பூரணம் -பெற்றோர் ஒன்றுகூடல்

பூரணம் அழைப்பிதழ்

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஈரோடு ஜெயபாரதி அம்மாவின் அழைப்பில் சித்தார்த்தா பள்ளிக்குச் சென்று சிறப்புக்குழந்தைகளின் பெற்றோரிடம் உரை நிகழ்த்தினேன்.

அக்கூட்டத்தில் பேசிய விஷயங்களில் ஒன்று சிறப்புத்தேவை உடைய பெற்றோர் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியதின் அவசியம் . அதன் தேவை குறித்தும் பேசிவிட்டுத் திரும்பினேன். அடுத்த சில மாதங்களிலேயே அங்கே பெற்றோரின் சங்கம் ஒன்று தொடங்கப்பட்ட து.

மாதம் ஒரு துறைசார் வல்லுநரை அழைத்துவந்து உரையாடவைப்பது என்று அவர்களின் செயல்பாடுகளின் தொடக்கமாக இருந்தது.

இதோ இப்போது மீண்டும் அதே பள்ளியில் பெற்றோரிடம் உரையாட அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆம்! இம்முறை நீங்கள் குடும்பத்துடன் வந்து உரையாடுங்கள். கனி பாட்டுப் பாடட்டும் என்று ஜெயபாரதி அம்மா அழைத்தபோது மறுக்கமுடியவில்லை.

எங்களைப் போலவே எங்கள் செல்வன் கனியின் வளர்ச்சியைக்கண்டு பூரிப்பவர் அவர். அழைப்பிதழில் கனியின் பெயரையும் போட்டுவிடுகிறோம் என்று அவர் சொன்னபோது எங்களால் மறுப்பேதும் சொல்லமுடியவில்லை.

வரும் டிசம்பர் 23ஆம் தேதி பூரணம் பெற்றோர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஈரோடு பயணமாகிறோம்.

நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். (அழைப்பிதழில் எண் உள்ளது)

நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் ஈரோட்டில் உள்ள சிறப்புத்தேவை உடைய குழந்தைகளின் பெற்றோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

~~~~

தொடர்புடைய சுட்டிகள்:

This entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 4 months old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.