Tag: தொடர்கதை

  • ஆற்றுப்படை

    1 யெஸ்.பாலபாரதியின் நாவலைப் படிக்கப்போகிறீர்கள். ‘முத்திரள் உருவமாக’இந்தக் கதையில் சிலர் சந்திக்கிறார்கள். அவர்கள்  ‘மாய உருவமாகவும்’இருக்கிறார்கள். இந்தச் சொற்களுக்கிடையே இருக்கும் வேறுபாடு, அவற்றின் பொருள் உங்களுக்குப் புரிகிறதா? 2 இது அறிவியல் புனைகதையா, மிகுபுனைவா? மேலே சொன்ன இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ‘எல்லாம் ஒண்ணுதானே, படிக்க சுவாரசியமாக இருந்தால் போதாதா?’ என்று கேட்பவர்கள், இந்த அளவில் இதை வாசிப்பதை நிறுத்திவிட்டு, கதைக்குள் போய்விடுங்கள். இங்கே அந்த இரு வகைகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டைப் பார்க்கப்போகிறோம். அறி(வியல்) புனைகதை…

  • மந்திரச் சந்திப்பு -21 (நிறைவுப் பகுதி)

    டெர்மித் தன்னுடைய புற்றின் அருகில் வந்ததும், கானமூர்த்தியையும், அருள்வளனையும் பார்த்தது. “எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. ரொம்ப தாங்க்ஸ் டெர்மித்!” என்று கை கூப்பி வணக்கம் தெரிவித்தான் வளன். “அடடா! நாம் இப்போது நண்பர்கள் வளன். நண்பர்களுக்கிடையே நன்றி எல்லாம் வேண்டாம்ப்பா..” என்றது டெர்மித். “நீ சொல்றது சரியா இருக்கலாம். பஸ்ஸுல காசு கொடுத்து டிக்கெட் வாங்கும்போது கூட கண்டக்டர்ட்ட நன்றி சொல்லணும்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. நீயோ பூமிக்கு அடியிலேயே ரவுண்ட் கூட்டிட்டு போயிருக்க.. நன்றி…

  • மந்திரச் சந்திப்பு -20

    மேலே செல்வதற்கான பாதைக்கு வெளியே ஏதோவொரு பறவை நின்று கிளறிக் கிளிறி கொத்தித் தின்று கொண்டிருந்தது. அதற்கு பயந்து, ஓரமாக பதுங்கிக் கொண்டனர் கானமூர்த்தியும் அருள்வளனும். பறவையின் கிளறல் நிற்க வெகுநேரம் ஆனது. அதுவரை இருவரும் அப்படியே ஒளிந்து கொண்டிருந்தனர். அது நின்றதும் வளன், வெளியே எட்டிப்பார்க்க முயன்றான். அவனை கானமூர்த்தி தடுத்தார். அவரே மெதுவாக வெளியே சென்று எட்டிப் பார்த்தார். எந்தப் பறவையையும் காணவில்லை. ஆபத்தில்லை என்பதை உணர்ந்தும் வளனை வெளியே வரச்சொன்னார். அவனும் தயங்கித்…

  • மந்திரச் சந்திப்பு -19

    “வளா.. வளா..” என்று குரல் கேட்டு கண்விழித்துப் பார்த்தான் அருள்வளன். ஒரு நிமிடம் தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் பார்த்தான். ஏதோ சிறைக்குள் இருப்பது போலத் தோன்றவே.. பதறிப்போய் சுற்றிலும் தேடினான். சற்று தொலைவில் டெர்மித்தும் கின்னரர் கானமூர்த்தியும் மரத்தின் வேர்களைப் பற்றியபடி அமர்ந்திருந்தனர். இவன் கண் விழித்ததைப் பார்த்ததும் ஒரே நேரத்தில், “அடடா, எழுந்துவிட்டாயா?” என்றனர். குழப்பத்துடன் அவர்களைப் பார்த்தான் வளன். “நெடு நேரமாக ஓடிய மழை நீரையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோமா.. அப்படியே நீ முதலில்…

  • மந்திரச் சந்திப்பு -18

    பூமிக்கு அடியில் தாவரங்களின் பாதுகாவலர்களையும், வண்ண வீரர்களையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் வளன். அவர்களில் வண்ண வீரர்கள் அனைவருமே சின்னச் சின்னதாக வண்ண பைகளை இடுப்பில் கட்டிருந்தனர். அவற்றில் பச்சை நிறம் அல்லது பழுப்பு நிறக் கலவைகள் இருந்தன. இவனே கறையான் அளவில் இருந்தான். அந்த வீரர்கள் இவனை விட, சின்னதாக இருந்தனர். தன் கண்களை அவனாலேயே நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். பழுப்பு வண்ணப் பையுடன் சென்றுகொண்டிருந்த ஒரு வண்ண வீரனை, கை நீட்டி நிறுத்தினான் வளன்.…