Tag Archives: குழந்தை வளர்ப்பு

பூரணம் -பெற்றோர் ஒன்றுகூடல்

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஈரோடு ஜெயபாரதி அம்மாவின் அழைப்பில் சித்தார்த்தா பள்ளிக்குச் சென்று சிறப்புக்குழந்தைகளின் பெற்றோரிடம் உரை நிகழ்த்தினேன். அக்கூட்டத்தில் பேசிய விஷயங்களில் ஒன்று சிறப்புத்தேவை உடைய பெற்றோர் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியதின் அவசியம் . அதன் தேவை குறித்தும் பேசிவிட்டுத் திரும்பினேன். அடுத்த சில மாதங்களிலேயே அங்கே பெற்றோரின் சங்கம் ஒன்று தொடங்கப்பட்ட … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு | Tagged , , , , , , , , , | Leave a comment

ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள்- (ஜேக்கப் ராக்)

19 வயது ஜேக்கப் ராக், ஓர் ஆட்டிச நிலையாளர். இவரால் சிறு வயதில் பேச முடியாததால் அறிவுத்திறனில் குறைவானவர் என்றே மதிப்பிடப்பட்டார். அவரது குடும்பத்தினரின் தொடர் முயற்சிகளுக்கும் பயிற்சிகளுக்கும் பின்னர் ஐ பேடில் தட்டச்சு செய்து, தன் எண்ணங்களை வெளிப்படுத்தத் தொடங்கினார். எழுத்துப் பிழைகளோ இலக்கணப் பிழைகளோ இல்லாத கச்சிதமான வாக்கியங்களை ஜேக்கப் எழுதுவதைக் கண்டு … Continue reading

Posted in AUTISM - ஆட்டிசம், தன் முனைப்புக் குறைபாடு | Tagged , , , , , , , | 1 Comment

பிறர் ஏற்படுத்தும் காயங்களின் வலி!

நூல்: கையறுநதிஆசிரியர்: வறீதையா கான்ஸ்தந்தின் வெளியீடு : கடல்வெளி பதிப்பகம், தொடர்புக்கு: 24332924 விலை : ரூ 220/- கையறுநதி: நாவல் மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு தந்தையின் தன் வரலாற்று பக்கங்கள் எப்போதும் படிப்பது போல இந்த நூலையும் என்னால் ஒரே மூச்சில் படித்துமுடித்து முடியவில்லை. சில இடங்களில் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானேன். சில … Continue reading

Posted in அனுபவம், மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , | Leave a comment

மன நிறைவு கொடுத்த ஈரோடு பயணம்

ஓர் உரையாடல் என்னென்ன மாற்றங்களைச் செய்யும் என்பதை அறிந்தவன் நான். என்னுள் ஏற்பட்ட பல மாற்றங்களும் உரையாடல் வழியே நிகழ்ந்தவைதான். உரையாடல்களின் பலம் அறிந்ததால் தான் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் கலந்துரையாடல் அவசியம் என்று முடிவுசெய்து கொண்டேன். இதன் பொருட்டே, 2014ஆம் ஆண்டில் ஆட்டிச நிலைக்குழந்தைகளில் முதல் பெற்றோர் ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்தேன். மிகச்சிறப்பாக நடந்த … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

நாற்றங்காலை வலுப்படுத்துவோம்!

நாற்றங்காலை வலுப்படுத்துவோம்! -யெஸ்.பாலபாரதி தமிழ் இலக்கிய உலகில் பல குழுக்கள் உண்டு. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர், ஆசான் எல்லாமும் உண்டு.  அவர்களில் பலரும் ஒரே குரலில் சொல்லுவது, ’தமிழனுக்கு இலக்கியம் படிக்கிற வழக்கமே இல்லை. தமிழ்நாட்டில் இலக்கிய புத்தகமே விற்க முடியாது. அல்லது இலக்கிய புத்தகங்கள் விற்பனையே ஆக மாட்டேங்குது. எங்கள மதிக்கவே மாட்டேங்கிறாங்க’ … Continue reading

Posted in கட்டுரை, சிறுவர் இலக்கியம் | Tagged , , , , , , | 1 Comment