—
உறக்கத்தில்
கடிகார முட்கள்
போல
கட்டிலில் சுற்றி வந்தாலும்
பசியெடுக்கும் நடுசாமத்தில்
சரியாக அவன் அம்மாவை
அடையாளம் கண்டு எழுப்பி விடுகிறான்
பசியை உணர்ந்தவள் தாய் தான் என
எப்படித்தான் உணர்ந்துகொள்கின்றனவோ
குழந்தைகள்
—
இன்னுமா உன் மகன் பேசவில்லை
என்ற சுற்றத்தாரின் கேள்விக்கு
பயந்து
உயிரற்றவைகளையும், உயிருள்ளவைகளின்
பெயர்களையும் சொல்லிக்கொடுக்கிறேன்
தினம் அவனுக்கு.
சொற்களற்ற அவனது உலகத்தில்
பெயர்கள் அழிந்து
வெறும் சப்தங்களாக வெளியேறுகின்றன
அவனிடமிருந்து
—
தோற்றுப்போன முயல் கதையும்
தந்திரக்கார நரி கதையும்
பிடிப்பதில்லை மகனுக்கு
தொலைக்காட்சியின்
பொம்மைப்படங்களோடு
நொடிக்கொருதரம் மாறும்
வண்ணங்களையுமே விரும்புகிறான்
உணவருந்த வைக்கும்
அன்னபூரணியாகிவிட்டது
தொலைக்காட்சி பெட்டி
நான் கேட்டு வளர்ந்த கதைகள்
கேட்பாரின்றி
என்னோடு முடிந்துவிடப்போகிறது
—
வீட்டினுள் விளையாடிக்கொண்டிருக்கும்
சமயமானாலும்
வேலைக்குச்சென்று திரும்பும்
அம்மாவின் ஆட்டோ சத்தத்தை கேட்ட வினாடி
சரியாக அடையாளம் கண்டு
வாசலை ஒட்டி உள்ள ஜன்னலருகே ஓடுகின்றன
குழந்தைகள்
—
Super thala
Nandru
ஸ்பெ, ப்ரியன் நன்றி! 🙂
கடைசி கவிதை /நிகழ்வு # நெகிழ்ச்சி
கலக்கல் தல
Thala Super 🙂
பசியை உணர்ந்தவள் தாய் தான் //
🙂