Tag: பிள்ளைத்தமிழ்

  • பிள்ளைத் தமிழ் 10

    ‘பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் (சோறு) கிடைக்காது’ என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. எவனொருவன் பொய் பேசுகிறானோ, அவன் உணவுகூடக் கிடைக்காமல் பசியால் துன்புறுவான் என்பதே இதன் பொருள். பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். (குறள் 292) என்பது வள்ளுவனின் வாக்கு! ஆகா, பொய் பேசுதல் என்பது இங்கே காலங்காலமாக இருந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம்தான். அதனால்தானோ என்னவோ, ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்களும், நம்மை ஆள்பவர்களும் பொய்யர்களாக இருந்தும், நாம் கண்டுகொள்ளாமல் இருந்துவிடப்…

  • பிள்ளைத்தமிழ் 9

    (உடல் பருமன் பாதிப்புகள்) அதிகாலைப்பொழுதில் நடை, மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டம் என்று ஒரு சிலர் சுறுசுறுப்பாக இருந்தாலும், நம்மில் பலருக்கும் இன்னும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் வந்து சேரவில்லை. விளைவு, உடலில் தேவையற்ற கொழுப்பு கூடுவதோடு, மன அழுத்தமும் அதிகரிக்கிறது. 40 வயதுக்குள்ளாகவே இதயநோய்ப் பிரச்னையில் சிக்கிக்கொண்ட பலரையும் பார்க்க முடிகிறது. 33 வயதிலே ‘ஸ்டெண்ட்’ வைத்தவர்களைக்கூட நான் அறிவேன். அதைவிடக் கொடுமை என்னவெனில், இன்றைய குழந்தைகளில் பலர், அதிக உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். நானெல்லாம் பள்ளியில்…

  • பிள்ளைத் தமிழ் 8

    (கற்றல் குறைபாட்டுப் பிரச்னைக்கான தீர்வுகள்) முந்தைய கட்டுரையில், கற்றல் குறைபாடு பற்றியும், அதன் வகைமைகளைப் பற்றியும் ஒரு அளவுக்கேனும் அறிந்திருப்பீர்கள். கற்றல் குறைபாடு ஒரு நோயல்ல; குறைபாடே என்பதை நான் மீண்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எனவே, இதற்கான சிகிச்சை என்பதும், மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது போன்றது அல்ல. முறையான பயிற்சியின் மூலம் இதனை சமாளிப்பதுதான் அவசியம். ஒவ்வொரு குழந்தைக்கும், இக்குறைபாட்டின் தன்மையும், தீவிரமும் வேறுபடும். எனவே, முறையான, விரிவான மதிப்பீடு அவசியம். யாரை அணுகுவது? சரி!…

  • பிள்ளைத் தமிழ் 7

    (கற்றல்குறைபாடு- தொடர்பாக) பள்ளி செல்லும் பிள்ளைகளில் 10 முதல் 15 சதவீதம் பேர், விதவிதமான கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இத்தகவலை, டிஸ்லெக்ஸியா அசோசியேஷன் ஆப் இந்தியா என்னும் அமைப்பு சொல்கிறது. இதுவொரு தோராயமான கணக்குதான் என்றாலும், என்னளவில் இது கண்டிப்பாக அதிகமாகவே இருக்கக்கூடும். ஏனெனில், நானே கற்றல் குறைபாடு உடையவன். நான் எந்த புள்ளிவிவரங்களுக்குள்ளும் சிக்காமல் வளர்ந்து வந்துவிட்டேன். இந்தக் கற்றல் குறைபாடு என்ற வார்த்தை, நிச்சயம் பலருக்கும் பரிச்சயமானதாகவும் அல்லது இல்லாமலும்…

  • பிள்ளைத்தமிழ் 6

    குழந்தை வளர்ப்பைப் பற்றி பேசும்போது, எல்லோருமே மதிப்பெண் முக்கியமில்லை என்று திகட்டத் திகட்ட சொன்னாலும்கூட, யதார்த்தத்தில் யாராலும் மதிப்பெண்களைப் பற்றி லட்சியம் செய்யாமல் இருந்துவிட முடிவதில்லை. நம் குழந்தைகள் நன்கு படிக்க, நாம் என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம். இரண்டு குழந்தைகள், மலையேறும் பயிற்சிக்காக, கற்கள் பதிக்கப்பட்ட சுவற்றில் ஏறிக்கொண்டிருந்தனர். இருவரின் பெற்றோரும், கீழே நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். முதல் குழந்தையின் பெற்றோர், ‘கீழ விழுந்துடாதே, கை வழுக்கிடப்போகுது, கால் சறுக்கிடப்போகுது, பாத்து ஏறு’ என்றெல்லாம் கத்திக்கொண்டிருக்க;…