா இருக்கா.. கவலைப்படாதீங்க. பழகிரும். நாங்க எல்லாம் பழகிக்கல 🙂

  2. gulf-tamilan says:

    //கொஞ்ச நாட்களுக்கு ஏ.சி அறைகளை தவிர்த்து விட்டு, பொட்டல் வெளியில் எல்லோரும் பிரஸ் மீட் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது//

    :))))

  3. //அம்மா சாப்பிட உட்காரும் போது சரியாக ‘கக்கா’ போவதும், //

    தல

    மூளையில் அந்த புரோகிராம் எல்லாம் நாம் நாலு கால் பிராணியாக இருந்த பல மில்லியன் வருடங்களுக்கு முன்னரே வந்து விட்டது

    அம்மா சாப்பிட்டால் நமக்கு பால் கிடைக்கும் –> அதனால் நம் வயிற்றை காலியாக வைத்திருக்க வேண்டும் என்று தெளிவான சங்கிலி நிகழ்வுகள் அவை

    Cephalic Phase of Vagal Stimulation, Gastro Colic Reflex என்றெல்லாம் பயமுறுத்தும் பெயர்கள் இருக்கின்றன. அதெல்லாம் தேவையில்லை. குட்டிப்பையனின் மூளை சரியாக வேலை செய்கிறது என்று சந்தோஷம் / நிம்மதி அடைந்து கொள்ளுங்கள் 🙂 🙂 🙂

    //இரவு பத்துமணி வரை தூங்கிவிட்டு, இரவு முழுவதும் விழித்திருக்கும் படியும் யார் தான் சொல்லிக்கொடுக்கிறார்களோ தெரியவில்லை//

    இதை மாற்றுவது ஒன்றும் கஷ்டமில்லை. முயன்று பாருங்கள்

  4. இலங்கைப் பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்.

    அப்புறம் இந்த பிள்ளையார் திருவிழா… இந்த கொடுமையை முதல்ல மக்கள்ஸ் குறைச்சா நல்லாயிருக்கும். பிள்ளையார் மேல அப்படி என்ன பாசமோ தெரியல…

    //நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்..// ஐயோ தல… உங்க வீட்லயே இத்தனை போராட்டமா? எங்கள மாதிரி இளசுகள்லாம் என்னா பாடுபட போறோமோ தெரியலியே!!

    ‘கனிவமுதனு’க்கு என்னுடைய வாழ்த்துக்களை பதிந்துகொள்கிறேன். அவன் வளர்ந்து பெரியவனானதும் இதைப்படித்துப் பார்த்து தெரிந்துகொள்ளட்டும். 🙂

    இந்த தருணத்தில் சாகரன் அவர்களை நினைவு கூர்ந்தது இந்த இடுகைக்கு சிறப்பு.

    //கொழந்த தவழ ஆரம்பிக்கட்டும், உங்க டவுசர் அப்போ கழடும் பாருங்க.// 😀 மேலேயுள்ள பின்னூட்டத்திலிருந்து ரசித்த வார்த்தைகள்.

  5. மாப்பு,அதுக்குள்ளே அலுத்துக்கிட்டா எப்படி… ??!!

    இது ஆரம்பம்தான்.கனிவமுதனோட அதிரடி,அட்டகாசம்லாம் போகப்போக பாருங்க….

    குட்டித்தல யாரு ? சேட்டைக்காரபய மகன்லா.. !! :))

    ‘கனிவமுதன்’ அருமையான பெயர். வாழ்த்துக்கள்.

  6. கனிவமுதன் – அழகான தமிழ் பெயர் 🙂

  7. சின்னம்மணி says:

    கனிவமுதன் – பெயர் அமுதமாய் இருக்கிறது.

  8. கனிவமுதன் பெயர் அருமை.. பெற்றோருக்கு நல்ல தமிழ்பெயரைச் சூட்டியதற்கான பாராட்டுக்கள்.

  9. கனிவமுதன் மிக அருமையான பெயர்!!!!

    செல்லமா எப்படி கூப்பிடப் போறீங்க? கனிவு என்றா? அமுதன் என்றா? கனியா என்றா?

    இனி விடுபட்டவைகளில் கனியைப் பற்றி அதிகம் படிக்கலாமா????

    அது எதுக்கு பிரஸ்மீட்டை புல்வெளில நடத்தச் சொல்லிகிட்டு??? எப்புடியும் மொக்கை நுயூசை கொடுக்கப் போறானுங்க (உருப்புடியா ஒன்னும் செய்யப் போறதில்லை), பேசாம கொஞ்ச நாளைக்கு பிரஸ்மீட்டே நடத்தாதீங்கன்னு சொல்லுங்க!!!!

  10. பாலா,

    ‘கனிவமுதன்’ பேரு நல்லா இருக்கு. இவனுக்கே இப்படி அலுத்துகிட்டா எப்படி? அடுத்து ‘கனிவமுதா’ (கனிவு + அமுதா) வரப்போறாங்களே… அப்ப என்ன செய்வீங்க? 🙂

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

  11. —புதியதாக பிறந்த வாரிசோ, நெட்டி,நெட்டி அழுகிறான். என்ன செய்யமுடியும். —

    வெகு உண்மை 🙁

  12. ‘கனிவமுதன்’ பேரு நல்லா இருக்கு

  13. குசும்பன் says:

    //இரவு முழுவதும் விழித்திருக்கும் படியும் யார் தான் சொல்லிக்கொடுக்கிறார்களோ தெரியவில்லை. //

    வேறு யாரு உங்களோட பா.க.ச சிங்கங்கள் தான்:)

  14. குசும்பன் says:

    //கொஞ்ச நாட்களுக்கு ஏ.சி அறைகளை தவிர்த்து விட்டு, பொட்டல் வெளியில் எல்லோரும் பிரஸ் மீட் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது//

    தம்பி அமுதா இன்னும் கொஞ்சம் அப்பாவை நொங்கி நொங்கெடு செல்லம்:)

  15. உங்கள் வாழ்த்துகளும் மகிழ்ச்சிகளும் இன்னும் எங்களை ஊக்குவிக்கும்.
    நன்றி பாலபாரதி…

    கனிவமுதன் நல்ல பெயர்… அவன் தரும் அழகான அவஸ்தைகள் மகிழ்சியையே தருவது எழுத்துகளில் விளங்குகிறது…

    வளரவளர சந்தோசம்தான்

  16. நன்றி பாலபாரதி.. 🙂

    குழந்தை வளர்க்கும் சிக்கல் சிரமத்தில் தூக்கம் தொலைத்து இப்போது என் மகனுக்கு ஒன்றரை வயது ஆன பிறகு தூக்கப் பிரச்சினை இல்லை.. ஆனால் அவன் குழப்படியினால் வீட்டில் இருக்கும்போது வேறு வேலைகள் செய்ய முடியாது…

    உங்கள் தமிழ்ப் பெயர் போராட்டம் பாராட்டுக்குரியது..

  17. Kannan says:

    நல்ல அருமையான பதிவு

  18. பெயர் அருமையாக இருக்கிறது!! 🙂

    //குசும்பன் says:
    August 24, 2009 at 11:03 pm

    //இரவு முழுவதும் விழித்திருக்கும் படியும் யார் தான் சொல்லிக்கொடுக்கிறார்களோ தெரியவில்லை. //

    வேறு யாரு உங்களோட பா.க.ச சிங்கங்கள் தான்:)//

    :-)))

  19. கனிவமுதனுக்குக் கனிவுடன் வாழ்த்துக்கள்

    இராம.கி.

  20. அருமையான பெயர் தேர்வு பாலா பாய்…

  21. KUMMARV says:

    கனி அமுதன் ! டக்குன்னு சேந்தன் அமுதனை நியாபக படுத்தி விட்டான்!!!!!சேந்தன் அமுதன் மாதிரி தஞ்சையை மட்டும் ஆளாம தமிழ்நாட்டையே ஆள ஆசையா இருக்கு!!!!

    தல நெஞ்சுல கை வைச்சு சொல்லுங்க! மலர்வனம் செலக்ட் செஞ்ச பேர்தானே!!!!

    குழந்தைக்கு வாழ்த்துக்கள்!!!! ஆசிகள்!!!!! உங்களுக்கு கண்டனங்கள்! அம்மா சாப்பிட போகும் போது நீங்க தான் எல்லாம் செய்யனும்! இன்னும் புது மாப்பிள்ளைன்னு நினைப்பா!! நானெல்லாம் கழுவி கழுவியே கைரேகை தேஞ்சு போனவன் அய்யா!!!!!

  22. மதிப்பிற்குரிய பாலபாரதி அவர்களுக்கு,
    வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.