ஏப்ரல் 2, 2014 அன்று ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப் படுகிறது. அதை முன்னிட்டு ஏப்ரல் 5, சனி அன்று சென்னையில் ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோரது ஒன்றுகூடல் ஒன்றை ஒருங்கிணைக்க இருக்கிறோம்.
இந்த ஒன்றுகூடலின் முடிவில் பெற்றோர்கள் இணைந்து இயங்க ஒர் கூட்டமைப்பை தொடங்க எண்ணியுள்ளோம். ஒத்த மனமுள்ள பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து தங்களை பலப்படுத்திக் கொள்ளவும், பொதுவான தேவைகளை முன்னிட்டு போராடவும் உதவும் ஒரு அமைப்பாக அது விளங்கும்.
நாள்: ஏப்ரல் 5, 2014. சனிக்கிழமை
இடம்: டிஃபென்ஸ் ஆஃபிசர்ஸ் காலனி இன்ஸ்டியூட், ஈகாட்டுத்தாங்கல், சென்னை
நேரம்: மாலை 3 மணி முதல் 5 மணி வரை
இந்த ஒன்றுகூடல் ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோருக்கானது என்பதால்.. அவர்களை மட்டும் அழைக்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு : 91766-13437 என்ற எண்ணிற்கு அழையுங்கள்.